Jump to content

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!


Recommended Posts

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்!

 

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒரு பூகோள உலகம்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா கோரிக்கை விடுத்த போது, அதற்கு பதிலளிக்காமல் விட்டது இந்தியாவின் மிகப் பெரிய தவறாகும். இதன் விளைவாகத் தான் சீனர்கள் அங்கு வந்து அபிவிருத்தியைச் செய்தார்கள்.

இந்தியாவில் 83 வீதமான வர்த்தகம் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்தியா பதில் கொடுக்கத் தவறியது ஆச்சரியமானது.

சபஹார் துறைமுகத்தின் அபிவிருத்திவிடயத்தில் இந்தியா பக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதமும் கூட புத்திசாலித்தனமானது அல்ல.

பத்தாண்டுகளுக்கு முந்திய பாதையில் தான் இந்தியா இன்னமும் செய்து கொண்டிருக்கிறது, ஆனால் உலகம் நிறையவே மாறி விட்டது. வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://thuliyam.com/?p=74153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பென்ஷன்  எடுத்த பின்  தான்... சரி பிழையை பிரித்துப் பார்க்க தெரிகின்றது.
ஈழத் தமிழர் விடயத்தில்... இவர் செய்த துரோகம்  தெரிய... இன்னும் நாள் எடுக்கும் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவுக்கு அப்ப ஆலோசனை வழங்கினது இவர் தான். இவர் தான் விட்ட பிழையை.. எதுக்கு ஹிந்தியாவின் பிழை என்றார்...??!  தன்ர படுமுட்டாள் தனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தானே.

ஹிந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் தவறாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின்னிருந்து. 

ஈழத்தமிழர் விவகாரத்தில்.. ஹிந்தியாவுக்கு 1987 இல் கிடைத்த நல்ல வாய்ப்பை.. ராஜீவின் மொக்குத்தனத்தால்.. கெடுத்துக் கொண்டார்கள். இன்று வரை அந்த மொக்குத்தனம்... மோசமாகப் போய்க் கொண்டிருக்கே தவிர.. அதனை மாற்றி... ஈழ்த்தமிழருடனான உண்மையான நட்புறவை வளர்த்துக்கொள்ள ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவு பத்தல்ல

சொறீலங்காவை இவர்களுக்கு கையாளும் தந்திரம் தெரியாது. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின் சொறீலங்கா பற்றிய இவர்களின் கொள்கை வகுப்பு எல்லாமே படுமோசம். அதன் விளைவு.. சீனாவின் ஆதிக்கம்.. பாகிஸ்தானின் ஆதிக்கம்.. சவுதியின் ஆதிக்கம்.. அமெரிக்காவின் ஆதிக்கம்.. ரஷ்சிய ஆதிக்கம் என்று எல்லா ஆதிக்கங்களையும் சொறீலங்கா.. சிங்கள ஆளும் வர்க்கம் மடிக்க வைச்சு.. ஹிந்தியாவுக்கு சவால் விடுவது தான்.

ஹிந்தியாவின் நட்பு சக்தியாக இருந்த ஈழத்தமிழரை பகைச் சக்தியாக்கிய.. ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களும்.. றோ புலனாய்வுப் பிரிவும் தான்..இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. ஹிந்தியாவின் வெளிவிவகாரத் தோல்விக்கு முக்கிய காரணம். :rolleyes:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவுக்கு அப்ப ஆலோசனை வழங்கினது இவர் தான். இவர் தான் விட்ட பிழையை.. எதுக்கு ஹிந்தியாவின் பிழை என்றார்...??!  தன்ர படுமுட்டாள் தனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தானே.

ஹிந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் தவறாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின்னிருந்து. 

ஈழத்தமிழர் விவகாரத்தில்.. ஹிந்தியாவுக்கு 1987 இல் கிடைத்த நல்ல வாய்ப்பை.. ராஜீவின் மொக்குத்தனத்தால்.. கெடுத்துக் கொண்டார்கள். இன்று வரை அந்த மொக்குத்தனம்... மோசமாகப் போய்க் கொண்டிருக்கே தவிர.. அதனை மாற்றி... ஈழ்த்தமிழருடனான உண்மையான நட்புறவை வளர்த்துக்கொள்ள ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவு பத்தல்ல

சொறீலங்காவை இவர்களுக்கு கையாளும் தந்திரம் தெரியாது. இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்குப் பின் சொறீலங்கா பற்றிய இவர்களின் கொள்கை வகுப்பு எல்லாமே படுமோசம். அதன் விளைவு.. சீனாவின் ஆதிக்கம்.. பாகிஸ்தானின் ஆதிக்கம்.. சவுதியின் ஆதிக்கம்.. அமெரிக்காவின் ஆதிக்கம்.. ரஷ்சிய ஆதிக்கம் என்று எல்லா ஆதிக்கங்களையும் சொறீலங்கா.. சிங்கள ஆளும் வர்க்கம் மடிக்க வைச்சு.. ஹிந்தியாவுக்கு சவால் விடுவது தான்.

ஹிந்தியாவின் நட்பு சக்தியாக இருந்த ஈழத்தமிழரை பகைச் சக்தியாக்கிய.. ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களும்.. றோ புலனாய்வுப் பிரிவும் தான்..இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்.. ஹியாவின் வெளிவிகாரத் தோல்விக்கு முக்கிய காரணம். :rolleyes:

முழு இலங்கையும் இப்பொழுது சீனாவின் ஆதிக்கத்துக்கும், கிழக்கு கடற்கரை மாவட்டம் பாக்கிஸ்த்தான் கையிலும் சென்ற பின் தான் இவருக்கு தரிசனம் வருகுது.  

ஆனாலும் இது நன்மைக்கே, ஏன் என்றால் இந்தியாவின்  பாதுகாப்புக்கு பாக்கிஸ்தான் வெளியேற வேண்டும், அதுக்கு ஒரே வழி  கிழக்கு மாகாணத்தை மீண்டும் தமிழர் கைக்கு கொண்டு வருவது தான்.

RSS அமைப்பு தான் இப்பொழுது இடம் பெறும் போராட்டங்களுக்கு எல்லாம் காரணம் என அதாவுல்லாவே தெரிவித்தது குறிப்பிட தக்கது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எல்லாருக்கும் பென்ஷன்  எடுத்த பின்  தான்... சரி பிழையை பிரித்துப் பார்க்க தெரிகின்றது.
ஈழத் தமிழர் விடயத்தில்... இவர் செய்த துரோகம்  தெரிய... இன்னும் நாள் எடுக்கும் போல் உள்ளது.

எம்.கே.நாரயணனும், சிவசங்கர மேனனும் ஒரே குட்டையில் ஊரின மட்டைகள், அதாவது ஒரே ஊர்க்காரகள்(ஒட்டப்பாலம்)..

தமிழகத்தில் படித்த முன்னவருக்கு பாதணி பூஜை நடந்து அமைதியாகிவிட்டார்,

பின்னவருக்கு இன்னமும் நடக்கவில்லை.. ஆனால் இருவரும் இதுவரை கிந்தியர்களை தவறாக வழிநடத்தியதாக ஒத்துக்கொள்ளவில்லை.

Mallus will never change / realize their misdeeds.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.