Jump to content

சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்!


Recommended Posts

சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்!

 

பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த உணவுகளை சமைத்து வழங்க கைதிகளிலே உதவியாளர்கள், சமையலறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளுடன் அவர் வலம் வந்ததை, டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார்.

விஸ்வரூபம்

இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் அறிக்கைஅளித்தார். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய் குமார், பெங்களூரு மாநர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூரு சிறை கண்காணிப்பாளர் ஆனந்த ரெட்டி ஆகியோர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், முதற்கட்ட விசாரணை அறிக்கையை, நாளை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், சசிகலாவின் அக்கா மகன், தினகரனின் நண்பரான மல்லிகார்ஜுனாவிடம், இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், டில்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கர்நாடகா முன்னாள் அமைச்சரும், மாநில காங்., தலைவருமான, பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது, விசாரணையில் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து, பிரகாஷிடம் டில்லியில் விசாரணை நடந்தது. அப்போது, சசிகலாவுக்கு, சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் கைமாறிய அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீசாரின் அடுத்த கட்ட விசாரணைகளில், சசிகலாவுக்காக, ஹவாலா பரிவர்த்தனை நடந்தது உறுதியானது.ஹவாலா முறையில் கைமாறிய பணம், சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பரப்பன அக்ரஹாரா சிறையில், உயர்மட்ட அதிகாரிகள் முதல், கீழ் மட்ட காவலர்கள் வரை, தாராளமாக பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 

 

தகவல் உறுதி


சிறையில் சசிகலாவை, பிரகாஷ் சந்தித்து பேசியதும், விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபாவும், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
சசி மீதான புதிய குற்றச்சாட்டுகள், விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக, சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

 

சிறப்பு வசதிகள் ரத்து


பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் அளிக்கக்கூடாது என்று, சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., மேகரிக், சிறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை, நேற்று பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகள்:
* கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை, 10 நிமிடம் மட்டுமே சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும்
* சிறைக்குள், கைதிகளுக்கு கிடைத்து வந்த, பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானம், மொபைல் போன் போன்றவை, இனிமேல் கிடைக்காத வகையில், சோதனைகளை பலப்படுத்த வேண்டும்
* சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த, வீட்டு உணவுக்கு தடை விதிக்கப்படுகிறது
* போலீசார் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்
* கர்நாடகாவின் அனைத்து சிறைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், 'மொபைல் போன் ஜாமர்'கள் சீரமைக்கப்பட வேண்டும்
* முறைகேடுகள் நடக்க உதவியாக இருந்த அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்.
இவ்வாறு அவர்உத்தரவிட்டுள்ளார்.

சசி அறையில் கட்டில், மெத்தை, எல்.இ.டி., 'டிவி'

டி.ஐ.ஜி., ரூபா, நமது நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:


சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து, உங்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது?
சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக பதவியேற்ற பின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆய்வுக்கு சென்றேன். அப்போது, அங்கிருந்த கைதிகளில் சிலரும், ஊழியர்கள் சிலரும், படங்கள், வீடியோக்களுடன், என்னிடம் புகார் கூறினர். சிறையில் நடக்கும், பல முறைகேடுகளை அவர்கள் தெரிவித்தனர்.

சசிகலாவை நேரில் சந்தித்தீர்களா?

ஆம்; சந்தித்து பேசினேன். இரண்டு கேள்விகள் கேட்டேன். கன்னடம் தெரியுமா என்ற கேள்விக்கு, கற்று வருவதாகவும், நன்றாகஉள்ளீர்களா என கேட்டதற்கு, ஆம் என்றும்
பதிலளித்தார்.

சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்துஅறைகளை நேரில் பார்த்தீர்களா?

பார்த்தேன். ஒரு அறையில், சசிகலா மற்றும் இளவரசியின் உடைகள்; மற்றொரு அறையில், சமையல் பாத்திரங்கள், படுக்கை மற்றும்மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. 150 அடி நீளமுள்ள வராண்டாவும், அப்பகுதியிலுள்ள ஐந்து அறைகளும், அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.
அந்த இடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்ததையும் கண்டுபிடித்தேன்.

சாதாரணமாக, தண்டனை கைதிகள், சிறையில் வழங்கும் படுக்கை, சீருடையை பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒரே அறையில், இரண்டு மரக்கட்டில்கள், மெத்தை, தலையணைகள் இருந்தன.

நீங்கள் பார்த்த போது, சசிகலா என்ன உடையில் இருந்தார்?

நைட்டியில் இருந்தார். அவர் பயன்படுத்தியசுடிதார், சேலை உள்ளிட்ட உடைகளும்
அங்கிருந்தன.

சசிகலா அறையில், 'டிவி' இருந்ததா?

ஆம்; சாதாரணமாக, 30 முதல், 40 கைதிகளுக்கு, ஒரு, 'டிவி' வழங்கப்பட்டிருக்கும். ஆனால், சசிகலா இருந்த தனி அறையில், எல்.இ.டி., 'டிவி' இருந்தது.

சசிகலாவின் பார்வையாளர்கள், அவரை எந்த அறையில் சந்தித்தனர்?

சிறை வளாகத்திலுள்ள முதல் மாடியில்,அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தஅறையில் சந்தித்துள்ளனர். அதிகாரிகளுக்குபோடப்பட்டிருக்கும் நாற்காலிகளை அவர்கள் பயன்படுத்தினர்.
கைதிகள், தங்கள் பார்வையாளரை சந்திக்க வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எண், 7ல், ஒரு நாள் கூட, சசிகலா தொடர்பான எந்த காட்சியும் பதிவாகவில்லை.
சிறையில் மொபைல் தொடர்புகளை செயலிழக்க வைக்கும், 'ஜாமர்' கருவிகள் உள்ளனவா?
இருக்கின்றன; ஆனால், சிறையில் நான் ஆய்வுக்கு சென்ற போது, ஜாமர் இயங்கவில்லை என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்று வந்தாரா?

அப்படி எதுவுமில்லை.

லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டால், சசிகலாவுக்குஎன்ன தண்டனை கிடைக்கும்?

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். சிறைத்துறையில் நான்,
20 நாட்கள் தான் பொறுப்பு வகித்தேன்.எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1817715

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.