Jump to content

சர்வதேச அழுத்தத்தை தமிழ் தலைமை பயன்படுத்துமா...?


Recommended Posts

சர்­வ­தேச அழுத்­தத்தை தமிழ் தலைமை பயன்­ப­டுத்­துமா...?

 

இலங்கை தற்­பொ­ழுது இரா­ஜ­தந்­தி­ரி­களின் வரு­கையால் திக்­கு­முக்­காடிப் போயி­ருக்­கின்­றது. ஐ.நா. மனி­த­வு­ரிமை ஆணை­ய­கத்தின் விசேட அறிக்­கை­யாளர், ஐ.நா. அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர், அவுஸ்தி­ரே­லிய நாட்டின் வெளி­யு­றவு அமைச்சர், சிங்­கப்பூர் வெளி­யு­றவு அமைச்சர் என்ற பட்­டி­யலில் சுவிஸ் நாட்டின் தூது­வரும் இணைந்­துள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்தை அல்­லது ரணில் –மைத்­திரி கூட்­ட­ர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் இவர்­க­ளு­­டைய பங்­க­ளிப்பும் குறிப்­பி­டத்­தக்க வகையில் இருந்­த­தென்­பதை அனை­வரும் அறிவோம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனி­வு­ரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்டும் என்­ப­திலும், அதற்கு தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரை இணங்கச் செய்­வ­திலும் அவர்கள் வெற்றி கண்­டி­ருந்­தனர். 

இலங்கை அர­சாங்கம் இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­து­வத்தை பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு சர்­வ­தேச சமூ­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு அல்­லது அனு­மதி வழங்­கி­ய­மை­யா­லேயே இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்டு அர­சாங்­கத்தின் மீது அழுத்­தங்­களைக் குறைத்து ஒரு நெகிழ்வுப் போக்கை சர்­வ­தேச சமூகம் கடைப்­பி­டித்து வரு­கி­றது என்ற விமர்­சனம் பத்தி எழுத்­தா­ளர்கள் முதல் அர­சியல் ஆய்­வா­ளர்கள் சக­ல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒடுக்­கப்­பட்ட தேசிய இன­மான தமிழ் தேசிய இனம் தனது கோரிக்­கை­களை முன்­வைத்து மக்­களை அணி­தி­ரட்டி போரா­டாத வகையில் எந்­த­வொரு நாடும் அந்த தேசிய இனத்தின் நலன்­களின் மீது பெரி­தாக அக்­கறை செலுத்­தாது என்றும் அந்தப் பிரச்­சி­னையை தனது நலன்­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்திக் கொள்ளும் என்றும் பல தரப்­பி­னராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இந்த விமர்­ச­னங்கள் சென்­ற­டைந்­த­த­னாலோ என்­னவோ இன்று பல தரப்­பி­னரும் இலங்­கைக்கு விஜ­யங்­களை மேற்­கொள்­கின்­றனர். அத்­துடன் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கருத்­துக்­க­ளையும் வெளி­யி­டு­கின்­றனர்.

தமிழ் தரப்பைப் பொறுத்­த­வ­ரையில் சர்­வ­தேச சமூ­கத்தை பகைத்துக் கொள்ள முடி­யாத ஒரு நிலை­யிலும் இரு பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றினால் எதை­யா­வது சாதித்து விடலாம் என்ற நிலை­யிலும்  எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் ஆட்சி மாற்­றத்­திற்கு ஒத்­து­ழைத்­தது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாகும். அதன் ஊடாக வெகு விரைவில் ஒரு அர­சியல் தீர்வு கிடைக்கும். அது நாம் வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெற்­றி­யடைச் செய்யும் என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் தெரி­வித்­த­துடன், 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு கிடைத்து விடும் என்ற நம்­பிக்­கை­யையும் ஊட்­டி­யி­ருந்தார். பின்னர் அது தன்­னு­டைய கணிப்­பீடு என்று நியா­யப்­ப­டுத்­தினார். இந்த ஆண்டின் தொடக்­கத்தில் அர­சியல் யாப்பு பணிகள் யாவும் சிறப்­பாக நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் இந்த ஆண்டு இறு­திக்குள் தீர்வு எட்­டப்­பட்டு விடும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும், இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே நகரும் சாத்­தி­யமே அதிகம் உள்­ளது. 

காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­ல­கத்­திற்கு எத்­த­கைய முடிவும் மேற்­கொள்ள அதி­காரம் இல்­லாத நிலையில் அதற்­கான ஒப்­பு­தலை ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ளார். அத்­துடன் அது ஏதோ சமா­தா­னத்தை நிலை­நாட்டக் கூடிய விதத்தில் செயற்­படும் என்­ப­தா­கவும் ஒரு மாயைத் தோற்­றமும் அர­சாங்­கத்தால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அர­சியல் கைதிகள் விவ­காரம் முதல் மனி­த­வு­ரி­மைகள் ஈறாக ஐ.நா.வின் விசேட பிர­தி­நி­திகள் குழு தெரி­வித்­துள்ள கருத்­துக்­களை அவ­தா­னிக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இன்னும் கொஞ்சம் காத்­தி­ர­மாக செயற்­பட்­டி­ருக்­க­லாமோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது. வழி­ந­டத்தல் குழு அர­சியல் யாப்பு தொடர்பில் 60 இற்கும் மேலான அமர்­வு­களை நடத்­தி­யி­ருக்­கி­றது. இந்த அமர்­வு­களில் தமிழ் மக்­களின் மீதும் பாரிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை. இதை அவ­தா­னிக்­கின்ற பொழுது இருக்­கின்ற அர­சியல் யாப்பில்  பாரிய மாற்­றங்கள் செய்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை.  அனைத்து அர­சியல் தலை­மை­க­ளி­னதும் எண்­ணமும் பல்­வேறு தரப்­பி­னராலும் வலி­யு­றுத்­தப்­படும் ஒரு தேர்­த­லுக்கு முகம் கொடுப்­பது எப்­படி என்­ப­தி­லேயே குவிந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஆனால், எந்­த­வொரு கட்­சியும் தற்­போ­தைய சூழலில் தேர்­த­லுக்கு முகம் கொடுக்க தயா­ரில்லை என்­ப­தையும் அறிய முடி­கி­றது. 

எதை­யா­வது செய்து தேர்­தல்­களை ஒத்திப் போட வேண்டும் என்­ப­திலும் அது அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி கொடுத்து விடக் கூடாது என்­ப­திலும் பிர­தான கட்­சிகள் அனைத்தும் ஒரே நிலையில் உள்­ளன. இதன் ­கா­ர­ண­மா­கவே அர­சியல் யாப்பை பௌத்த பிக்­குகள் விரும்­ப­வில்லை என்றும், அர­சியல் நிர்­ணய சபையில் இருந்து விமல் ­வீ­ர­வன்ச தரப்­பினர் வெளி­யே­று­கின்ற அறி­விப்­பையும் பார்க்க வேண்­டி­யுள்­ளது. தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையைப் பொறுத்­த­வ­ரையில் முத­ல­மைச்­சரின் தனிப்­பட்ட செல்­வாக்கை குறைத்து அதன் மூலம் ஒரு மாற்றுத் தலை­மைக்­கான அவ­சர நகர்­வு­களை தடுத்து நிறுத்தி தேர்­த­லுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான ஆயத்­தங்­களும் நடை­பெ­று­கின்­றன. கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு அழுத்தம் கொடுத்து வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. ஈ.பி.­ஆர்­.எல்.எப். தொடக்­கத்தில் இருந்தே தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னதும், தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பு தலை­வ­ரி­னதும் தன்­னிச்­சை­யான முடி­வு­களை விமர்­சித்து வந்­தி­ருக்­கின்­றது. புளொட் அமைப்பும் தமி­ழ­ரசுக் கட்சி தனது மேலாண்­மையை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக தவ­றுக்கு மேல் தவறு செய்து வரு­வ­தாக குற்றம் சுமத்­தி­யுள்ளது. ரெலோ தமி­ழ­ரசுக் கட்­சிக்கும், தங்­க­ளுக்கும் இடையில் ஒரு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்று அதில் எட்­டப்­படும் முடி­வுகள் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுவில் விவா­திக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளது. இது­வரை காலமும் அங்­கத்­துவ கட்­சிகள் எதுவும் தமி­ழ­ரசுக் கட்­சி­யிடம் தனிப்­பட்ட ரீதியில் இரு கட்­சி­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரி­ய­தில்லை. மாறி­வந்த அர­சியல் சூழல் தொடர்பில் விவா­திப்­ப­தற்கு கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தை கூட்ட வேண்டும் என்றே அங்­கத்­துவ கட்­சி­களில் ஒன்று கோரி வந்­தது. புளொட் எத்­த­கைய கோரிக்­கை­யையும் முன்­வைக்­க­வில்லை. 

இந்த நிலையில் தற்­போது கூட்­ட­மைப்பில் ஏற்­பட்டு இருக்கும் குழப்­ப­க­ர­மான நிலை­யா­னது அனை­வ­ரையும் கவலை கொள்ளச் செய்­துள்­ளது. கூட்­ட­மைப்பின் இந்த நிலைக்கு தமி­ழ­ரசுக் கட்­சியே காரணம் என்­ப­தா­கவும் பங்­காளிக் கட்­சி­களின் கூற்றில் இருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. நாளுக்கு நாள் தென்­ப­குதி அர­சியல் சூழலில் ஏற்­ப­டு­கின்ற பர­ப­ரப்­பான நிலையில் தமிழ் தரப்பு ஐக்­கி­யத்­துடன் செயற்­பட்டால் ஒரு வலி­மை­யான அழுத்­தத்தை அர­சாங்­கத்­திற்கு கொடுத்து குறைந்த பட்சம் சில வாக்­கு­று­தி­களைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அறிகுறியாக சில நாளாந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்தை கோர முடியும். தங்கள் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்முகமாக சர்வதேச சமூகம் நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் இந்த சூழலையும், அதன் காரணமாக அரசாங்கத்திற்குள் எழுந்திருக்கக் கூடிய பிரச்சினைகளையும் கையாளக் கூடிய ஒரு சக்தியாக தமிழ் தலைமை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழ் அரசியல் தரப்பில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து எந்தவொரு தரப்பும் தனது மேதாவித்தனத்திற்கு இடமளிக்காமல் தமிழ் மக்களின் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணமிது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா...?

–ருத்­திரன்-–

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.