Jump to content

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு


Recommended Posts

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

 
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு
 

நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

http://uthayandaily.com/story/13182.html

Link to comment
Share on other sites

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: மகசீன் மீட்பு:-

IMG_8742-1024x768.jpg

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் இலங்கை நேரம் இன்று பின் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

 
யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
 
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில் சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.
 
மகசீன் மீட்பு. 
 
அதேவேளை துப்பாக்கிதாரி வீழ்த்தி விட்டு சென்ற கைத்துப்பாக்கியின் மகசீன் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில்  தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டு உள்ளது.
 
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இருந்து குறித்த துப்பாக்கியின் வெற்று மகசீன் மீட்கபட்டு உள்ளது.
 
IMG_8735-664x1024.jpg
 
IMG_8742-1024x768.jpg
 
 
 
Link to comment
Share on other sites

17 ஆண்டுகள் நம்பிக்கைக்குரியவராகக் கடமையாற்றிய இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு!

17 ஆண்டுகள் நம்பிக்கைக்குரியவராகக் கடமையாற்றிய இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு!

 

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 வருடங்களாக மெய்ப் பாதுகாவலராகக் கடமையாற்றிய மெய்ப்பாதுகாவலர் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் பலத்த காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்துக்கு நல்லூர் பின்வீதியில் மர்மநபர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலின்போது நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்ததுடன் ஒருவர் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரியை தீவகப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

http://thuliyam.com/?p=74241

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 ஆண்டுகள் மெய்ப் பாதுகாவலராக இருந்து, 
நேற்று கடமை நேரத்தில்... துப்பாக்கி  சூ ட்டில்  பலியாகியமை மிகவும்   கவலையான விடயம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதே நேரம்  தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி கைது செய்யப் பட்டிருப்பது, 
பல உண்மைகளை வெளியே கொண்டு வர உதவும்.

Link to comment
Share on other sites

இளஞ்செழியனுடன் 17 வருடங்கள் பயணித்த மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

 
இளஞ்செழியனுடன் 17 வருடங்கள் பயணித்த மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான பொலிஸ் சார்­ஜன்ட் ஹேமச்­சந்­திர (வயது-51) நள்ளிரவு உயிரிழந்தார்.

இவ­ரது பிஸ்­ட­லைப் பறித்தே சிவி­லி­யன் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யி­ருந்­தார். வலது வயிற்­றுப் பகு­தி­யால் உட்­பு­குந்த துப்­பாக்­கிச் சன்­னம் இடது வயிற்­றுப் பக்­கத்­தால் வெளி­யே­றி­யுள்­ளது. இத­னால் நுரை­யீ­ர­லில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குருதிக் கசிவு ஏற்­பட்­டுள்­ளது. அவருக்கு உடனடியாகவே நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் குழாமின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அதிக குருதிப் போக்குக் காரணமாக நள்ளிரவு 12.20 மணியளவில் ஹேமச்­சந்­திர உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

பொலிஸ் சார்­ஜன்ட் ஹேம­சந்­திரஇ நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு 17 வரு­டங்­க­ளாக மெய்ப்­பா­து­கா­வ­ல­ரா­கப் பணி­யாற்றியுள்ளார்.

http://uthayandaily.com/story/13188.html

Link to comment
Share on other sites

உயிரிழந்த மெய்பாதுகாவலருக்கு எஸ்.ஐயாக பதவி உயர்வு

 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர, உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி இருந்தார்.

மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே மேல் நீதிமன்ற நீதிபதி பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

http://uthayandaily.com/story/13223.html

Link to comment
Share on other sites

மெய்பாதுகாவலரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர்
 

 

நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

“பணியிலிருக்கும் போது, சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை சோகத்துக்குரிய விடயமே. இந்தக் கடினமான நேரத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மெய்பாதுகாவலரின்-குடும்பத்துக்கு-இரங்கல்-தெரிவித்தார்-பிரதமர்/175-201139

Link to comment
Share on other sites

உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு அஞ்சலி

 
உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு அஞ்சலி
 

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதரின் உடலுக்கு யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://uthayandaily.com/story/13295.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

மெய்பாதுகாவலரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றியும் உயிரை காக்க முடியவில்லை. – பணிப்பாளர் வருத்தம்

 

நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 
நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
 
அது தொடர்பில் பணிப்பாளர் தெரிவிக்கையில் ,
 
யாழ்.போதன வைத்திய சாலைக்கு மாலை 5.25 மணியளவில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
அதன் போது அவரது வயிற்றுபகுதியில் இருந்து பெருமளவான இரத்தம் வெளியேறி இருந்தது. சுமார் 5 லீட்டர் இரத்தம் அவருடைய உடலில் இருந்து வெளியேறி இருந்தது.
 
உடனடியாக அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றப்பட்டு அவருடைய உயிரை காப்பாற்ற மூன்று மணி நேரம் சத்திர சிகிச்சை நிபுணர்கள் போராடினார்கள் அவருக்கு ஈரல் , குடல் பகுதி மற்றும் கீழ் பெரும் நாளங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது கீழ் பெரு நாளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அதிகளவில் இரத்த பெருக்கு ஏற்பட்டது.
 
சத்திர சிகிச்சையின் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வைத்து மூன்று மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12.20 மணிக்கு உயிரிழந்தார். என்பதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
 
உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரியும் தனது அறிக்கையில் அதிகளவான இரத்த பெருக்கினால் தான் மரணம் சம்பவித்தது என குறிப்பிட்டு உள்ளார்.
 
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் இன்று காலை வைத்திய சிகிச்சையின் பின்னர் வைத்திய சாலையை விட்டு வெளியேறியுள்ளார். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/33881

Link to comment
Share on other sites

யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலி
 

image_14a1f2df50.jpgimage_df81b1cc16.jpgimage_93ad05feaf.jpgimage_a11b9cd344.jpgimage_747938a7ca.jpgimage_5eb312737f.jpgimage_0275067a39.jpg

எஸ்.நிதர்ஷன்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்.

அஞ்சலியின் பின்னர் ஹேமசந்திரவின் உடலை உறவினர்கள் அவரது சொந்த இடமான சிலாபத்துக்கு எடுத்துச்சென்றனர்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/யாழ்-பொலிஸ்-நிலையத்தில்-அஞ்சலி/46-201169

Link to comment
Share on other sites

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் அஞ்சலிக்காக உடல் – நெகிழ வைக்கும் காட்சிகள்

 

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் அவரது சொந்த இடமான சிலாபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் மற்றும் வடமாகாண நீதிபதிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான 51 வயதுடைய ஹேமரத்ன உயிரிழந்தார்.

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிப்பதற்காக வடமாகாண நீதிபதிகள் சிலாபத்துக்குச் சென்றிருந்தனர். தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.

http://uthayandaily.com/story/13394.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.