Jump to content

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்


Recommended Posts

சி.எஸ்.கே ஜெர்ஸியுடன் சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல தோனி!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தோனி
 

குறிப்பாக தோனி சி.எஸ்.கே ஜெர்ஸியில் களமிறங்கினார். அவரது ஜெர்ஸியில் 'தல' என்று எழுதப்பட்டிருந்ததது. தோனி களமிறங்கியதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. 

தோனி

 


நடப்புத் தொடரில்  தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. இரு தகுதிச் சுற்று ஆட்டங்கள், ஒரு எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் நத்தத்தில் 25-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த மைதானத்தில் 11 ஆட்டங்களும் நெல்லை இந்தியா சிமென்ட் வளாக மைதானத்தில் 12 ஆட்டங்களும் மீதி போட்டிகள் சென்னையிலும் நடைபெறுகின்றன. இறுதியாட்டம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியார்ஸ், திண்டுக்கல் ட்ராகன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

http://www.vikatan.com/news/sports/96502-dhoni-weared-csk-jersy-in-tnpl-opening-ceremony.html

Link to comment
Share on other sites

டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி

 

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

 
 
டி.என்.பி.எல்.:  திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி
 
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
 
டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 48 பந்தில் 69 ரன்களும், கவுசிங் காந்தி 33 பந்தில் 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில், வந்த நாதன்(20), ஆனந்த் சுப்பரமனியன்(26) ரன்கள் எடுத்தனர். 
 
பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணியில் கங்கா ஸ்ரீதர் 55 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விவேக் 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 
 
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.  தூத்துக்குடி அணியில் 69 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/22231915/1098002/TNPL-TUTI-Patriots-beat-Dindigul-Dragons-by-7-wickets.vpf

Link to comment
Share on other sites

தல தோனி, சிஎஸ்கே கொடி, வெளுத்துக்கட்டிய வாஷிங்டன் சுந்தர் - #TNPLUpdates

 
 

டி.என்.பி.எல் இரண்டாவது சீசன் எளிமையாகவும் அதே சமயம் ஆரவாரத்துடனும்  தொடங்கியிருக்கிறது. தோனியின் வரவால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்களின் உற்சாகக்குரல் மீண்டும் ஒலித்தது. டி.என்.பி.எல் இரண்டாவது சீசன் தொடக்கவிழாவில் தோனி  மஞ்சள் நிற ஜெர்சியில் நுழைந்ததும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். மைதானம் முழுவதுமே மஞ்சள் நிற சிஎஸ்கே கொடி பறந்தது. நடப்பது டி.என்.பி.எல்லா அல்லது ஐபிஎல்லா என ஒரு  கணம் சந்தேகம் எழும் அளவுக்கு எங்கும் மஞ்சள் நிற ஜெர்சிகளும், கொடிகளும் தென்பட்டன. 

தோனி

பௌலிங் மெஷின் மூலம் பந்துவீசப்படும். அதை சிக்சருக்கு விளாசவேண்டும் என்பது தோனிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். நான்கு பந்தில் மூன்றை சிக்சருக்கு விரட்டினார் தோனி. அனைத்து சிக்ஸர்களுமே ரசிகர்கள் உட்கார்ந்திருக்கும் காலரியில் விழுந்தன. 'இது சும்மா டிரைலர்மா சிஎஸ்கே அறிமுக விழாதான் எங்களுக்கு மெயின் பிக்சர்' எனச் சொல்லி கொண்டாடித்தீர்த்தனர் ரசிகர்கள். 'தல' என எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்திருந்த தோனி  நீண்ட நாட்கள் கழித்து மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார். "சிஎஸ்கேவுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இப்போது தடைகாலம் முடிந்துவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே ரசிகர்கள் இன்னும் இன்னும் அதிகரித்திருக்கிறார்கள். எனக்கு சென்னை எப்போதுமே ஸ்பெஷல்" என்றார் தோனி. 

சிஎஸ்கே

அறிமுகவிழாவுக்கு பிறகு இந்த சீசனுக்கான முதல் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தினேஷ் கார்த்திக் போட்டியில் ஆடாததால் தூத்துக்குடி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் சுப்பிரமணியன் ஆனந்த். அதேப் போல திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக ஆட இலங்கைக்குச் சென்றுவிட்டதால் கேப்டன் பொறுப்பு அஷ்வின் வெங்கட்ராமிடம் கொடுக்கப்பட்டது.

இது 180 ரன்கள் எடுக்கப்படக்கூடிய பிட்ச் என கணித்தார் டீன் ஜோன்ஸ். போட்டித் தொடங்கியது. வாஷிங்டன் சுந்தருடன்  கௌஷிக் காந்தி களமிறங்கினார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் ஆரம்ப ஓவர்களில் சொதப்பித் தள்ளினார். நான்காவது ஓவரை நடராஜன் வீசியபோது மூன்று பௌண்டரிகளை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் முருகன் அஷ்வின் பந்துவீச வந்தார். அவரது ஓவரை வாஷிங்டன் சுந்தர் உரித்துத் தள்ளினார். ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் இந்த ஓவரில் வந்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி அணி. 

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் அதிரடித்துக் கொண்டிருக்க, கௌஷிக் காந்தி கட் ஷாட்களில் கலக்கினார். கௌஷிக்கின் ஷாட்கள் ரசிக்கும்படியாக  இருந்தன. பவர்பிளே முடிந்தாலும் ஓரளவு ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர் இருவரும். பத்து ஓவர்களில் 103 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி. முதல் பத்து ஓவர்களில் திண்டுக்கல் அணியின் பீல்டிங் படுசொதப்பலாக இருந்தது. இந்தநிலையில் விக்டர் வீசிய பந்தில் கௌஷிக் அடித்த பந்தை அற்புதமான முறையில்  கேட்ச் செய்தார் சஞ்சய். பந்தைச் சரியாக கணித்து காலை பின்நோக்கி நகர்த்தி பின்னர் இரண்டு கால்களையும் தூக்கி பின்னோக்கி டைவ் செய்து அட்டகாசமான கேட்ச் செய்தார் சஞ்சய். வாழ்த்துகள் சஞ்சய். 

கௌஷிக் காந்தி வெளியேறியதும் எஸ்.பி. நாதன் உள்ளே வந்தார். நாதன் அமைதியாக இன்னிங்க்சை தொடங்கினார். பதிமூன்றாவது ஓவரை நடராஜன் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை பௌண்டரிக்கு அனுப்பி அரை சதத்தை நிறைவு செய்தார் வாஷிங்டன். அதே ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரி விளாசினார் வாஷிங்டன். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் வந்தது. 14 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ். நிச்சயமாக 210 ரன்களை தூத்துக்குடி அணி கடந்துவிடும் எனத் தோன்றியபோது வாஷிங்டன் சுந்தர் விவேக்கின் பந்தில் தேவையற்ற ஒரு ஷாட் விளையாட முற்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 48 பந்துகளில் 8 சிக்ஸர்கள்  இரண்டு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்தார். அவர் அவுட் ஆன பிறகு ரன்வேகம் மந்தமானது. சுப்ரமணியன் ஆனந்த் மட்டும் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரை நடராஜன் அற்புதமாக வீசினார்.யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை  முடக்கினார். அந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே வந்தது. நடராஜன் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

185 ரன்கள் எனும் சற்றே கடினமான இலக்கைத் துரத்தத் துவங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ். அந்த அணியில் ஜெகதீசனும் ராஜுவும் தொடக்க வீரராக களமிறங்கினார். மூன்றாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச அதில் ஒரு சிக்ஸர் வைத்தார் ஜெகதீசன். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட் திசையில் ஆகாஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அஷ்வின் கிறிஸ்ட் பந்தில் ஆகாஷிடம் கேட்ச் கொடுத்து சுப்ரமணிய சிவாவும் வெளியேறினார். தனது இரண்டாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர்  முருகன் அஷ்வினை வெளியேற்றினார். எட்டு ஓவர்கள் முடிவில் 65 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது திண்டுக்கல் அணி. அதன் பிறகு அஷ்வின் வெங்கட்ராமனும் கங்கா ஸ்ரீதர் ராஜும் நிலைத்தது நின்று சிறப்பாக ஆடினார்கள். எனினும் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் மட்டுமே திண்டுக்கல் அணியால் எடுக்க முடிந்தது.  எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

http://www.vikatan.com/news/sports/96518-tnpl-inaguration-updates.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.