Jump to content

நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: யாழில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியாசலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா. சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/security/01/152871

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீங்காவில்.. சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ.. பொலிஸ் பிரசன்னத்தின் கீழ் நீதியை நிலைநாட்டுவது என்பது தமிழர்களுக்கு முடியாத ஒரு காரியம். 

எனவே சர்வதேச நீதி நடைமுறைகளை ஐநா தனது பிரத்தியேக தலையீட்டோடு.. ஐநா படைகளின் வருகையோடு தமிழர் பகுதிகளில் ஆரம்பிப்பதோடு.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு ஐநா மத்தியஸ்தத்தின் கீழ் கிழக்குத்தீமோர் போன்று ஒரு காத்திரமான வழியில்.. தீர்வு தேடப்படுவது மட்டுமே இப்படியான நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.

இதன் பின்னணியில்.. சிங்கள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்லது அதன் அடிவருடிக் கூட்டம்.. இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. காரணம் வித்தியா வழக்கு விசாரணை என்பது சிங்களத்தின் உயர்மட்ட ஆட்கள் மற்றும் அதன் பிற இன சமூக அடியாட்கள்.. பலரின் மனித உரிமை விரோதச் செயல்களையும் அதற்கு ஒத்துழைப்பதையும் வெளியில் கொண்டு வர சில நீதிபதிகள் முயலக் கூடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அதற்கு எதிரான ஒரு அச்சுறுத்தலே இதுவாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிகளை துப்பாக்கியால் சுடுவது சிறிலங்காவில் இதுதான் முதல் தடவை என நான் நினைக்கிறேன்....இந்தியா சினிமாக்களில் பார்த்த ஞாபகம்....

குற்றம் சாட்ட பட்ட சிறையில் இருக்கும்  பொலிஸ் அதிகாரி ஏன் கழுத்துபட்டி அணிந்து விசாரணைக்கு அழைத்து வந்தீர்கள் என கேள்வி கேட்க்கும் பொழுதே நினைத்தேன் ....நீதிபதிக்கு பிரச்சனை வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா கொலையுடன் தொடர்புடைய  அரச படையா?

அல்லது

ஏற்கனவே  ஒடுக்கப்பட்டுள்ள  கூலிப்பட்டாளங்களா?

அல்லது  சுவீஸ் குமாரின் பணத்தின்மீது  இதையும் போட்டுவிட்டு?????

Link to comment
Share on other sites

19 minutes ago, nedukkalapoovan said:

சொறீங்காவில்.. சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ.. பொலிஸ் பிரசன்னத்தின் கீழ் நீதியை நிலைநாட்டுவது என்பது தமிழர்களுக்கு முடியாத ஒரு காரியம். 

எனவே சர்வதேச நீதி நடைமுறைகளை ஐநா தனது பிரத்தியேக தலையீட்டோடு.. ஐநா படைகளின் வருகையோடு தமிழர் பகுதிகளில் ஆரம்பிப்பதோடு.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு ஐநா மத்தியஸ்தத்தின் கீழ் கிழக்குத்தீமோர் போன்று ஒரு காத்திரமான வழியில்.. தீர்வு தேடப்படுவது மட்டுமே இப்படியான நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.

இப்படி தான் ஐ. நா. சமாதன படை என்று அனுப்பபப் பட்ட படையில் இருந்த இலங்கை மற்றும் ஏனைய நாட்டு படையினர் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பெருமளவில்  பாலியல்   துஷ்பிரயோகம்  செய்ததாக    ஏதோ விசாரணை நடந்ததாக   நினைவு. இலங்கை படையினர் எவரும்   சிறை  சென்றதாக நினைவில்லை.    நீங்கள் அப்படி அறிந்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Jude said:

இப்படி தான் ஐ. நா. சமாதன படை என்று அனுப்பபப் பட்ட படையில் இருந்த இலங்கை மற்றும் ஏனைய நாட்டு படையினர் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பெருமளவில்  பாலியல்   துஷ்பிரயோகம்  செய்ததாக    ஏதோ விசாரணை நடந்ததாக   நினைவு. இலங்கை படையினர் எவரும்   சிறை  சென்றதாக நினைவில்லை.    நீங்கள் அப்படி அறிந்தீர்களா?

ஐநா படையில் சொறீலங்கா அரச படைகள் அவற்றின் போர்க்குற்றச் செயல்கள் மற்றும் பெண்கள்/ சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக இணைத்துக் கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

கெயிட்டியில் சொறீலங்கா.. பாலியல் துன்புறுத்தல் படை செய்த மனித அநாகரிகச் செயல்களுக்காக விசாரணையை சந்தித்து வந்தது. ஆனால் தீர்ப்பும் தண்டனையும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சேவையில் இருந்து மீள நாட்டுக்கு அனுப்பட்டார்கள். சொறீலங்கா மட்ட விசாரணையில் சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது வெறும் கண்துடைப்பு என்று வெளிநாட்டு ஊடகங்கள் மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படையாகவே கண்டித்திருந்தன.

sri-lankan-un.jpg

http://www.independent.co.uk/news/world/americas/un-haiti-peacekeepers-child-sex-ring-sri-lankan-underage-girls-boys-teenage-a7681966.html

இப்போ அந்தப் படை வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. அதனை நிலை கொள்ள வைச்ச பெருமை அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களைச் சாரும். 

இப்போது அதனை அகற்றி.. ஒரு குறுகிய காலம் குற்றச்சாட்டுக்களை சந்திக்காத நாடுகளில் இருந்து பெறப்படும் வீரர்களைக் கொண்ட ஒரு ஐநா படையை தமிழர் தாயகத்தில் நிறுத்தி.. தமிழ் மக்களுக்கு சரியான மத்தியஸ்தத்தை வழங்கி.. தமிழ் மக்கள் சனநாயக வழிமுறையில் வாக்குகள் மூலம்.. கிழக்குத்திமோர் வகையில் முடிவெடுக்க ஐநா உதவ வேண்டும். அதுவே இவ்வாறான நிகழ்வுகளுக்கு முடிவாகும். 

இது ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ளப் படக் கூடாது. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

45 minutes ago, nedukkalapoovan said:

.இப்போது அதனை அகற்றி.. ஒரு குறுகிய காலம் குற்றச்சாட்டுக்களை சந்திக்காத நாடுகளில் இருந்து பெறப்படும் வீரர்களைக் கொண்ட ஒரு ஐநா படையை தமிழர் தாயகத்தில் நிறுத்தி.. தமிழ் மக்களுக்கு சரியான மத்தியஸ்தத்தை வழங்கி.. தமிழ் மக்கள் சனநாயக வழிமுறையில் வாக்குகள் மூலம்.. கிழக்குத்திமோர் வகையில் முடிவெடுக்க ஐநா உதவ வேண்டும். அதுவே இவ்வாறான நிகழ்வுகளுக்கு முடிவாகும். 

இது ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ளப் படக் கூடாது. :rolleyes:tw_angry:

இதற்கு நிறைய செலவாகுமே? எத்தனை மில்லியன் தேவைப்படும் என்று நினைக்கிறீர்கள்? இந்த செலவுக்கு யாரை அணுகினால் சாத்தியமாகும்?

Link to comment
Share on other sites

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதி இளம்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல.

gun.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் நல்லூர் வீதியில் துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில்        யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது குடும்பத்துடன் அவ்வழியே பயணித்துக்கொண்டு இருந்ததாகவும், சம்பவம் இடம்பெற்ற போது நீதிபதியின் பாதுகாவலர் வாகனத்தை விட்டு இறங்கி துப்பாக்கிதாரியை துரத்திச் சென்று துப்பாக்கியை பறிக்க முற்பட்ட வேளை அவரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதுகாவலர் காயம் அடைந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதுகாவலரிடம் இருந்து தப்பித்துக்கொண்ட துப்பாக்கிதாரியின் கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்த அதே நேரம், வீதியால் வந்த ஒரு தம்பதியினரின் ஸ்கூட்டி என்ற ஈருளியை பறித்து அதில் துப்பாக்கிதாரி தப்பிச் சொன்றுள்ளார். இந்த நிலையில் தற்போது பொலிசார் அவ்விடம் சென்று மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

இதே வேளை  இந்த துப்பாக்கிப் பிரயோகமானது  இளஞ்செழியனை நோக்கி மேற்கொள்ளப்படவில்லை எனவும் வேறு ஒரு இளைஞரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே எனவும் தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/33759

 

 

என்ன நடந்தது விளக்குறார் நீதிபதி

http://uthayandaily.com/story/13163.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நல்ல நாடு சனந்தான் சரியில்லை..

Link to comment
Share on other sites

பிஸ்டல் மீட்பு

 
பிஸ்டல் மீட்பு
  •  

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிஸ்டல் நல்லூர் கோயிலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/13150.html

2ஆம் இணைப்பு – தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமாகவே கருதுவதாக மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்:-

 

தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறை மீது விடுக்கப்பட்ட சவால் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மேல் நீதிமன்றத்தில் காணப்படும் பாராதூரமான வழங்குகளை தான் நெறிப்படுத்தி வருவதினால் இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் தன் மீதே நிகழ்த்தப்பட்டது என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்ல முடியாது எனவும் தன்னைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்த அவர்  துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றி தானே யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

போகும் வழியில் யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்பு கொண்டு சம்பவத்தினைத் தெரியப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கும் படியும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவு இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/33759

Link to comment
Share on other sites

நல்லூர் துப்பாக்கி சூடு. இலக்கு நீதிபதி இளஞ்செழியனா ? வீதியில் நின்ற இளைஞனா ? பொலிஸ் விசாரணை தீவிரம்

IMG_8603.jpg

 

யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளார்.

 
நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
 
துப்பாக்கிதாரி  என்னை நோக்கி சுட்டார். 
மெய்பாதுகாவலர் என்னை காரினுள் தள்ளினார். 
 
குறித்த சம்பவம் குறித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவிக்கையில் ,
 

எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் துப்பாக்கி தாரியின் துப்பாக்கியை பிடித்து பறிக்க முயன்ற வேளை நான் துப்பாக்கியை விடுடா என கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடி அவனுக்கு அருகில் சுமார் எட்டடி தூரம் சென்ற போது , துப்பாக்கி தாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

 
அதில் துப்பாக்கி சூட்டுக்கு எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் இலக்காகி காயமடைந்தார். அதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பி சுட முயன்ற போது என்னுடைய மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஓடி வந்து என்னை காரினுள் தள்ளி ஏற்றினார்.
 
என்னை காரினுள் ஏற்றி விட்டு அவர் துப்பாக்கி தாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , ஆலய பின் பகுதியில் இருந்த வேலி தகரங்களை துளைத்து சென்றன
 
துப்பாக்கி தாரி மீண்டும் என்னை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அப்போது பொலிஸ் காண்டபிளுக்கு தோள் பட்டையில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டது.
 
எனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் துப்பாக்கிதாரி மீது மூன்று நாலு சூட்டினை நடாத்தி இருந்தார். அதில் துப்பாக்கி தாரிக்கு காயம் ஏற்பட்டதா என்பதனை அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் நொண்டி நொண்டி ஓடினதை அவதானித்தேன்.
 
அதனை தொடர்ந்து காயத்திற்கு உள்ளன, எனது இரு மெய்பாதுகாவலர்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றேன்.
 
இது தொடர்பில் , பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் , தலைமையாக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவித்து குறித்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமராக்களை பரிசோதித்து துப்பாக்கி தாரியை கைது செய்யும் நடவடிக்கையை துரித கெதியில் முன்னெடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளேன்.
 
இந்த சம்பவம் ஆனது நான் வழமையாக கோவில் வீதியால் தான் சென்று வருவேன். அதனை அவதானித்து என்னை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதா எனும் சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. எனில் அண்மைக்காலமாக யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறும் பார தூரமான வழக்குகளை கையாளும் நபராக இருப்பதனால் , இந்த துப்பாக்கி சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
 
ஏனெனில் அந்த துப்பாக்கியை அவர் கையாண்ட விதம் ஒரு அனுபவம் உள்ள நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் பார்த்த போதும் அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கி சூட்டாளர் போன்றே தோன்றியது.
 
வீதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் எனது மெய் பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி தாரிக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
 
நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால். 
 
மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆனது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்.
 
ஏனெனில் அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான் அத்துடன் எனது மெய் பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது.
 
ஆகவே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு , நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். என தெரிவித்தார்.
 
வீதியில் நின்ற இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம்.
 
சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில் ,
 
நாம் வீதியால் வந்து கொண்டிருந்த வேளை நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி பருத்துறை வீதி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறபூச்சுக்கள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரை பார்க்கும் போது வர்ண நிறபூச்சு (பெயின்ட் அடிக்கும்) வேலைக்கு சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.
 
குறித்த இளைஞன் மீது ஆயுததாரி ஒருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்திருந்தது.
 
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும் வாகனத்தை நிறுத்தினோம். அதன் பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான பொலிஸ் உத்தியோகஸ்தரும் துப்பாக்கி தாரியை பிடிக்க முயன்றோம்.
 
அதன் போது துப்பாக்கி தாரி எம் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன் போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
 
துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
 
அதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற வேளை மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதுண்டது.
 
அதன் போது துப்பாக்கி தாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்து. அதை கைவிட்டு துப்பாக்கி தாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார் என தெரிவித்தார்.
 
இலக்கு யார் ?
 
வீதியால் வந்த நீதிபதியின் காரினை மறிக்கவும் , நீதிபதியை காரினை விட்டு இறக்கவும் , வீதியில் நின்ற இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக நாடகம் நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் , ஏனெனில் சம்பவத்தை பார்த்த இளைஞர் தெரிவித்த, துப்பாக்கிதாரியின் இலக்கான வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞன் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி உள்ளார்.
 
அதனால் துப்பாக்கிதிரியும் வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞனும் சேர்ந்தே அந்த இடத்திற்கு வந்த பின்னர் நீதிபதியின் வாகனத்தை வழி மறிக்கும் முகமாக முன்னராக துப்பாக்கி பிரயோக நாடகம் ஒன்றினை நடாத்தி வாகனத்தை விட்டு நீதிபதி கீழ் இறங்கியதும் நீதிபதியினை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கமால் எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
துப்பாக்கியின் மகசீன் மீட்கப்படவில்லை. 
 
அதேவேளை சம்பவ இடத்தில் பத்து வெற்று துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன. துப்பாக்கிதாரி வீழ்த்தி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியானது , 12MM வகையை சேர்ந்து எனவும் , துப்பாக்கி மீட்கப்பட்ட போது மகசீன் காணப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
IMG_8619.jpg
 
 
IMG_8640.jpg
 
IMG_8652.jpg
 
 
IMG_8663.jpg
 
IMG_8678.jpg
IMG_8695.jpg
 
IMG_8697.jpg
 
IMG_8705.jpg
 
IMG_8710.jpg
 
 
 
 
 
 
 
 
 
 

http://globaltamilnews.net/archives/33771

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவிலுக்கு  பின் பக்கம் போல் தெரிகிறது   இதற்கும் பின் புலம் இருக்கிறது என சந்தேகிக்கலாம் ஆனால் என்னவோ இருக்கு  அதிலும் வித்தியா கொலைவழக்கு நீதிமன்ரத்தில் நீதிபதியின் கைகளில் நிலுவையில் உள்ளதால்   நடந்திருக்க கூடும் 

அமைதியாக சென்று கொண்டிருக்கும் மக்கள் வாழ்க்கையில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வரவதை மக்களால் ஏற்ருக்கொள்ள முடியாது  இதற்கு  உரிய நடவடிக்கை எடுத்து  குற்றவாளிகளுக்கு  தண்டனை  வழங்க வேண்டும் 

Link to comment
Share on other sites

17 minutes ago, தனி ஒருவன் said:

அமைதியாக சென்று கொண்டிருக்கும் மக்கள் வாழ்க்கையில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வரவதை மக்களால் ஏற்ருக்கொள்ள முடியாது

ஆனால் இது பலரின் இருப்புக்கு தேவையாகவும் + சிலருக்கு வாழ்வாதாரமுமாய் உள்ளதே. // புலம் பெயர்ந்த நாடுகளில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

நீதிபதிகளை துப்பாக்கியால் சுடுவது சிறிலங்காவில் இதுதான் முதல் தடவை என நான் நினைக்கிறேன்....இந்தியா சினிமாக்களில் பார்த்த ஞாபகம்....

குற்றம் சாட்ட பட்ட சிறையில் இருக்கும்  பொலிஸ் அதிகாரி ஏன் கழுத்துபட்டி அணிந்து விசாரணைக்கு அழைத்து வந்தீர்கள் என கேள்வி கேட்க்கும் பொழுதே நினைத்தேன் ....நீதிபதிக்கு பிரச்சனை வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று.....

 

இல்லை, இத்ற்கு முன்னும் நடந்துள்ளது. சரத் அம்பேபிடிய என்னும் நீதிபதி ஒருவர் பொட்ட நவுப்பர் என்னும் ஒருவனால் கொல்லப்பட்டாதாக ஞாபகம். 

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

 

இல்லை, இத்ற்கு முன்னும் நடந்துள்ளது. சரத் அம்பேபிடிய என்னும் நீதிபதி ஒருவர் பொட்ட நவுப்பர் என்னும் ஒருவனால் கொல்லப்பட்டாதாக ஞாபகம். 

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அது நடந்தது  கன காலம் என நினைக்கிறேன் ஆனால் அதற்க்கான் அதண்டனை    போன வருடமோ இந்த வருடமோ கொடுத்த ஞாபகம் 

 

2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனால் இது பலரின் இருப்புக்கு தேவையாகவும் + சிலருக்கு வாழ்வாதாரமுமாய் உள்ளதே.

 இங்குள்ள வர்களுக்குத்தான் மீண்டும் ஆயுத கலாச்சாரம் தேவைப்படுவது தெரிகிறது இன்று  ஓர் ஊடக அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்திகள் சொல்லுது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் புலிகள் இல்லை. இல்லை என்றால்.. புலம்பெயர் மக்களின் தேவைக்கான பாலியல் வீடியோ வெளியிடும் நோக்கில் புலிகள் சுட்டனர் என்று சொல்லவும் எங்களில் சிலர் இருக்கினம்.

முழுக்க முழுக்க சிங்கள இராணுவ.. நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள்.. சிங்களப் புலனாய்வுக் கண்காணிப்புக்குள் இருக்கும்  யாழ்ப்பாணத்தில்.. இன்று.. ஒரு பிரதான நீதிபதியை கொல்லும் நோக்கில்.. அவரே சொல்கிறார்.. இது தன்னை நோக்கித்தான் நடத்தப்பட்டிக்கனும் என்று.. நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை.. புலம்பெயர் தமிழரின் தேவைக்கு இது நடத்தப்பட்டது போல.. செய்தியை திரிக்கும் நபர்களை என்னென்பது..??!

இதை சொல்பவர்கள்.. ஏலவே அசைலம் அடிச்சிட்டு.. வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. அங்க போய் நிற்பவர்கள் என்பதுதான் மிகப் பெரிய வேடிக்கை ஆகும்.

இது சாதாரண ஒரு சம்பவமே அல்ல. தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து நீதி என்பதே கிட்டாது என்பதை திடமாகச் சொல்லக் கூடிய ஒரு சம்பவம். இதற்கு தமிழ் மக்களின் நிலத்தில் சிங்கள இராணுவத்தையும் ஆட்சியாளர்களையும் நிறுத்தி வைக்க உதவிய சர்வதேச சமூகமே முழுப் பொறுப்பும் கூற வேண்டும். தமிழ் மக்கள் சர்வதேசத்தை நோக்கி தான் இதற்கான தீர்வுக் குரலை எழுப்ப வேண்டும். இது தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிமைகளாக வாழ வைக்க நிகழ்த்தப்பட்ட ஓரு தாக்குதல். எந்த வகையான குற்றத்தை சிங்கள தேசம் இழைத்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு வாழனும் என்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இது நிகழ்த்தப்பட்டுள்ளது.  :rolleyes:tw_angry:

யாழில் 4 ன்கு வாரத்துக்குள் இரண்டாவது துப்பாக்கிப் பிரயோக நிகழ்வு இது ஆகும். புலிகள் இல்லாத போதும்... யுத்தம் இல்லாத போதும்.. தமிழ் மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டுவது யார்..??! சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களின் படைகளும்.. கூலிகளும் ஆவர்.  இதே தான் தமிழ் மக்களுக்கு முன்னரும் செய்யப்பட்டது. அதற்கு எதிராகவே தமிழ் மக்கள்  ஆயுதம் தூக்க வேண்டியும் வந்தது. இவர்களின் இருப்பை தமிழர் நிலத்தில் இல்லாமல் செய்யும் நோக்கில். மீண்டும் அந்த நிலையை நோக்கி நகர்வது புலம்பெயர் தமிழர்களோ தாயக மக்களோ அல்ல.. சிங்கள ஆளும்வர்க்கமும்.. அதன்  ஆக்கிரமிப்புச் சக்தியாக விளங்கும்..  மோசமான மிலேச்சத்தனமான இராணுவ.. பொலிஸ் இயந்திரமும். !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Judge Ilancheliyan narrowly escapes assassination attempt in Jaffna

[TamilNet, Saturday, 22 July 2017, 13:58 GMT]
Jaffna High Court Judge Manickavasagam Ilancheliyan narrowly escaped assassination attempt at Nalloor in Jaffna around 5:10 p.m. on Saturday. Two guards giving security to him sustained injuries in the incident. The judge, who was not injured, told TamilNet that the attacker seemed to be an experienced gunman. Judge Manickavasagam Ilancheliyan is well known for his independent judgements. He is also known to be not hesitating to rule against armed criminal elements that operate with the backing of the occupying SL military. The incident on Saturday has taken place at a time Nalloor temple is preparing for its annual festival which is scheduled to commence on coming Friday. 

The firing seems to be a work of two attackers who came in a motorbike. One of them has allegedly grabbed the pistol of an escorting policeman and exchanged fire with the police escort. When Judge Ilancheliyan came out of his car, the gunman attempted to fire at him, but his security got him into the car, the Judge told TamilNet. 

The two security personnel were rushed to hospital and the judge accompanied them to Jaffna hospital. 

The exchange of gunfire lasted almost 5 minutes before the attacker, escaped from the crime scene. The pistol has been located in the street, news sources in Jaffna said. 

Judge Ilancheliyan emerged as a fearless judge following the investigation on Chemmani mass graves in late 1990s when he ordered the CID and the SL Police to bring the five ‘Sri Lanka’ Army (SLA) personnel, who were convicted in the rape and murder of the Jaffna school girl Krishanthy Kumaraswamy, for an identification parade. One of the SL soldiers identified as the culprit, gave evidence on how the crime was committed. 

In 2015, Ilancheliyan sentenced four SL military soldiers for five to twenty years of rigorous imprisonment for raping a Tamil girl in and for sexually abusing a Tamil woman in Visuvamadu in Mullaiththeevu in 2010.

He has been targeted by unknown attackers in the past. 

In 2011, unknown attackers who went to his house located at Velanai in the Kayts Island, killed 51-year-old Savarimuththu Jesuraja who was residing at his house.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38750

Link to comment
Share on other sites

’வீதியில் நின்ற இளைஞன் மீதே ஆயுததாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்’
 

 

"வீதியில் நின்ற இளைஞன் மீதே, ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்" என நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த இளைஞர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாம் வீதியால் வந்து கொண்டிருந்தவேளை, நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி பருத்துறை வீதி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறபூச்சுக்கள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரை பார்க்கும் போது வர்ண நிறபூச்சு (பெயின்ட் அடிக்கும்) வேலைக்கு சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.

குறித்த இளைஞன் மீது ஆயுததாரி ஒருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்து கொண்டிருந்தது.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும் வாகனத்தை நிறுத்தினோம். அதன்பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் உத்தியோகத்தரும் துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றோம்.

அதன்போது, துப்பாக்கிதாரி எம்மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன்போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிதாரி வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பிச்செல்ல முயன்றவேளை மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதுண்டது.

அதன்போது துப்பாக்கிதாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்தது. அதை கைவிட்டு துப்பாக்கிதாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்" என தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் பத்து வெற்று துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன. துப்பாக்கிதாரி வீழ்த்தி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியானது, 12எம்.எம் வகையை சேர்ந்து எனவும், துப்பாக்கி மீட்கப்பட்ட போது மகசீன் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வீதியில்-நின்ற-இளைஞன்-மீதே-ஆயுததாரி-துப்பாக்கி-பிரயோகம்-மேற்கொண்டார்/71-201127

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவ இடத்தில் மிக அருகில் நின்ற நீதிபதி சொல்லுவதை கேட்டுப் போட சொறீலங்கா சிங்கள அரச ஏவல் ஊடகங்கள் சிலதுக்கு வசதியா இல்லைப் போல. அதுதான் யாரோ இளைஞர் சொன்னார்.. மூதாட்டி சொன்னார் என்று.. செய்தியை திசை திருப்பி.. ஒன்றை திரும்பத் திரும்ப எழுதி.. சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும்.. அதன் எடுபிடி இராணுவ பொலிஸ் இயந்திரத்துக்கும்.. அதன் கூலிகளுக்கும் சார்பாக கொண்டு செல்ல விளைகிறார்கள். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.