Jump to content

Recommended Posts

தாராளம்

‘‘என்ன செல்லம்மா... வீட்டுல இருந்து எண்ெணயை எடுத்துப் போறியா?’’ - தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி கையில் ஒரு பாட்டில் நிறைய எண்ணெயை எடுத்துச் செல்வதைக் கண்ட சுந்தரம், சந்தேகத்தோடு கேட்டான்.அந்நேரம் அங்கே வந்த அவன் மனைவி விமலா, ‘‘அட... நான்தாங்க அதை அவளுக்குக் குடுத்தேன். அவ ஒண்ணும் தூக்கிட்டுப் போகலை!’’ என்றாள்.வேலைக்காரி நகர்ந்தாள்.
3.jpg
‘எப்படி நம் மனைவி இவ்வளவு தாராளப் பிரபு ஆனாள்’ என்று மலைத்த சுந்தரம், மனைவியிடம் கேட்டான்... ‘‘நீ சாதாரணமா எதையும் யாருக்கும் தூக்கிக் கொடுத்துட மாட்டியே... இன்னைக்கு என்ன ஆச்சு?’’‘‘டி.வியில சொன்னாங்க... திரும்பத் திரும்ப எண்ணெயைக் காய்ச்சி சமையலுக்குப் பயன்
படுத்தினா புற்றுநோய் வருமாம். அதனாலதான் நான் யூஸ் பண்ணுன பழைய எண்ணெயை எடுத்து வேலைக்காரிக்குக் குடுத்துட்டேன்!’’
சுந்தரத்தின் முகம் சுருங்கியது.

‘‘ஏன் விமலா! அவங்களும் நம்மளை மாதிரி மனுஷங்கதானே... அவங்களுக்கு பாதிப்பு வராதா’’ என்றவன், விறுவிறுவென்று வாசலுக்குச் சென்றான். வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த வேலைக்காரியின் கையிலிருந்த எண்ணெயைப் பிடுங்கி சாக்கடையில் ஊற்றியவன், நூறு ரூபாய் பணத்தை அவள் கையில் திணித்து, ‘‘போற வழியில ஏதாவது கடையில எண்ணெய் புதுசா வாங்கிக்கோ!’’ என்றான். எதுவும் புரியாமல் விழித்தபடி நின்றாள் வேலைக்காரி செல்லம்மாள்.

kungumam.co

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேலைக்காரி என்னை வாங்கிக் கொண்டு போயிடுவாள். அப்புறம் வீட்டுக்காரர் நோவெண்ணை போத்தலை தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.