Jump to content

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கடலோரக் காவற்படையினர் மீது வடமராட்சி கிழக்கில் தாக்குதல்


Recommended Posts

மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல்

 
மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல்
 

வடமராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நிலமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி சென்றுள்ளார்.

இதனால் வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வட­ம­ராட்சி, வல்­லி­புர ஆழ்­வார் ஆல­யத்­துக்கு அண்­மை­யாக மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது.

வட­ம­ராட்சி நாகர்­கோ­வில் – குடத்­தனை வீதி­யில் நேற்­று­மாலை இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

சம்­ப­வத்­தில் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­க­ளில் ஒரு­வ­ரின் நிலை கடுமை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் இடம்­பெற்ற பகுதி மற்­றும் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­துக்கு நேற்­றி­ரவு சிறப்­புப் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வட­ம­ராட்சி வல்­லி­புர ஆழ்­வ­வார் ஆல­யத்­துக்கு அருகே 4 கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் துவிச்­சக்­கர வண்­டி­யில் ரோந்­துப் பணி­யில் ஈடு­பட்­ட­டி­ருந்­த­னர். அவர்­கள் மணல் கடத்­த­லில் ஈடு­பட்ட வாக­னத்தை மறித்து சோத­னை­யிட முற்­பட்­டுள்­ள­னர். எனி­னும் அதில் பய­ணித்­த­வர்­கள் காவற்­ப­டை­யி­னர் மீது கற்­களை எறிந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். மேலும் காவற்­ப­டை­யி­னர் இரு­வர் மீது அவர்­கள் துவ­ளுந் தடி­க­ளால் (சவள்­க­ளால்) தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து காவற்­ப­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் மணல் கடத்­தி­லில் ஈடு­பட்­டோர் வாக­னத்­து­டன் தப்­பித்­துள்­ள­னர். இத­னால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றி­ரவு கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­த­னர்.

அத­னை­ய­டுத்து வட­ம­ராட்­சிக்­குப் பொறுப்­பான மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் எஸ்.எஸ்.பி.மார­சிங்க, பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிரி­யந்த ஆகி­யோர் தலை­மை­யில் பொலிஸ் குழு­வி­னர் சம்­பவ இடத்­தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

இதே­வேளை, சம்­ப­வத்­தில் மணல் கடத்­த­லில் ஈடு­பட்­டோ­ரால் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­ன­ரின் துப்­பாக்கி ஒன்று பறிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் அதனை கடற்­ப­டை­யி­னர் மறுத்­த­னர்.

http://uthayandaily.com/story/12978.html

Link to comment
Share on other sites

வடமராட்சி பகுதியில் கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் – நிலைமைகளை ஆராய கடற்படை தளபதி வடமராட்சியில்

gtn-jaffna.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி பகுதியில் கடலோரகாவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் , நிலைமைகளை நேரில் ஆராயவும் இன்றைய தினம் கடற்படை தளபதி வடமராட்சி பகுதிக்கு சென்று இருந்தார்.

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று மண் கடத்தல் அதிகரித்து காணப்படுகின்றது. அந்நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை சோதனையிட முயற்சித்த கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து கடலோரகாவல் படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்று இருந்தனர். அதேவேளை அப்பகுதியில் காவல் கடமையில் இருந்த சீருடை தரித்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலும் நடாத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நிலையிலையே இன்றைய தினம் அப்பகுதிக்கு நேரில் சென்ற கடற்படை தளபதி நிலைமைகளை ஆராய்ந்து மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவு இட்டு சென்றுள்ளதுடன் , பாதுகாப்புக்களை பலப்படுத்தவும் உத்தரவு இட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/33752

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.