Jump to content

சம்பந்தன், விக்கினேஸ்வரன் நாளை சந்தித்துப் பேச்சு


Recommended Posts

சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு

Page-01-376501d7417db063fbb1eea2473778cbf57e950e.jpg

 

 (நமது நிருபர்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ர­  னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்­கி­ழமை கொழும்பில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. 

வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுத்­ததை அடுத்து அவ­ருக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் பெரும் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற சம­ரச பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாடு எட்­டி­யி­ருந்த போதிலும் வட­மா­காண சபை விவ­கா­ரத்தில் தொடர்ந்தும் இழு­பறி நிலை இருந்து வரு­கின்­றது.

இந்த நிலை­யி­லேயே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வ­ரனும் இன்று மாலை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

வட­மா­காண சபை அமைச்­சர்கள் இரு­வரை பதவி வில­கு­மாறு கோரிய முத­ல­மைச்சர் ஏனைய இருவர் மீதும் விசா­ரணை நடை­பெறும் என்று அறி­வித்­தி­ருந்தார். இந்த அமைச்­சர்கள் மீதான விசா­ரணை மற்றும் புதி­தாக அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வேஸ்­வரன் மற்றும் அனந்தி சசி­தரன் ஆகி­யோரின் பதவி நீடிப்பு விவ­காரம் தொடர்பில் இன்­றைய பேச்­சு­வார்­தையின் போது ஆரா­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்தை அடுத்து மாற்றுத் தலை­மையின் அவ­சியம் குறித்தும் ஆராய்ப்­பட்டு வந்தது. ஆனாலும் தமிழ்க் கூட்டமைப்பின் ஒற்றுமையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-22#page-1

Link to comment
Share on other sites

சாமுடன் பேசவுள்ளார் விக்கி:-

Wigneswaran-with-Sambanthan.jpg

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,   எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தன் உள்ளிட்டோர் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது. எனினும் தொடர்ந்தும் வட மாகாண சபையில்  இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே சம்பந்தன், விக்னேஸ்வரனை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/33731

Link to comment
Share on other sites

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் எதிர்ப்பைக்காட்ட முடியாது மன அழுத்தத்தில் தவிக்கும் தலைவரின் மன அழுத்தங்களைக் குறைப்பதற்கு, விக்கினங்கள் தீர்க்கும் விக்னேசுவரப் பெருமான் நிச்சயம் அருள்புரிவார். :grin: :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:


இனிமேல் கட்சியைவிட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க வேண்டும்...:unsure:

கட்சி என்ற பெயரிலை வந்து திருகுதாளம் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:

அவங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா..? :grin:

ஒரு செய்தியும் இல்லையென்றால் மக்கள் அவர்களை மறந்துவிட மாட்டார்களா?

Link to comment
Share on other sites

52 minutes ago, குமாரசாமி said:

ஏதோ இரண்டு பெரிய உலகத்தலைவர்கள் சந்திச்சு பேசுறமாதிரி பில்டப் வேறை.....tw_blush:


இனிமேல் கட்சியைவிட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் முன்னுரிமை குடுக்க வேண்டும்...:unsure:

கட்சி என்ற பெயரிலை வந்து திருகுதாளம் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.:cool:

ஆனால் அந்த 2 மந்திர வார்த்தைகள் இருக்கும் வரை இவர்களை அசைக்க முடியாது.

தமிழ் தேசியம்

Link to comment
Share on other sites

8 hours ago, ராசவன்னியன் said:

அவங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா..? :grin:

ஒரு செய்தியும் இல்லையென்றால் மக்கள் அவர்களை மறந்துவிட மாட்டார்களா?

அதுதானே வன்னியர்

பேசாம மானாட மயிலாட பாக்க சொல்லுவமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

அதுதானே வன்னியர்

பேசாம மானாட மயிலாட பாக்க சொல்லுவமா 

இல்லை பாருங்கோ....அவையள் மான் ஆட மயில் ஆட ஒண்டும் பாக்கிறேலை கண்டியளோ...
ஒன்லி நியூஸ் பேப்பர் மட்டும் தான்..:grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.