Jump to content

சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம்: லட்சக்கணக்கில் விலை போகும் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் - சேனல்களுக்கு இடையேயான போட்டியில் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள், தாதாக்கள்


Recommended Posts

சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம்: லட்சக்கணக்கில் விலை போகும் வீடியோ, புகைப்பட‌ ஆதாரங்கள் - சேனல்களுக்கு இடையேயான போட்டியில் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள், தாதாக்கள்

sasikala

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கையில் பையுடன் வண்ண உடையில் வலம் வரும் சசிகலா.

 

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான வீடியோ, புகைப்பட‌ ஆதாரங்களை அதிகாரிகளும், தாதாக்களும் 10 லட்சரூபாய்க்கு தனியார் தொலைக்காட்சி சேனல்களிடம் விற்றது தெரியவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறி, சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சிறைத் துறை டிஐஜி ரூபாடி. மவுட்கில் மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற் காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த கடிதம் அன்றைய தினம் இரவு ஒரு கன்னட தனியார் சேனலில் வெளியானது. புகாரை டிஜிபி ச‌த்தியநாராயண ராவ் மறுத்தார். இதைத் தொடர்ந்து “ஊடகங் களுக்கு தகவல் அளித்தது ஏன்?” என விளக்கம் கேட்டு ரூபாவுக்கு முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத் திய நிலையில் ரூபா, 2-வது அறிக்கையை மாநில உள்துறைக்கு அனுப்பினார். இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தை அடைவதற்கு முன்பாகவே மற்றொரு தனியார் சேனலில் வெளியானது.

தனியார் சேனல்களின் வர்த்தகப் பிரிவு ஊழியர்கள் பெங்களூரு சிறைத் துறை அதிகாரிகள் அலுவலகம், ரூபாவின் வீடு, பத்திரிகையாளர் சங்கம், பரப்பன அக்ரஹாரா சிறை ஆகிய இடங்களில் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கினர். அப்போது அந்த ஊழியர்கள் சிறைத்துறை அதிகாரி களிடமும் மூத்த‌ க்ரைம் ரிப்போர்ட்டர் களிடமும் சசிகலா வீடியோ கேட்டு அலைந்தனர்.

இதே போல டிஐஜி ரூபாவை தொடர்பு கொண்டு தங்களது சேனலுக்குதான் வீடியோ ஆதாரத்தை முதலில் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தனியார் சேனல்களின் தொல்லை தாங்க முடியாமல் செல்போனை அவர் அணைத்து வைத்தார். கடந்த 17-ம் தேதி சசிகலாவின் சிறை அறை களின் 5 புகைப்படங்களை, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேசிய தொலைக் காட்சி வெளியிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்ட‌து.

அந்த புகைப்படங்களை டிஐஜி ரூபா தான் கசியவிட்டார் என முதல்வர் சித்தரா மையாவுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால், கோபமடைந்த சித்தராமையா அதிரடியாக‌ டிஜிபி சத்தியநாராயண ராவ், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா ராய் ஆகியோரை இடமாற்றம் செய்தார்.

முன்பணம் ரூ.50 ஆயிரம்

இதனால் மீண்டும் சேனல்களின் வர்த்தகப்பிரிவு ஊழியர்கள், செய்தியா ளர்கள் சசிகலாவின் வீடியோ ஆதாரங் களை கைப்பற்ற வியூகங்களை வகுத் தனர். சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம் ஒரே நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும், தமிழகத்தில் அதிமுக அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத் துவதால் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் களும் இதில் அக்கறை காட்டினர். வீடியோ ஆதாரங்களுக்கு தாங்கள் ஸ்பான்சர் தருவதாகவும் தனியார் சேனல்களுக்கு உத்தரவாதம் அளித்தனர்.

இதையடுத்து சேனல்களின் ஊழி யர்கள் பெங்களூரு பத்திரிகையாளர் சங்கம், பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் மையமிட்டு வீடியோ ஆதாரங் களை வைத்திருக்கும் நபர்களை மோப்பம் பிடித்தனர். அப்போது சிறையில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரியின் நண்பர் மூலம் ஒரு வீடியோ காண்பிக் கப்பட்டது. தெளிவாக இல்லாத அந்த வீடியோவில், சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 2 நிமிடங்களுக்கு குறைவான வீடியோவை முதல்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கி, ஒரு கன்னட தனியார் சேனல் ஒளிபரப்பியது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறையில் இருக்கும் முக்கிய தாதாவின் அடியாட்கள் மூலமாக எடுக்கப்பட்ட சசிகலாவின் இன்னொரு வீடியோ இருப்பதாக ஊடக வட்டாரத்தில் பரவியது. இதையடுத்து அந்த தாதாவை ஊடகங்கள் அணுகிய போது, அட்வான்ஸாக ரூ.50 ஆயிரம் தந்தால் வீடியோவை காண்பிப்பதாக தெரிவித்தார். இதனை கன்னட சேனல்கள் ஏற்க மறுத்ததால், ஒரு தேசிய தனியார் சேனல் ரூ.5 லட்சம் கொடுத்து அந்த வீடியோவை வாங்கியது. அதில் சசிகலா நைட்டி அணிந்தவாறு, வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட சாப்பாட்டு கேரியரை உள்ளே கொண்டு செல்கிறார். 1.15 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த‌ வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ விலை ரூ.10 லட்சம்

கடந்த செவ்வாய்க்கிழமை சிறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் சசிகலா தொடர்பான‌ முக்கிய வீடியோ இருப்பதாக தகவல் வெளியானது. 5 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் சசிகலா சீருடை அணியாமல் இளவரசியுடன் சல்வார் கமீஸ் உடையில் தோன்று கிறார். ஷாப்பிங் செல்லும் பையை யும் கையில் வைத்திருக்கிறார்.

இந்த வீடியோவை கைப்பற்ற தனியார் சேனல்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதால் ஒரு தனியார் தேசிய‌ சேனல் எடுத்த எடுப்பில் ரூ. 10 லட்சம் கொடுத்து அதனை வாங்கியது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை உறுதி செய்தது. இதனால் கர்நாடக அரசுக்கும், சசிகலாவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் சிறையில் சசிகலா வுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன.

வெளியாகாத வீடியோக்கள்

சசிகலா சிறையில் சொகுசாக இருக்கும் வேறு சில வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என கடந்த இரு தினங்க ளாக பெங்களூரு ஊடக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர் பாக விசாரித்தபோது சிறை அதிகாரி ஒருவரிடம் இருந்து 2 வீடியோக்களை கன்னட தனியார் சேனல் செய்தியாளர் ஒருவர் கைப்பற்றி உள்ளார். அந்த வீடியோவில் சசிகலா செல்போனில் பேசுவது போலவும், மற்றொரு வீடியோ வில் இளவரசியுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகளும் இருக் கின்றன. இந்த இரு காட்சிகளிலும் போலீஸ் அதிகாரிகளின் படங்களும், கர்நாடக அரசுக்கு நெருக்கமான ஒருவர் குறித்த முக்கிய‌ உரையாடலும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இரு வீடியோக்களை வைத்துள்ள‌ அந்த செய்தியாளர் ஒரு வழக்கறிஞர் மூலமாக கர்நாடகாவில் ஆளும் கட்சி நிர்வாகியிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள் ளார். இந்த வீடியோ வெளியானால் கர்நாடக அரசுக்கும், அந்த நிர்வாகியின் அரசியல் எதிர்காலத்துக்கும் பெரும் அவப்பெயர் ஏற்படும். எனவே கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் வீடியோவை வெளியிடாமல் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த கர்நாடக எதிர்க்கட்சிகள் தேர்தல் நெருங்கும் நிலையில் வீடியோவை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். அந்த வீடியோ தேசிய ஊடகங்களில் வெளியானால் சசிகலாவின் லஞ்ச விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்படும். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இதனிடையே சசிகலா குடும்பத் தாருக்கு நெருக்கமான சிலரும் அந்த வீடியோக்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் தன் நண்பர் மூலமாக ரூ 2 கோடி வரை பேரம் பேசியிருப்பதாக தக‌வல் வெளியாகியுள்ளது. ஒருவேளை பேரம் படியாமல் போனால் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான புதிய வீடியோவும், வேறு சில புகைப்பட ஆதாரங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு ஊடக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சசிகலாவின் வீடியோ ஆதாரங் களுக்கு பெங்களூருவில் நல்ல விலை கிடைப்பதால் வெளியில் இருக்கும் தாதாக்கள் உள்ளே இருக்கும் தங்களது அடியாட்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றனர். அதாவது சசிகலாவின் வீடியோ, புகைப்பட, உரை யாடல் ஆதாரங்களை எடுத்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதன் மூலம் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழ கத்திலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த லாம். எனவே விரைவில் சசிகலாவின் ஆதாரங்களை அனுப்பும்படி தெரிவித் துள்ளனர்.

இதே போல சிறையில் உள்ள உயர் அதிகாரிகள், போலீஸார், ரவுடிகள் என பலரும் சசிகலாவின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை திரட்டும் வேலை யில் இறங்கியுள்ளனர். இந்த வீடியோக்கள் வெளியானால் ஒரு பக்கம் சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தண்டனைக்குரிய குற்றச்சாட்டில் சிக் கலாம். இன்னொரு பக்கம் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வாய்ப்பு உண்டு என்கின் றனர் அரசியல் நோக்கர்கள்.

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட‌து உண்மைதான்..

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என சிறைத்துறை அதிகாரிகள் கர்நாடக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு கூட்டம் அதன் தலைவர் ஆர். அசோக் தலைமையில் நேற்று நடந்தது. இந்த குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்பேரில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக், டிஐஜி ரேவண்ணா, சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அப்போது கர்நாடக சிறைத் துறை சார்பாக பதில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடு தொடர்பாக நடத்திய ஆய்வில் சில முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்பட்டு, அவர் சீருடை அணியாமல் இருந்தது உண்மைதான். சிறையில் சசிகலா பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா எண் 7 மற்றும் 8 செயல்படாமல் இருந்தது. சிறையில் சில சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்தது. சசிகலாவின் அறையில் இருந்து சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ன. இதன் மூலம் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என தெரியவந்துள்ளது”என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக சிறைத்துறையின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனால் சிறை முறைகேடு விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/article19329706.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.