Jump to content

முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி


Recommended Posts

முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி

 
புத்தகம்

முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் அமேஸான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன.

'ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு' என்ற பொருள் கொண்ட 'The Muslim's Guide to Sex Manual: A Halal Guide to Mind Blowing Sex' புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் பிரிட்டன் ஊடகங்கள் அந்த எழுத்தாளரை பேட்டி கண்டுள்ளன.

'த அப்சர்வர்' நாளிதழின்படி, இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு முஸ்லிம் பெண்.

எழுத்தாளர் பற்றிய விவரங்கள் வேறு எந்த தகவல்களை வெளியிடவேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆண் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புத்தக விமர்சனம்

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தையும் தனது பேட்டியில் அந்த முஸ்லிம் பெண் கூறியிருக்கிறார்.

முஸ்லிம் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய உறவு பற்றிய தகவல்கள் தெரிவதில்லை என்கிறார்.

முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக எழுத்தாளர் கூறுகிறார்.

'முஸ்லிம் பெண்களிடையே பாலியல் குறித்த தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் மாற்றுவதோடு, மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிய இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என்பதால், புத்தகத்திற்கு வரவேற்பளிக்கவேண்டும்' என்று இந்த கட்டுரையின் ஆசிரியரான ஷெலீனா ஜன்மொஹம்மத், பிரிட்டன் நாளேடான `டெலிகிராஃப்`இல் தெரிவித்துள்ளார்.

புத்தகத்தின் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. பெண்களின் பாரம்பரிய நம்பிக்கைகளை குறிவைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பதாகவும், பெண்களின் உடலை நுகர்வுப் பொருளாக பார்ப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பெண்களே பிரதானம்

இந்த விமர்சனங்களை இதனை எழுதிய ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. "புத்தகத்தை பாராட்டியும், ஆதரித்தும் மின்னஞ்சல் மூலம் பரவலாக ஊக்கம் கிடைத்துவருவதாக கூறுகிறார். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த புத்தகத்தை பரிசாக கொடுக்க விரும்புவதாக ஒரு மசூதியின் இமாம் எழுதியிருப்பதாக, `டெலிகிராஃப்`க்கு கொடுத்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

புதுமண தம்பதியர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருப்பதாக கூறும் எழுத்தாளர் அதுவும் ஒருவகையில் பாராட்டே என்கிறார். ஏன் தெரியுமா? 'இந்த புத்தகம் பெண்களை மட்டுமே மையப்படுத்துகிறது. ஆண்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல், புறக்கணித்தது ஏன்?' என்பதே அந்த எதிர்மறையான விமர்சனமாம்!

மகளிர் மன்றங்களும், அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்கு அமோக ஆதரவளித்திருப்பதாக கூறும் பிரிட்டன் நாளிதழ் 'த அப்சர்வர்', தாம்பத்யத்தில் ஏற்படும் அதிருப்தியால் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் திருமண உறவுகள் முறிந்து போகாமல் பாதுகாக்கவும், அவர்களின் பாலியல் உரிமையை புரிந்துக் கொள்வதற்கும் இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் என்றும் கூறுகிறது.

"நான் இந்த புத்தகத்திற்கு முழு மனதோடு ஆதரவளிக்கிறேன். ஏன் கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் தலைவர் ஷாயிஸ்தா கோஹிர். பாலியல் உறவைப் பற்றி பேசுவது புதுமையானது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பாலியல் உறவில் பெண்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவுறுத்தல்களையும் ஷாயிஸ்தா கோஹிர் சுட்டிக்காட்டுகிறார்.

http://www.bbc.com/tamil/global-40669910?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம் சாப்பிடுவது என்றால் ........?
ஹலால் ஓதிய பின்புதான் சாப்பிட வேண்டுமா ?

முஸ்லீம்கள் காலால் கடைகளில்தான் அநேகமாக இறைச்சிகள் 
வாங்குகிறார்கள் ...
வேறு இடத்திலும் வாங்கலாமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோ.. அப்ப இப்ப விளக்கக் குறைவா இருந்தே இத்தனையைப் பெத்துப்போடுதுங்க.. எனி விளங்கிட்டா... நிலைமை...?! tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

மச்சம் சாப்பிடுவது என்றால் ........?
ஹலால் ஓதிய பின்புதான் சாப்பிட வேண்டுமா ?

முஸ்லீம்கள் காலால் கடைகளில்தான் அநேகமாக இறைச்சிகள் 
வாங்குகிறார்கள் ...
வேறு இடத்திலும் வாங்கலாமா ? 

Bildergebnis für Hassan Jameel: Some Things to Know About Rihanna Billionaire Boyfriend

அரபு/முஸ்லீம் பெருந்தகைகள் பலர் கலால் ஓதிய இறைச்சியைத்தான்விரும்பி உண்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் பிற மதக்களுடன் தான் பிரச்சினை என்று பார்த்தால், அவையளுக்குள் பெரும் பிரச்சனை.

சியா, சன்னி பிரச்சனை பெரும் பிரச்சனை.

இதுக்குள் லண்டனில் இந்திய முஸ்லீம் பெண், மத்திய கிழக்கு முஸ்லீம் நபரை காதலித்ததால், கடத்தப்பட்டு கொல்லப் பட்டுள்ளார்.

இதில் கொடுமை என்னெவெனில், இந்த கவுரவ கொலைக்கு ஆர்டர் கொடுத்தது தாய் தகப்பன்... குடுப்பத்தினர்.

பெண்ணையும் அவரது தோழியையும் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தே கொலை செய்துள்ளனர் கொலையாளிகள்.

மகள் இறந்துவிடடார். இறந்து விட்டதாக நினைத்து விட்டு செல்லப் பட்ட தோழி போலீசாரை அழைத்துள்ளார்.

கொல்லுறது என்று முடிவாகி விட்டது. பாலியல் பலாத்காரம் செய்துவிட்டே கொள்ளுவோம் என்று நினைத்து உள்ளனர்.

ஆனால் இதுவும் கவுரவக் கொலை செய்ய ஆர்டர் கொடுத்ததின் மேலதிக ஓர்டரா என்பதே, மில்லியன் டொலர் கேள்வி.

தமிழகத்தில் ஆணவக் கொலை நடக்கிறது தான். அது சாதி எனினும் பாலியல் பலாத்காரம் செய்யுமாறு ஆர்டர் போகுமா என்று தெரிய வில்லை. 

http://www.mirror.co.uk/news/uk-news/first-picture-teenager-raped-murdered-10865782

இதில் முதன்மைக் கொலையாளி பெண்ணின் சித்தப்பா என sun பத்திரிகை தெரிவிக்கிறது.tw_dissapointed_relieved:

இந்த சித்தப்பாவின் பாலியல் வன்கொடுமை கவுரவக் கொலையின் நோக்கத்தினையே சிதைத்து விடுவதாய் உள்ளதை பலரும் எழுதி, இவர்களது கலாச்சாரம் என்ன என எழுதுகின்றனர். 

இது கனடா கேஸ்

http://www.macleans.ca/news/canada/inside-the-shafia-killings-that-shocked-a-nation/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:
 

இது இங்கு ஒரு அமெரிக்க தொலைகாடசியில் விபரண படமாக போடடார்கள் 

வீடியோ கிடைத்தால் இணைக்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இது இங்கு ஒரு அமெரிக்க தொலைகாடசியில் விபரண படமாக போடடார்கள் 

வீடியோ கிடைத்தால் இணைக்கிறேன். 

 

ம்... அந்த காதலனும் முஸ்லீம் தான்.

இந்த குழந்தைகள் நல அமைப்பு சப்புக் கட்டுவது வழமைதான். இங்கு அதன் தலைமை அதிகாரியே பதவியை விட்டு ஓடும் நிலை வந்தது.

இருப்பினும் அவர்களது நிலை சிக்கலானது. ஒரு குடும்பத்தின் சில்லறைப் பிரச்சனைக்குள் மூக்கை நீட்டுவதும் ஆபத்தானது. நீட்டாமல் விடுவதும் ஆபத்தானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.