Jump to content

இன்னும் இரு பௌர்ணமி பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.!” சூளுரைக்கிறார் மஹிந்த


Recommended Posts

mahinda.jpg

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/22176

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர் எப்படி தான் தலையால கிடங்கு கிண்டினாலும் பிரதமராகப் போகவில்லை. மைத்திரி அழைக்கப் போவதில்லை.

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

என்னது  அது ??நாதா:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனி ஒருவன் said:

என்னது  அது ??நாதா:unsure:

சிங்களவர் எதுவுமே பகிரமாட்டார்கள் என்ற செய்தி.

சுஜ நிர்ணைய உரிமை குறித்த குடியொப்பம் என்னும் குண்டினை தூக்கி வீசும் நிலையில் வடக்கு முதல்வர் தான் இருக்கின்றார்.

இதனால் தான் விக்கியரை துரத்த சிங்களவர் முயன்றார்கள். அது மட்டுமல்ல, இதன் காரணமாகவே கிழக்கு முதல்வர் பதவி தமிழர் கையில் இல்லை. 

இருந்தவரையும், மீண்டும் வரக்கூடும் என்றே, உள்ளே வைத்து உள்ளனர்.

கிழக்கு தமிழர்கள் செய்யக் கூடிய ஒரே வேலை, சிந்தாமல் சிதறாமல் தமது வாக்குகளை செலுத்தி, இவ்வாண்டு தேர்தலில் தமிழ் முதல்வர் வர வழி சமைக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சிங்களவர் எதுவுமே பகிரமாட்டார்கள் என்ற செய்தி.

அவை செய்தியாகவே மட்டும் இருக்கும்போல் தெரிகிறது, ஏனெனில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் தெற்கு ஆசியாவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் பக்கத்து பெரியண்ணன் முடிந்தவரை பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

உளவியல் யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர் எப்படி தான் தலையால கிடங்கு கிண்டினாலும் பிரதமராகப் போகவில்லை. மைத்திரி அழைக்கப் போவதில்லை.

தமிழரைப் பொறுத்த வரை, இவர் வருவது நல்லது. உலகத்துக்கு சிறந்த செய்தி கிடைக்கும்.

உலகத்திற்கு சிறந்த செய்தி மட்டுமல்ல ஒரு குட்டிப் பாப்பாவும் கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அவை செய்தியாகவே மட்டும் இருக்கும்போல் தெரிகிறது, ஏனெனில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் தெற்கு ஆசியாவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் பக்கத்து பெரியண்ணன் முடிந்தவரை பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவைத்திருக்கிறார்கள்.

ம்...

மகிந்தர் வந்தால்.... பெரியண்ணர் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

சீனாக் காரனின் பெரு திட்டத்தின் வெற்றியாகவே அது இருக்கும்.

அந்த நிலையில் மேலை நாடுகள் நிகழ்ச்சி நிரலை மாத்தி தாமே நேரடியாக கையாள முனைவார்கள். இதன் காரணமாகவே மகிந்த வர வாய்ப்பில்லை.

இலங்கை அரசியல் ஒரு குழப்ப நிலை. ஐக்கிய தேசிய கட்சி ஆதரவில் சுதந்திர கட்சியின் சுகாதார அமைச்சர் ஜனாதிபதி ஆனார். பின்னர் அக்கட்சியின் தலைவர் ஆனார்.

கருணாநிதி, ஜெயா வை விழுத்த சசிகலாவை ஆதரித்த கதை. இங்கே மைத்திரி மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும், ( ஜெயலலிதா) மகிந்த ஜீரணிக்க முடியாமல் அடிபட்ட நாகம் போல திரிகிறார்.

அவரை வழக்குகளால் சிக்க வைக்க வேண்டிய கருணாநிதியோ (ரணில்), கட்சி அடிபட்டு உடைந்தால், தனது கட்சிக்கு நல்லது என்று அது குறித்து கவனம் எடுக்க வில்லை என்று (சசிகலா) மைத்திரி கவலை.

சகல அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டே கவலைப் படுவதே மைத்திரி ஸ்டைல்.

இதனிடையே, சுதந்திரக் கட்சி தனது தன் மானத்தை, ரணில் கட்சியிடம் அடகு வைத்து விட்டது என்று மகிந்த உரு வேத்துகிறார், தனது கட்சிக்காரர்களிடம்.

இந்தக் கூப்பாடு எல்லாம் அந்த உரு ஏத்துதல் தான். 

ஆனாலும் மகிந்த ரணிலைக் கவிழ்த்து தன்னைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்கிறார்.

இலங்கை சட்டப்படி 1. மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக முடியாது (19 வது அரசியலமைப்பு திருத்தம் ) 2. மீண்டும்  ஜனாதிபதியாக முடியும் (18 வது அரசியலமைப்பு திருத்தம் ) 3. ஜனாதிபதி இறந்தால் பிரதமர் ஜனாதிபதி ஆவார்.

இப்போது மகிந்தவின் திட்டப்படி பிரதமராயின்,

1. முதல் வெடி மைத்திரிக்கு.
2. பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்து 19 வது அரசியலமைப்பு திருத்தம் ரத்து செய்து விடடால், 18 படி அவரே ஜனாதிபதி.

இதன் காரணமாகவே அரசியலைப்பு மாற வேண்டாம் என்கிறார். மாறினால் பிரதமரே அதிகாரம் மிக்கவர் ஆவர், ஜனாதிபதி டம்மி போஸ்ட்.

ஆனால் தமிழருக்கு அதிகாரம் கொடுக்கப் போகின்றனர் என்று கதை விட்டுக் கொண்டே, அரசியல் அமைப்பு மாறுதல் வேண்டாம் என்கிறார்.

Link to comment
Share on other sites

இரண்டு பௌர்ணமி தினங்களில் காத்திருக்கிறது அரசுக்கு அதிர்ச்சி ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Published by Gnanaprabu on 2017-07-22 10:12:33

 

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து மிகப்­பெ­ரிய குழு­வொன்று விரைவில் எம்­முடன் இணை­ய­வுள்­ளது. இன்னும் இரண்டு பௌர்ணமி  தினங்கள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்­தி­ருக்­கின்­றது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்தும் ஒரு குழு இணைந்­து­கொள்ளும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். 

ஒரு அணி அர­சியல் அமைப்பு சபையில் இருந்­து­கொண்டும்  ஒரு அணி வெளி­யே­றியும் புதிய அர­சியல் அமைப்பை தடுப்­பதே தமது திட்டம் எனவும் குறிப்­பிட்டார். 

கொழும்பு விஜ­ய­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்­லத்தில் பொது எதி­ரணி கட்சி தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது. இதன் போது புதிய அர­சியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்­வுகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதன்­போது மஹிந்த ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ  தொடர்ந்து  கருத்து தெரி­விக்­கையில், 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தை ஒரு­போதும் நாம் ஏற்­று­கொள்ள மாட்டோம். இப்­போது கொண்­டு­வர முயற்­சிக்கும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக நாட்டின் ஐக்­கியம், நிறை­வேற்று அதி­கார முறைமை உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே இது குறித்து பொது எதி­ர­ணியின் நிலைப்­பாட்டை ஆராய்ந்தோம். 

அதன்­போது ஒரு குழு­வினர் அர­சியல் அமைப்பு குழுவில் இருந்து வெளி­யே­று­வ­தா­கவும் இன்­னொரு குழு­வினர் அர­சியல் அமைப்பு சபையில் இருந்து போரா­டு­வ­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்த பொது உடன்­பாட்­டுக்கு வந்­ததன் பின்­னரே விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­னணி அர­சி­ய­ல­மைப்பு சபையில் இருந்து வெளி­யே­றவும் ஏனைய கட்­சிகள் அங்கம் வகிக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

அர­சாங்­கத்தில் இருந்து முக்­கிய உறுப்­பி­னர்கள் கொண்ட குழு­வொன்று எம்­முடன் இணை­னைய தயா­ராக உள்­ளது. ஆகவே நாமும் எமது அணியை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்து வரு­கின்றோம். அர­சாங்­கத்தில் இருக்கும் எவ­ரு­டனும் நான் கலந்­து­ரை­யா­ட­வில்லை. எனினும் மூன்று பேருடன் நான் தனிப்­பட்ட ரீதியில் பேசி­யுள்ளேன். அவர்கள் மூவரும் முதலில் எம்­முடன் இணை­வார்கள். 

Local_News_copy_copy.JPG

மிகப்­பெ­ரிய குழு­வொன்று  பொது எதி­ர­ணியில் கைகோர்க்கும். 17 பேர்  நிச்­ச­ய­மாக என்­னுடன் இணை­வார்கள்.  அதை­விட அதி­க­மான உறுப்­பி­னர்­களும் வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இப்­போது அர­சாங்கம் செல்லும் நிலையில் ஐக்­கியப் தேசியக் கட்­சியின் அரை­வாசி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள்.  ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தில் திருப்­தி­யுடன்  இல்லை. அவர்­க­ளுக்­கான சரி­யான இடம் வழங்­க­ப­ட­வில்லை. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர். ஆகவே இன்னும் சிறிது காலத்தில் நிலை­மைகள் மிகவும் மோச­மாக அமையும் என்றார்.  

 பிவி­துரு ஹெல உறு­மைய  கட்­சியின் தலைவர் உதய கம்­மன்­பில கூறு­கையில், 

பொது எதி­ர­ணியில் உள்ள சகல கட்­சி­களும் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தை ஆத­ரிக்­க­வில்லை. அனை­வ­ருமே புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­திற்கு எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம்.  அர­சியல் அமைப்பை தோற்­க­டிக்கும் நகர்வில் எம்­மி­டையில் வேறு­பட்ட நகர்­வுகள் இருந்த போதிலும் மாநா­யக்க தேரர்­களின் நிலைப்­பாடு என்­னவோ அதே நிலைப்­பாட்டில் தான் நாமும் உள்ளோம்.  வெவ்­வேறு பாதை­களில் பய­ணித்­தாலும் நாம் இறு­தியில் ஒரு இடத்­தையே வந்­த­டைவோம் என்றார்.  

ஜன­நா­யக  இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் வாசு­தேவ நாண­ய­கார கூறு­கையில், 

அர­சியல் அமைப்பு குழுவில் நாம் இணைந்து செயற்­படக் கூடாது என்­பது ஆரம்­பத்தில் இருந்தே விமல் வீரவன்சவின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் நாம் இதில் அங்கம் வகிக்க வேண்டும். அப்போது தான் நாம் எமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் கிடைக்கும். இறுதியான தீர்மானைத்தில் நாம் ஏற்றுகொள்ள முடியாத நிலைப்பாடு எட்டப்படும் நிலையில் அதில் இருந்து நாம் விலக வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/22192

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.