Jump to content

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!


Recommended Posts

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் - விவியன் பாலகிருஷ்ணன்!

 

தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனிமேலாவது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறிவையும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்புக் கணிசமானளவு இருந்ததாகவும் தெரிவித்த அவர் குறிப்பாக கல்வி, மருத்துவம், வீதிக் கட்டமைப்பு என்பவற்றின் வளர்ச்சிகளில் அவர்கள் பிதாமகர்களாகத் திகழ்ந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இலங்கைத் தமிழருமான ராஜரத்தினத்தின் இல்லத்திற்கும் நேரில் சென்று அவர் வாழ்ந்த வீட்டினைப் பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=74061

Link to comment
Share on other sites

6 minutes ago, Athavan CH said:

”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனிமேலாவது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறிவையும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கன் பக்குவமா நெருப்படி கொடுத்திருக்கிறார்!

புத்தியுள்ள மனிதர்களுக்கு இது விளங்கி, அதை அவர்கள் செயலிலும் காட்டினால் நல்லது நடக்கத்தானே வேணும்.

Link to comment
Share on other sites

இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

Link to comment
Share on other sites

34 minutes ago, Athavan CH said:
  • இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

நம்மட ஆட்கள் சொல்லி எவன் சார் கேட்கிறான்.? வெளிநாட்டவன் சொல்லனும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவியன் பாலகிருஷ்ணன், இலங்கைத் தீவில் உள்ள இரண்டு தேசிய இனங்களில் ஒன்று இன்னொன்றின் இருப்பை இல்லாதொழிப்பததற்கு முயலும் பிரச்சனையின் இன்னோர் பரிமாணத்தை மிகவும் தத்தரூபமான ரூபாபமான முறையில்  தான் அறியாமலே கூறியுள்ளார்.

அந்தப் பரிமாணம் இலங்கைத் தீவி உள்ள வளங்களை மற்றும் இயற்கையாகவோ செயறகையாகவோ பெறப்பட்ட செல்வங்களையும் மற்றும் சௌபாக்கியங்களையும், அளவில் பெரிய இனம் முழுவதும் தன்னைக்கே உரித்து துடையது என்றும், அளவில் சிறிய இனம் தனது  பூர்வீகக அடிப்படியில் உரிமை கூறும் போது, அளவில் பெரிய இனம் அளவில் சிறிய இனத்தின் இருப்பையே  இல்லாதொழிப்பததற்கான முயறசியில் மிகவும் வெளிப்படையான முன்னேற்றங்களை கண்டுள்ளது.

சுருக்கமாக சொல்வதானால் தமிழரது உழைப்பை யார் அனுபவிக்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை சிங்களம் தானே தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதற்காக பூர்வக மற்றும் வரலாற்று அடிப்படியில் உள்ள சகல சவால்களையும், ஓர் இனத்தின் இருப்பை கூட, அழிப்பதற்கு முயல்கிறது.

இதனால் தன இந்தப் பிரச்னை ஓர் தேச அரசு என்ற அமைப்புக்குள்ளே   தீர்க்கப்பட முடியாது.

அப்படி முடியுமாயின், அந்த ஓர் தேச அரசு என்பது தற்போதைய உலக வழக்கிலுள்ள ஓர் தேச அரசு என்ற அமைப்பின் அடிப்படையான பண்பான ஒரேயொரு  மக்களின் இறைமை, நிலப்புல ஒருமைப்பாடு மற்றும் ஒரேயொரு பாதுகாப்பு அதிகார மையம் என்பதில் இருந்து மிகவும் விதிவிலக்காவே இருக்கும். 

இதை விவியன் பாலகிருஷ்ணன் ஹிந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளிடம் தனக்கே உரிய ராஜதந்திர மொழியில் சாதாரண உரையாடல்களில் அவ்வப்போது கூறுவாரானால், இலங்கைத் தீவில் உள்ள பூர்விக தமழரிற்கு சிங்கப்பூர் ஆற்றும் மிகப் சிறிய உதவி ஆகும்.   

இலங்கை பூர்வீக தமிழரிடம் வளங்கள் தற்போதும் இல்லாமல் இல்லை. உதாரணமாக, புலம் பெயர் தமிழரிடம் நிறையவே கடினமான மற்றும் மென்மையான வளங்கள் (உயர் தொழில்நுட்பம், அதை பிரயோகிக்கும்  மற்றும்  மெருகூட்டும் திறமை) ) மற்றும் செல்வங்கள்  உள்ளன. ஆனல் இவற்றை இலங்கையில் உள்ள தமிழரின் முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்திக்காக தமது சுய விருபின் அடிப்படையில், நிறுவன முறைப்படுத்தி பாவிக்க முடியாது.

 

 

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின்  கைகள்  வெட்டப்படுவதை   கட்டப்பட்டுள்ளதை

சர்வதேச  அளவில் நீங்கள் சொல்லலாமே

அதை நீங்கள் செய்வதே எமக்கு நீங்கள் ஆற்றும் மிகச்சிறிய  உதவியாக இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Athavan CH said:

இதனை நம்மட நெடுக்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்

 

Quote

 

nedukkalapoovan

  • நெடுக்ஸ்
  •  
  • nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
  •  4,536
  • 27,816 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

 

நாங்க சொல்வதையே இவர் சொல்வது போன்று தோன்றினாலும்.. பெரும்பான்மையாக.. மலே பேசும் மலேசியாவில் இருந்து ஒரு குட்டி சுதந்திர தேசமாக எழுந்து நிற்கும் சிங்கப்பூரால் தான் சிங்கப்பூராக நிற்க முடிகிறது. இதையே தான் தமிழர்கள் நாங்கள் எங்கள் நிலப்பரப்பில் எங்கள் ஆட்சி அதிகாரங்களோடு எங்களை சுதந்திரமாகவும்.. எமது ஆற்றலை அறிவைப் பயன்படுத்தி முன்னேறவும் விடுங்கள் என்று கேட்கிறோம். இதற்கு சிங்கப்பூர் சார்பில் இவர் பகிரங்க ஆதரவை யாழ் மண்ணில் வைத்துத் தெரிவித்துச் சென்றிருந்தாலோ.. அல்லது.. சிங்கள ஆதிக்க விருவாக்கத்தை கடிந்து சென்றிருந்தாலோ வரவேற்றிருக்கலாம். ஆனால்.. சிங்கள ஆதிக்கத்துக்குள் தமிழரைப் பார்த்து.. உலகுக்காக உழைச்சது போதும்.. உங்களுக்காக உழையுங்க.. என்று.. இவர் கேட்பது இவரின் சுயமுரண்பாட்டுக்குரிய கருத்தாகவே தோன்றுகிறது. ஒருவேளை யாழை வாசிட்டு பேசி இருப்பாரோ.. கலந்தடிச்சு ஒரு தெளிவில்லாமல். 

ஆனாலும்.. எங்கட ஆக்களுக்கு மணிகட்டின.. மாடு சொன்னால் தானே புரியும்.. அல்லது புத்தியில் நுழைய மனசு இடம்கொடுக்கும்.. என்ற அடிப்படையில்..... இப்பவாவது சில அடிப்படைகளைப் புரிய வேண்டிய தேவை உள்ளதை இவரின் பேச்சு எம்மவருக்கு உணர்த்திச் சென்றிருந்தால் நல்லம். ஆனால்.. இவரின் பேச்சு முழுமையாக சரியான திசையில் தமிழர்களை வழிநடத்தத் தவறிவிட்டுள்ளது. பல உள்ளீடுகள் மறைபொருளாக்கப்பட்டுள்ளன. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Athavan CH said:

உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்!

ஐயா! எங்களுக்கு பக்கத்திலை பெரியதொரு வில்லங்கம்(கிந்தியா) குறுக்காலை நிக்கும் வரைக்கும் சொந்தமண்ணிலை எதுவுமே சரிவர நடக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஐயா! எங்களுக்கு பக்கத்திலை பெரியதொரு வில்லங்கம்(கிந்தியா) குறுக்காலை நிக்கும் வரைக்கும் சொந்தமண்ணிலை எதுவுமே சரிவர நடக்காது. 

உண்மைதான்.அதுக்காக நெடுக சும்மாவும் இருக்க முடியாது அபிவிருத்தி விடையத்தில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.