Jump to content

விக்ரம் வேதா திரை விமர்சனம் விக்ரம் வேதா திரை விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா.

எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார்.

அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்மை தேடி வந்தானா? அப்படி வந்தால் எதற்காக வந்தான்? என பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

ஒரு போலிஸ் ஒரு திருடன் என இதுவரை பல படங்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு வகை தான் இந்த விக்ரம்வேதா A saw devil, Dark Knight போன்ற படங்கள் போல ஒரு ஆடுபுலி ஆட்டமே இந்த விக்ரம்வேதா.

இதில் டார்க் நைட் சாயல் கொஞ்சம் தூக்கல் தான், மாதவன் இதற்கு பிறகு தான் சிறந்த நடிகர் என்று நிரூபிக்க தேவையில்லை, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டை இதற்கு மேல் நம் கண்முன் யதார்த்தமாக கொண்டு வரமுடியாது.

அவருக்கு கொஞ்சம் கூட குறை வைக்கவில்லை விஜய் சேதுபதி. எப்போதும் மாதவனை தேடி வந்து ஒரு கதை சொல்கிறேன் என ஒரு கதையை ஓபன் செய்து அதிலிருந்து மாதவனுக்கு சில ஐடியா கிடைத்து, அதன் மூலம் விஜய் சேதுபதி தனக்கு தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வது என மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு திரைக்கதை.

அதிலும் குறிப்பாக தன் மனைவியின் கையில் ஏற்படும் காயம், வரலட்சுமி கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்தும் மாதவன் கண்டுப்பிடிக்கும் காட்சிகள் சுவாரசியம். ஒரு தருணம் யார் நல்லவன், யார் கெட்டவன், எது தீர்மாணிக்கின்றது என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர் புஷ்கர்-காயத்ரி.

வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையின் நிழல் உலகத்தை கண்முன் கொண்டு வருகின்றது. சாம் இசையின் பின்னணி மிரட்டல், அதிலும் விஜய் சேதுபதிக்கு வரும் பின்னணி பாடல் பாதி கதையை சொல்கின்றது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.

டெக்னிக்கல் விஷயங்கள், கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

படத்தின் வசனம் பெரும் பலம் ‘உன் கையில் ரூ 10 கோடி கொடுத்தால், நீ என்னை இங்கு விட்டு, பிறகு மீண்டும் அந்த ரூ 10 கோடி பணத்தை என்னிடம் கொள்ளையடிக்க தான் வருவாய்’ என மாதவன் விஜய் சேதுபதியிடம் பேசும் பல வசனங்கள் யோசித்தாலே புரியும் வகை.

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, அத்தனை சுவாரசியம், நுணுக்கமாக செல்லும் படத்தில் கிளைமேக்ஸ் சண்டை கொஞ்சம் யதார்த்தம் விலகி நிற்கின்றது.

மொத்தத்தில் வேதா கதை சொல்ல ஆரம்பித்தால் பரபரப்பாவது விக்ரம் மட்டுமில்லை, ஆடியன்ஸும் தான்.

http://www.cineulagam.com/films/05/100847

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

விக்ரம் வேதா - இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம்

எப்போதுமே மலையாளப் படங்கள் மேல சினிமா விரும்பிகளுக்கு ஒரு காதல் இருக்கவே செய்யும். இப்போ ரிலிசாகுற மலையாளப் படங்களை தியேட்டர்லயோ அல்லது டவுன்லோடியோ பாத்துரலாம். ஆனா 1980 காலகட்டங்கள்ல வெளியான மோகன்லால் மற்றும் மம்முட்டியுடைய வளர்ச்சியடைந்த காலங்கள்ல வெளிவந்த மலையாளப் படங்களையெல்லாம் பார்க்கனுங்குற ஆவல் இருந்தாலும் பாக்குறதுக்கு முடியாம இருந்தது. அந்த ஆவலுக்குத் தீனி போடுற மாதிரி கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட க்ளாசிக் மலையாளப் படங்கள் ஹாட்ஸ்டார் ஆப்ல ஆங்கில சப்டைட்டில்களோட காணக் கிடைக்குது. அப்படிப் பாத்ததுதான் மம்முட்டியுடைய "ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு". இது ஒரு மர்டர் மிஸ்டரி. சாதாரணமா ஆரம்பிக்கிற படம் சாதாரணமான ஒரு இடைவேளை முடிஞ்சி சிறு சிறு டிவிஸ்ட்களோட மெல்ல மெல்ல முன்னேறி அசாதாரணமான ஒரு க்ளைமாக்ஸ்ல போய் முடியும். ரிலிசான நேரத்துல சென்னையில மட்டும் டப்பிங் செய்யப்படாமலயே ஒரு வருடத்துக்கும் மேல ஓடிருக்கு. சரி இப்போ ஏன் இதெல்லாம் சொல்லிட்டிருக்கேன்... விக்ரம்வேதா படமும் கிட்டத்தட்ட இதே திரைக்கதை அமைப்புடைய ஸ்லோ பாய்சன் வகையறாப் படம்தான்.

madhavan and vijay sethupathi

புஷ்கர்-காயத்ரி இரட்டை இயக்குனர்களின் வியக்க வைக்குற திரைக்கதை மற்றும் மேக்கிங். இறுதிச்சுற்றுல காட்டுன அதே நேர்மையான கோவத்தோட மாதவன். ஜிகர்தண்டாவுல விட்டதைப் புடிக்குற வெறியில விஜய் சேதுபதி. மூனும் சந்திக்குற இடம் ஒரு க்ளாஸ் மூவியை உருவாக்கிடுச்சு.

வேதாளமான விஜய்சேதுபதி போடுற புதிர்களுக்கான விடையை விக்ரமாதித்யனான மாதவன் எப்படிக் கண்டுபுடிக்குறார்ங்குறதுதான் கதை. அது விறுவிறுப்பா இல்லைன்னாலும் படத்தோட முக்கியக் கதாபாத்திரங்களோட கெத்தான நடிப்பு, நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு அவிழ்ந்து விழுற முடிச்சுகள் இந்த வருடத்தின் பெஸ்ட் மூவியா விக்ரம்வேதாவை மாத்துது.

மாதவன் விஜய்சேதுபதி ரெண்டு பேரோட ஸ்க்ரீன் பிரசன்ஸே போதுமானதா இருக்கு. விஜய்சேதுபதியோட பெஸ்ட் இன்ட்ரோ இன்னிக்கு தேதி வரை இதுதான். இறுதிசுற்றுல விதைச்ச நம்பிக்கையை மாதவன் ஒருபடி மேல கொண்டுபோய்ட்டாரு (இந்த நேரத்துல "வேட்டை" நினைவுக்கு வந்து பீதியாவதையும் தவிர்க்க முடியல). இரண்டு பெரிய நடிகர்கள் நடிச்சிட்டாங்கங்குறத விட அவங்களைத் தவிர்த்தும் கவனிக்கிறதுக்கு நுணுக்கமான நிறைய விசயங்கள் இருக்கு. அதுதான் படம் முடிஞ்சு வெளிய வரும்போது முழுமையான திருப்தியைக் கொடுக்குது.

மாதவனுடைய மனைவியா வர்ற கன்னட நடிகை ஸ்ரதா. கதிரின் காதலியான வரலட்சுமி. ரெண்டுபேருமே ரெண்டுவிதமான ஒரே அன்பை வெவ்வேறு தளங்கள்ல இருந்து வெளிப்படுத்துறாங்க. அதோட விவேக் பிரசன்னாவை பாத்தாலே காண்டாவுது. அப்படி பெர்ஃபாமன்ஸ்.

ஒரு சின்ன உறுத்தல் என்னன்னா வடசென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்ல வாழுற மக்களை, குழந்தைகளையும் கூட ரவுடிகளுக்கு துணைபோற மாதிரியும் போதைக் கடத்தலுக்கு உதவுற மாதிரியும் சில காட்சிகள்ல காட்டுனதுதான்.

மாதவனுடைய மனைவியை வேதா உபயோகிக்குற விதம் வேதா ஒரு இன்டலிஜன்ட்டான ரவுடிங்குறதுக்கு ஒரு ஷேம்பிள். இயக்குனர்களோட திறமைக்கும் அது ஒரு ஷேம்பிள்.

பி. கு :நல்ல சினிமாவை சப்போர்ட் பண்ணனும்ங்குற எண்ணமெல்லம் தூள் தூளா உடைஞ்சி போய்டுச்சி. ஜிஎஸ்டிக்கு அப்புறம் பார்த்த முதல் படம் இதுதான். டிக்கெட் விலை 70 ரூபாய்.

http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/33523-2017-07-25-04-01-21

Link to comment
Share on other sites

நேற்று திரையரங்கம் சென்று இப் படத்தை பார்த்தேன். நல்ல படம். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கதை உருவாகி, கதைக்குள் கதைகள் சென்று விறுவிறுப்பாக முடிச்சுகள் அவிழ்ந்து நிறைவுறுகின்றது. தமிழில் இப்படியான கதையமைப்பு கொண்ட படம் வேறு இல்லை என நினைக்கின்றேன்.

ஒரு சிறு காட்சியில் எம் கவனம் தவறினால் கூட படத்தின் அடுத்து வரும் சில காட்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். புத்திசாலித்தனமான சினிமா.

விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நேற்று திரையரங்கம் சென்று இப் படத்தை பார்த்தேன். நல்ல படம். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கதை உருவாகி, கதைக்குள் கதைகள் சென்று விறுவிறுப்பாக முடிச்சுகள் அவிழ்ந்து நிறைவுறுகின்றது. தமிழில் இப்படியான கதையமைப்பு கொண்ட படம் வேறு இல்லை என நினைக்கின்றேன்.

ஒரு சிறு காட்சியில் எம் கவனம் தவறினால் கூட படத்தின் அடுத்து வரும் சில காட்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். புத்திசாலித்தனமான சினிமா.

விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை!

நீங்கள் கூடவா வருவை (வரலட்சுமி) மறந்துவிட்டீர்கள். அந்தப் பார்வை உங்களை பாதிக்க வில்லையா..... வெரி சொறி......!  tw_blush:

 Résultat de recherche d'images pour "varalaxmi vikram vedha"

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்கு பின் நல்ல ஒரு படம் பார்த்த ஓர் உணர்வு. விஜய் சேதுபதி, மாதவன். வரலட்சுமி நடிப்பில் விட்டுக்கொடுக்காமல் செய்கிறார்கள். 

கணவன்  பின் தொடர்கிறார் என தெரிந்தும் சேதுபதியை தொழில் ரீதியாக வாகனத்தில் இருவரும் சந்தித்து சேதுபதி தன்னை ஒப்பிவிக்கும் போது வரலட்சுமியின் நடிப்பு நன்றாக இருந்தது.

 

விஜய் சேதுபதி. மாதவன் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்கலாமா வேண்டாமா

ஆனால் இங்க தியட்டரில் 400 ரூபா அதான் பஜட் இடிக்க 50 ரூபா சீடி நல்ல சீடிக்காக காத்து கொண்டிருக்கிறன் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள திரை விமர்சன குழு கொடுத்துள்ள றீவியு அமர்க்களமாய் உள்ளது என்பதால் இன்று செல்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Sasi_varnam said:

யாழ்கள திரை விமர்சன குழு கொடுத்துள்ள றீவியு அமர்க்களமாய் உள்ளது என்பதால் இன்று செல்கிறேன். :)

உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்த்து 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.