Jump to content

தலை நிமிர்வோம்!


Recommended Posts

தலை நிமிர்வோம்!

 
 
 

யாழ்ப்பாணம் வந்­தி­ருந்த சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் யாழ்ப்­பா­ணத்­த­வர்­களே மறந்­தி­ருந்த அவர்­க­ளின் பெரு­மை­கள் பல­வற்றை மீட்­டுப் பார்த்­தி­ருக்­கி­றார்.

அத்­தோடு ஈழத் தமி­ழர்­க­ளுக்கு உறைக்­கும் விதத்­தில், நீங்­கள் இந்த உல­கத்­தின் மற்­றைய பாகங்­க­ளுக்­கெல்­லாம் உழைத்­துக் கொடுத்­தது போதும், இனி­யா­வது உங்­க­ளுக்­காக உழைக்­கப் பாருங்­கள் என்று குத்­திக்­காட்­டி­விட்­டும் போயி­ருக்­கி­றார்.

இலங்­கை­யின் அர­சி­யல் பொரு­ளா­தா­ரத்­தில் அடிக்­கடி உச்­ச­ரிக்­கப்­ப­டும் ஒரு சொற்­றொ­டர், ‘‘ஒரு காலத்­தில் இலங்­கை­யைப் போன்று வள­ர­வேண்­டும் என்று சொல்­லிக் கொண்­ டிருந்­தது சிங்­கப்­பூர், இன்றோ சிங்­கப்­பூ­ரைப் போன்று வளர ­வேண்­டும் என்று சொல்­லும் நிலை­யில் நாம் இருக்­கின்­றோம்’’ என்­ப­து­தான்.

கொழும்­பில் இருந்­த­படி போருக்­குத் தலைமை­ யேற்று ஒரு குரு­திச் சக­தியை இலங்­கை­யில் உரு­வாக்­கிய சகல தலைவர்களும் ஏதா­வது ஒரு சந்­தர்ப்­பத்­தில் இத­னைக் கூறித்­தான் இருக்­கி­றார்­கள்.

அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன் கூறி­யது முற்­றி­லும் சரி­யா­னது. ஒரு காலத்­தில் தெற்­கா­சி­யா­வி­லேயே அதி­கம் படித்த சமூ­க­மா­கத் தமிழ் இனம்­தான் இருந்­தது.

இலங்­கை­யைப் பார்த்து சிங்­கப்­பூர் வளர்ந்­தது மட்­டு­மல்ல, அந்த நாட்­டைக் கட்டி வளர்ப்­ப­தற்­கான அடித்­த­ளத்தை இட்ட ­வர்­க­ளில் தமி­ழர்­க­ளுக்­கும் மிகக் கணி­ச­மான பங்கு இருக்­கி­றது என்று ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன். அதி­லும் குறிப்­பா­கக் கல்வி, மருத்­து­வம், வீதிக் கட்­ட­மைப்பு என்­ப­வற்­றின் பிதா­ம­கர்­கள் தமி­ழர்­கள்­தான் என்ற உண்­மை­யை­யும் அவர் போட்­டு­டைத்­தி­ருக்­கி­றார்.

இங்­கி­ருந்து சென்ற தமி­ழர்­கள் பலரே சிங்­கப்­பூரை இந்­த­ அள­வுக்கு வளர்த்­தெ­டுத்­தார்­கள் என்­றால், தம்மை அர­வ­ணைத்­துச் செல்­லும் ஒரு அரசு கொழும்­பில் இருந்­தி­ருந்­தால் இலங்­கை­யை­யும் அவர்­கள் எவ்­வ­ளவு தூரத்துக்கு வளர்த்­து­விட்­டி­ருப்­பார்­கள் என்ற சிந்­தனை, விவி­ய­னின் பேச்­சைக் கேட்­ட­தும் ஒரு கணம் மின்­சா­ர­மா­கத் தாக்­கு­கின்­றது.

சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல 19ஆம் நூற்­றாண்­டு­க­ளில் மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­ளி­லும் நிர்­வா­கத்­தில் சிறந்து விளங்­கி­ய­ வர்­கள் தமி­ழர்­களே. கல்­வியே இனி­வ­ரும் காலத்­தில் பலம் என்று உல­கம் மாறி வந்த காலத்­தில் அத­னோடு ஒத்­தி­சைந்து ஓடி தம்­மை­யும் தாம் சென்ற இடங்­க­ளை­யும் வளர்த்­த­வர்­கள் தமி­ழர்­கள்.

துர­தி­ஷ்­ட­வ­ச­மா­கத் தமி­ழ­னின் அந்த அறி­வும், அத­னால் அவ­னுக்­குக் கிடைத்த அதி­கா­ர­முமே இலங்­கை­யில் அவன் மேல் வெறுப்­பும் இனத்­து­வே­ச­மும் மேலோங்­கக் கார­ண­மா­கி­யது என்­ப­தும், அத­னால் இலங்கை கெட்­டுக் குட்­டிச் சுவ­ரா­கிப் போனது என்­ப­தும் மறக்க முடி­யாத, மறக்­கப்­ப­டக்­கூ­டாத தனிக் கதை.

தமி­ழர்­க­ளின் பலம் என்ன என்­ப­தை­யும், அதனை நாம் பயன்­ப­டுத்­தா­ம­லேயே காலத்தை வீண­டிக்­கின்­றோம் என்­ப­தை­யும் எமக்கு நாசுக்­கா­கக் குத்­திக்­காட்­டி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார் அமைச்­சர் விவி­யன்.

அவர் தெளி­வா­கக் குறிப்­பி­டுகி ­றார், ‘‘உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா ­கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் இனி­மே­லா­வது உங்­களை மேம்­ப­டுத்­த­வும் யாழ்ப்­பா­ணத்தை மேம்­ப­டுத்­த­வும் பயன்­ப­டட்­டும்.

அதற்கு நீங்­கள் தகு­தி­யா­ன­வர்­கள், பொருத்­த­மான­ வர்­கள். அதற்­காக நீங்­கள் நீண்ட காலம் காத்­தி­ருந்­தும் விட்­டீர்­கள். எனவே இனி­யா­வது உங்­கள் அறி­வை­யும் திற­மை­யை­யும் உங்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்’’ என்­கி­றார்.

போரில் இருந்து மீண்டு வரும் ஒரு சமூ­கத்­திற்கு உந்து சக்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய ஒரு உரை அது. தனது பெரு­மையை, திற­மையை மறந்­தி­ருந்த, தூக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருந்த சமூ­கத்தைத் தட்­டி­யெ­ழுப்­பும் உரை அது. விவி­யன் அழ­கா­கச் சொன்­னார், நாங்­கள் இப்­போது செய்­வது உங்­கள் மூத்­தோர்­கள் செய்த ­வற்­றுக்­கான கைமாறு; இது வெறும் உத­வியோ தொண்­டுப் பணியோ அல்­ல­வென்று.

அந்த மூத்­தோ­ரின் மூச்­சுக் காற்­றி­லி­ருந்து பலம் பெற்று எழுந்து, நாம் இழந்­து­விட்ட பெரு­மை­க­ளை­யும் திற­மை­க­ளை­யும், திரும்­பப் பெற­வேண்­டும். அனைத்­துத் தமி­ழர்­க­ளும் ஒன்­றி­ணைந்து இப்­போது செய்­ய­வேண்­டி­யது அது­தான். அது­வே­தான் இந்த உல­கின் முன்­னாள் தமி­ழ­னைத் தலை­நி­மிர்ந்து நிற்க வைக்­கும்.

http://newuthayan.com/story/12836.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

தலை நிமிர்வோம்!

...

சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல 19ஆம் நூற்­றாண்­டு­க­ளில் மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­ளி­லும் நிர்­வா­கத்­தில் சிறந்து விளங்­கி­ய­ வர்­கள் தமி­ழர்­களே. கல்­வியே இனி­வ­ரும் காலத்­தில் பலம் என்று உல­கம் மாறி வந்த காலத்­தில் அத­னோடு ஒத்­தி­சைந்து ஓடி தம்­மை­யும் தாம் சென்ற இடங்­க­ளை­யும் வளர்த்­த­வர்­கள் தமி­ழர்­கள்..

....

http://newuthayan.com/story/12836.html

தமிழர்களின் பங்களிப்பை உணர்ந்தமைக்கு நன்றி ஐயா..! bjr1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

நாங்­கள் இப்­போது செய்­வது உங்­கள் மூத்­தோர்­கள் செய்த ­வற்­றுக்­கான கைமாறு; இது வெறும் உத­வியோ தொண்­டுப் பணியோ அல்­ல­வென்று.

தமிழன்டா ....எங்க போனாலும் எழுந்திடுவான்.....நாங்கள் ஐந்தை பத்தை கொடுத்து போட்டு தொண்டு என்று சொல்லிக்கொண்டு திரிகின்றோம்...எங்கன்ட மூத்தோர் நல்ல காரியம் பல செய்துள்ளார்கள்...Jaffna-Fighter_001.jpg

1 minute ago, nedukkalapoovan said:

தமிழர்களிடம் உள்ள திறமை தமிழர்களுக்கு உபயோகம் ஆவதில்லை. அதுதான் அவலம். காரணம்.. போட்டி.. பொறாமை.. ஒன்றை மற்றது முன்னேற உதவாதுகள். 

மாற்றார் தலைமையின் கீழ் அடிமையா அடிமாடாக உழைக்கத் தெரிந்த தமிழனுக்கு.. சொந்தத் தலைமைகளை ஏற்றுக் கொண்டு.. சொந்த மண் மக்களுக்காக உழைக்கத் தெரியாது. அதுதான் அவனின் ஆற்றலும் அறிவும் அவனுக்கு உபயோகம் ஆவதில்லை. காட்டிக்கொடுத்தே அதனை கெடுத்துக்குவான். :rolleyes:

என்னதான் தமிழருக்கு அவரின் தவறுகளை உணர்த்தினாலும்.. தமிழர்கள் தமிழர்களுக்காக உழைப்பது என்பது கடினமான ஒன்று அவர்களுக்கு. இந்த நிலை மாறனும் என்பதே எங்கள் விருப்பம். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் சிந்திக்கனும்.. நாம் தமிழர் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு.. தமிழர் நிலங்களில் தமது ஆட்சி அதிகாரங்களை நிறுவி.. அவற்றை.. உய்விக்க பாடுபடனும்.  :rolleyes:

அடுத்த தலைமுறை மாறும் என்ற நம்பிக்கையில் முடிந்த வரை வாழ்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது....ஆனால் இன்று வெறும் பங்களிப்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் மட்டுமே வாழ்கின்றோம். சரியாக சொல்வதென்றால் யோசியக்காரர்களின் கூண்டில் இரண்டு நெல்மணிகளோடு திருப்தியடையும் கிளிகள் போல் முதலாளித்துவ நாடுகளின் சிறப்பான பணியாளர்களாக , வேலையாட்களாக வாழப் பழகிவிட்டோம்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.