Jump to content

அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றிய கமலின் துணிச்சலான விமர்சனம் பாராட்டுக்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு


Recommended Posts

அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றிய கமலின் துணிச்சலான விமர்சனம் பாராட்டுக்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு

 

nalakannujpg

அதிமுக அரசு மீதான கமல்ஹாச னின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.கமல்ஹாசனுக் கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் இருந்து வரு கின்றன. பிஹாரை விட தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கமல்ஹாசன் குற்றம்சாட்ட, அதிமுக அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிடத் தயாரா? என்று கமலுக்கு அவர்கள் சவால் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு களுக்கான ஆதாரங்களை இ-மெயில் மூலம் அமைச்சர் களுக்கு அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக் கும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்):

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசின் செயல்பாடு களை பற்றி நடிகர் கமல்ஹாசன் துணிச்சலுடன் வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது பாராட்டுக் குரியது. மாநில அரசே ஊழல் மயமாகிவிட்டது என்ற கமலின் விமர்சனத்துக்கு அதிமுக அமைச் சர்கள் மிரட்டும் தொனியில் பதி லளித்தனர். இதனால் அமைச்சர் களுக்கே ஊழல் பட்டியலை அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் கருத்தால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. ஆனால், மக்களிடம் ஊழல் குறித்து சிறிதளவேனும் விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.

ஏ.எம்.விக்ரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்):

ஜனநாயக நாட்டில் கமல் கூறிய கருத்துகளை தனி மனித சுதந்திரமாகவே பார்க்க வேண்டும். அரசின் தவறுகளை துணிச்சலுடன் விமர்சித்தது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவிக் கும் விமர்சனங்கள் கமலுக்கே சாதகமாக அமையும். கமலின் விமர்சனத்தை இந்த அளவுக்கு பெரிதாக்க வேண்டியதே இல்லை.

அருள்மொழி (வழக்கறிஞர்):

இன்றைய சூழலில், தமிழக அரசைப் பொருத்தவரை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. எந்தவொரு கருத்துரிமை பற்றிய பிரச்சாரத்தையும் தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக பாஜக அரசு நினைப்பதைப் போலவே தமிழக அரசும் நினைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறினால் அதற்கு பதில் கூற வேண்டும். மாறாக, ஊழல் பற்றி பேசுவதே தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது.

கமல்ஹாசன் ஏன் ஜெயலலிதா இருந்தபோது பேசவில்லை என்று கேட்கின்றனர். ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தனது கருத்தை தெரிவிக்கலாம். கமல் வெளியிட்ட அறிக்கை அமைச்சர்களின் விமர்சனத்துக்கு கிடைத்துள்ள வித்தியாசமான எதிர்வினை என்று நினைக்கிறேன்.

ஞாநி (பத்திரிகையாளர்):

லஞ்ச, ஊழல்கள் பற்றி அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும்படி ரசிகர்களையும் சக தமிழக மக்களையும் கமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆம் ஆத்மி போல் தமிழகத்தில் லஞ்சத்துக்கு எதிரான அரசியல் இயக்கத்தை கமல் முன்னின்று நடத்த இது தொடக்கப்புள்ளி. இது புள்ளியாக நிற்காமல் கோடாக இழுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் தொடர்ந்து வெற்றிடம் இருந்து வருகிறது. மக்கள் நிச்சயம் மாற்றத்தை எதிர்பாக்கிறார்கள். ஆனால், அதற்கான சரியான தலைமையோ, அமைப்போ உருவாகாமல் இருப்பதுதான் பிரச்சினை. எனவே, கமல் நல்ல அமைப்பை உருவாக்கி, தொடர்ந்து சிறப்பாக வழி நடத்தினால்தான் வெற்றி பெறும்.

பி.ஆர்.பாண்டியன் (தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்):

ஆளுங்கட்சியின் ஊழல்களை எதிர்த்து கமல் தைரியமாக குரல் எழுப்பியிருக்கிறார். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். திரையுலகில் சிறந்த நடிகராக மட்டுமின்றி சமூக சிந்தனையாளராகவும் திகழ்கிறார். தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இருப்பினும் கமல்ஹாசனின் திரையுலக புகழ் மட்டும் அவருக்கு வெற்றியைத் தேடித் தராது. ஒருவர் அரசியலில் சாதனை படைக்க மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம். தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களில் கமல் பங்கேற்க வேண்டும். மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே கமல் வெற்றி பெற முடியும்.

பார்த்திபன் (நடிகர், இயக்குநர்):

கமல்ஹாசன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்கூட எதையும் மறைத்து வைக்க மாட்டார். வருமான வரியை சரியாகக் கட்டக்கூடியவர். அதனால்தான் அவரால் துணிச்சலோடு கேள்வி கேட்க முடிகிறது. அதை நாமும் வரவேற்க வேண்டும். அரசுக்கு எதிரான கருத்தை ஒருவர் பதிவு செய்யும்போது அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். அதுதான் அவர்களது கடமை. சினிமாவில் கேளிக்கை வரி விஷயத்தில் லஞ்சம் இருப்பது உண்மை. இதையெல்லாம் வைத்துதான் அவரது ஊழல் குறித்த அந்த அறிக்கை இருந்தது. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை கடந்து இப்படி கேள்வி கேட்போம் என்ற பார்வையை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்.

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கத் தலைவர்):

சிவாஜிக்கு பிறகு பெரிய நடிகராக விளங்குபவர் கமல்ஹாசன். இப்போது போகிற போக்கில் இந்த சிஸ்டம் கெட்டிருக்கிறது என்றும், எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர்களின் எதிர்வினை என்பது தரக்குறைவாக இருந்தது.

கமலை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதால் ஏற்பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் இப்போது அவரது எதிர்வினையாக இருக்கிறது. ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்பது ஏற்புடையதாக இருக்கும். அதிமுக மீது உள்ள கோபத்தை தணிப்பதற்கு அவர் திமுகவின் பக்கம் திசை திரும்பி போனால், அரசியல் அமைப்பு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சரியான அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19322701.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.