Jump to content

கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி


Recommended Posts

கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார்.

ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.

அவர்கள் அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் அந்த பேருந்தின் ஊடாகவே பயணங்களை மேற்கொள்வதாகவும் நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

http://www.tamilwin.com/canada/01/152475

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால் தவறி விழவில்லை.  இவர் இறங்கும் போது பேருந்து சாரதி அவசரப்பட்டு கதவுகளை மூட, இவரின் கைப்பை கதவுகளுக்கிடையில் மாட்டியுள்ளது.  அதை கவனிக்காத சாரதி பேருந்தை எடுக்க இவர் இளுபட்டு விழுந்து அதே பேருந்தினால் அடிபட்டதனாலேயே இறந்துள்ளார்.   பின்னால் வந்த வாகனம் இடிக்கவில்லை.  பேருந்து ஓட்டுனரின் கவனகுறைவால் நிகழ்ந்த அனியாய இழப்பு :(

 

http://m.torontosun.com/2017/07/18/senior-killed-by-ttc-bus-in-scarborough

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்..:'( இனிமேலாவது அனைவரும் அவதானமாக நடப்பார்களா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

கால் தவறி விழவில்லை.  இவர் இறங்கும் போது பேருந்து சாரதி அவசரப்பட்டு கதவுகளை மூட, இவரின் கைப்பை கதவுகளுக்கிடையில் மாட்டியுள்ளது.  அதை கவனிக்காத சாரதி பேருந்தை எடுக்க இவர் இளுபட்டு விழுந்து அதே பேருந்தினால் அடிபட்டதனாலேயே இறந்துள்ளார்.   பின்னால் வந்த வாகனம் இடிக்கவில்லை.  பேருந்து ஓட்டுனரின் கவனகுறைவால் நிகழ்ந்த அனியாய இழப்பு :(

 

http://m.torontosun.com/2017/07/18/senior-killed-by-ttc-bus-in-scarborough

பொலிசாரின்  தீர்ப்பு என்ன ?? யார்  மீது குற்றம் சொல்கிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனி ஒருவன் said:

பொலிசாரின்  தீர்ப்பு என்ன ?? யார்  மீது குற்றம் சொல்கிறார்கள் ?

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sabesh said:

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

நன்றி பதிலுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

அனுதாபம் தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்..:'( இனிமேலாவது அனைவரும் அவதானமாக நடப்பார்களா..

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sabesh said:

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

ஓ ..உங்கள் உறவினரா.. :(
ஆழ்ந்த அனுதாபங்கனைத் தெரிவித்துக் கொள்கிறேன் சபேஸ் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !!

1 hour ago, Sabesh said:

விபத்து நடந்த அன்றே பேருந்தில் இருக்கும் video camera வை பார்த்து நடந்ததை கூறி விட்டார்கள்.  விசாரணை நடக்குமென நம்புகிறேன்.

தகவலுக்கு  நன்றி

1 hour ago, Sabesh said:

உண்மைதான். உறவினர் என்பதால் சற்று அதிகமான ஆதங்கம்.

 

உங்களது துக்கத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்

சாந்தி  பெறட்டும்..

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த நேரத்தில் அமெரிக்காவின் டிஸ்னி உலகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்க்கிறேன். இயலாதவர்கள் அவர்களது பேருந்தில் ஏறும்போது ஓட்டுனரே இறங்கி வந்து அதற்கான வசதிகளை செய்து கொடுப்பார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பரிவு காட்டுதல் வேண்டும். வெறும் காசுக் கணக்குக்கு மட்டும் வேலை பார்த்தால் அநியாய சாவுகளை தவிர்ப்பது கடினம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த..... அனுதாபங்கள்,  சபேஷ்.
காலையில்  கோவிலுக்கு, போய் விட்டு வரும் போது,
நடந்த விபத்து என்பதால்.... மனதை, மிகவும் வருத்துகின்றது.

அவர், விரும்பிய கடவுள்..... அவரை,  தம்மிடம்   கூப்பிட்டு  விட்டார், என்றே.... நினைக்கின்றேன்.
அவரின்... பிரிவால், துயரத்தில் இருக்கும்..... உற்றார், உறவினர்களுக்கு....
ஆழ்ந்த... அனுதாபங்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விபத்துக்குள் முற்றிலும் தவிர்க்கப்படக் கூடியவை. கொஞ்சம் பொறுமையும்.. நிறைய அவதானிப்பும் அவதானமும்  அவசியம். மேலும் எம்மவர்களுக்குள்ள மொழி பிரச்சனையால்.. அவசரத்துக்கு கத்தவும் முடியாமல்.. தவிப்பதையும் காண முடிகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ் .... உங்களது துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தெரிவித்த உறவுகளுக்கு நன்றி.

 

14 hours ago, நந்தன் said:

 

ஓ சபேசும் படலைகட்டியா

இல்லை....வாழ்க்கை பயணத்தில் இணைந்த பக்க உறவினர்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா.முதியவர்கள் இயலுமானவரை தனித்துப் பயணிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த நேரத்தில் அமெரிக்காவின் டிஸ்னி உலகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்க்கிறேன். இயலாதவர்கள் அவர்களது பேருந்தில் ஏறும்போது ஓட்டுனரே இறங்கி வந்து அதற்கான வசதிகளை செய்து கொடுப்பார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பரிவு காட்டுதல் வேண்டும். வெறும் காசுக் கணக்குக்கு மட்டும் வேலை பார்த்தால் அநியாய சாவுகளை தவிர்ப்பது கடினம்.

இலங்கையில் எனது வேலையில் பஸ் பயணம் தவிர்க்க முடியாத ஒன்று ஒரு சில சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் ஒழுங்கக பேச தெரியாது வெல்  அடிச்சா  உடனே எழும்பி வர வேண்டியது தானே எழும்பி வந்து எத்தின மணிக்கு நாங்கள் போய்ச்சேர்வதென பெரியவர்களுக்கு காட்டமாக ஏசுவார்கள் என்னத்தை சொல்வது நாளைக்கு கையை நீட்டினால் பஸ்ஸை நிறுத்த மாட்டான் அதனால் வேலைக்கு செல்ல நேரமாகிவிடும்  அதனால் எதுவும் பேசாத மொனிகளாக செல்ல வேண்டியதாக இருக்கிறது ரிப்போட் பண்ணீலாலும் அவர்களுக்குள் சமாளித்து விடுகிறார்கள் (  கூடுதலாக காத்தான்குடி டிப்போவுக்கு சொந்த மான பஸ்களில் பஸ் செலுத்தும் சாரதிகளை  கூறுவேன் சீசன் காட் எடுத்து செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை அப்படி ஏற்றினாலும் முன்னுக்கு போ  என திட்டுவது போன்ற நிலமையும் உள்ளது  தினம்மும் பயணம் செய்பவர்கள்  காசு தீர்ந்து விடுவதாலும் சீசனுக்கு  போகும் பணத்தில் ஒரு 200,300 மிஞ்சுவதாலும் சீசன் எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால் சீசனை ஏற்றுவதால் இவர்களுக்கான  ராக்க்கெட் என்று சொல்லப்படுகின்ற  மொத்த மாக கிடைக்கும் பணத்தில் ப்கிடைக்கும் பங்கு குறைவாக கிடைக்கும் என்ற படியால் சீசனை ஏற்றுவதில்லை 

 

ஆழ்ந்த இரங்கள் அன்னாரது  ஆத்மா சாந்தியடை பிரார்த்திக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.. RIP.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.