Jump to content

தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார்.
ஜூலை 17, 2017, 04:00 AM
சென்னை,-
நோயாளிகள் உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள் பிரதமருக்கு பரபரப்பு கடிதம்
பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நான் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மருந்து கம்பெனியை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் என்னை சந்தித்தனர்.

அவர்கள் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை என்னிடம் கொடுத்து அவற்றை உங்கள் ‘கிளினிக்’கில் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்றனர். அது பலவகை வைட்டமின் சத்துக்கள் கொண்டது என்றும் கூறினார்கள். அந்த மருந்தில் என்ன கலந்து இருக்கின்றன என்று நான் ஆராய்ந்த போது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதில் இருப்பது தெரிய வந்தது. ஊக்க மருந்துகளும் கலக்கப்பட்டு இருந்தது.

அந்த மருந்தை நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் அதிகமாக உயிர் சத்துக்கள் உருவாகி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கண்பார்வையும் பாதிக்கும். நாளடைவில் ஈரல் கோளாறுகளும் ஏற்படும். எனவே நான் அந்த மருந்துகளை சிபாரிசு செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதையும் வாங்கவில்லை.

இதனால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. என்னை மிரட்டினார்கள். நாங்கள் இந்தியாவில் உள்ள ஒரு மந்திரி வீட்டில்தான் தங்கி இருக்கிறோம். அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று கூறினார்கள். அதன்பிறகு இந்திய டாக்டர்கள் விஞ்ஞான ரீதியாக இதையெல்லாம் ஆராய்வது இல்லை. நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சிபாரிசு செய்து விடுவார்கள் என்றனர்.

அவர்களிடம் நான், இந்திய டாக்டர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உலக அளவில் பெரிய மரியாதைக்குரியவர்களாக இந்திய டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று எச்சரித்தேன். மீண்டும் அவர்கள் என்னிடம் தங்களுடைய அரசியல் செல்வாக்கை சொல்லி மிரட்டி விட்டுச்சென்றார்கள்.

அந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற குறிப்புகளை இந்த கடிதத்தில் இணைத்து இருக்கிறேன். இது ஒரு முக்கிய பிரச்சினை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மருந்துகள் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் வந்தால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும். இத்தகைய மருந்து மோசடிகளை தடுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரிகளில் தங்களுக்கு சரியான மருந்து கொடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்க வேண்டும். ஏழை மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நீட் தேர்வானது முறைகேடுகளுக்கு வழிவகுத்து உள்ளது. இப்படி இருந்தால் தரமான டாக்டர்கள் உருவாக முடியாது.

இவ்வாறு கடிதத்தில் திவ்யா கூறியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரே அமெரிக்க அடிமை அவரிடம் முறைப்பாடு செய்வது ஒரு சுவருக்கு கதை சொல்வது போல் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.