Jump to content

பேரறிவாளனுக்கு பரோல்... விரைவில் வருகிறது அறிவிப்பு?!


Recommended Posts

பேரறிவாளனுக்கு பரோல்... விரைவில் வருகிறது அறிவிப்பு?!

 
 

பேரறிவாளன்

கால் நுாற்றாண்டு காலமாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளி பேரரறிவாளனுக்கு விரைவில் பரோல் வழங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உட்பட நால்வருக்கு விதிக்கபட்ட துாக்குதண்டனை சில ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் அவர்கள் நான்குபேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அந்த தீர்மானம் சட்டசபையிலும்  நிறைவேற்றபட்டு மத்திய அரசுக்கு அனுப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்கள் ஆலோசனையில்லாமல் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்று அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. நால்வரின் விடுதலை குறித்த சீராய்வு மனு தற்போது உச்சநீதிமனற்த்தில் நிலுவையில் உள்ளது. பேரரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தும் கண்ணீர்மல்க மனு அளித்து, கோரிக்கை விடுத்தார். இப்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையும் அற்புதம்மாள் சந்தித்து தனது மகனின் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தார். 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது' என்று முதல்வர் அப்போது கூறியுள்ளார். 

இருபத்தி ஆறு ஆண்டுகளாக என் மகனுக்கு பரோல்கூட வழங்கவில்லை. தமிழக அரசு நினைத்தால் பரோலாவது வழங்க முடியும். முதலில் பரோலில் ஆவது என் மகனை விடுங்கள் என்று தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். தற்பொது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ள மனிதநேர ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூவரும் இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசினர். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமைச்செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைச் சந்தித்து தனது மகனுக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசும், ஏற்கனவே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அற்புதஅம்மாளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம், “உங்கள் மகனின் பரோல் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வெளியாகும்" என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். இதுபற்றி அரசுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது “பேரரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துவிட்டது. ஒருமாத காலம் பரோலில் அவர் விடுவிக்கப்படலாம். அதற்கான அறிக்கை நாளை சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதன்பின் முறையான அறிவிப்பு இந்த வாரத்திலேயே வெளிவந்துவிடும்” என்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கூறுகையில், “இந்த வாரத்தில் பேரறிவாளன் பரோலில் வருவது உறுதி” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

 

கால் நுாற்றாண்டுக்குப் பின்னர் பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கலாம்!

http://www.vikatan.com/news/tamilnadu/96008-parole-for-rajiv-case-convict-perarivalan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.