Jump to content

பெற்றோர்கள்... ஏன்,  "உயில்" எழுத வேண்டும்..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயில் எப்படி தயாரிக்க வேண்டும்?

பெற்றோர்கள்... ஏன், "உயில்"  எழுத வேண்டும்..?

பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன.

உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும்.

இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல் முறைகளுக்கு வழிவகுக்கும்.

அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா? 
நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொத்துக்களை கவனித்துக் கொள்ளும் நபராக மட்டுமே இருப்பதால் அனைத்துச் சொத்துக்களும் சட்டப்பூர்வமாக வாரிசு தாரருக்கு மாற்றப்படுகிறது. உயில் எழுதப்படாத பட்சத்தில் வாரிசுகளை சட்டம் தீர்மானிக்கிறது. நியமனப்பட்டவர்கள் வாரிசு தாரர்களாக இல்லாத பட்சத்தில் அது தகராறில் முடியும்.

உயில் எப்படி தயாரிக்க வேண்டும்? 
உயிலை சாதாரண காகிதத்திலோ இல்லையெனில் முத்திரைத் தாளிலிலோ எழுதலாம். கையிலும் எழுதலாம். அச்சிடப்படலாம். உயில் சாசனம் எழுதுபவர் வெவ்வேறு நிறங்களான மையை பயன்படுத்தக் கூடாது. 

உயில் சாசனம் எழுதுபவர் கடைசி வாக்கியத்திற்கு சற்று கீழே கையெழுத்திட வேண்டும். ஏனென்றால் அந்த கையெழுத்திற்கு கீழே உயிலில் எழுதப்படும் எதுவும் உயிலின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது. 

இரண்டு சாட்சிதாரர்களால் கையெழுத்திடப்பட வேண்டும். உயில் சாசனம் எழுதியவர் மற்றும் உயிலின் பயனாளர் இருவரின் பெயர், வயது, முகவரி மற்றும் பல விவரங்கள் விவரமாக எழுதப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு சொத்தின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.  

உயிலை பதிவு செய்வது கட்டாயமா?

உயிலை மாற்றி எழுதலாமா? 
ஆமாம், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். ஆனால் வேறு காகிதத்தில் தான் மாற்றி எழுத வேண்டும். (உயில் இணைப்புகள் என்று அழைக்கப்படுகிறது) மாற்றி எழுதிய அந்தத் தேதியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாறுபடியும் கடைசி வரிக்கு கீழே இடைவெளி இல்லாமல் கையெத்திட வேண்டும். சாட்சிதாரர்களின் இருவர் கையெழுத்துகளும் இணைக்கப்பட வேண்டும்.

உயிலை பதிவு செய்வது கட்டாயமா? 
பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் அது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் செய்வது நல்லது. சட்டப்படி பதிவு செய்த பிறகு சிக்கல்கள் வராது. இதையும் கூட முத்திரைத் தாளிலோ பத்திரங்களிலோ எழுத தேவையில்லை அல்லது சான்றுருதியும் அளிக்கத் தேவையில்லை.

இணையத்தில் உயில் தயாரிக்க முடியுமா? 
ஆமாம், இணையத்தில் சாதாரணக் கட்டணத்திற்குத் தயாரித்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. இதனால் அதிக விவரங்களுடன், மதிப்புடைய தவறுகள் இல்லாத உயில்கள் தயாரிக்க முடியும் என்பதால் இது சிறந்த வழியாகும்.

இணையத்தில் உயில் தயாரிக்க வழக்கறிஞர் தேவையா?

இணையத்தில் உயில் தயாரிக்க வழக்கறிஞர் தேவையா? 
வழக்கறிஞர்கள் தேவையில்லை. ஆனால் எந்தவிதமான சட்ட ஓட்டைகள் இல்லாமல் மதிப்புடைய உயிலைத் தயாரிப்பதற்கு அவருடைய உதவி தேவை.

நன்றி தற்ஸ் தமிழ்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அண்மையில் றீகப் ஒன்றுக்கு போய் வர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்ட போது உயில் விவகாரம் பற்றியும் துளைச்சுக் கொண்டு இருந்தார்கள்..இவ்வாறன கேள்விகள் கேட்பார்கள் என்று தெரியாமல் போய் அகப்படும் விடையங்கள்..யாராக இருந்தாலும் தனக்கு பின் தன்னுடைய சுய விருப்பின் பேரில் யாருக்கு சொத்துக்கள் அனைத்தும் போய் சேர வேண்டும் என்ற விபரங்களை சுய அறிவோடு நாம் வாழும் போதே எழுதி வைத்தல் நன்றே..பிள்ளைகளிடையே சகோதரங்களிடையே ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளலாம்...எல்லாம் இருந்தாலும் பிரச்சனை இல்லாது விட்டாலும் பிரச்சனை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக...யுத்தங்களில் ஈடுபட்ட வெள்ளை இனத்தவர்கள்...இறுதிக்காலத்தில்..ஆசிய இனத்துப் பெண்களிடம் ஏமாந்து போவது இங்கு அதிகம் நடக்கின்றது!

அவர்களது சொத்துக்கள்....திருமணமாகா விட்டாலும் 'de facto relationship" என்னும் அடிப்படையில்.. அந்த ஆசிய இளம் பெண்களுக்கே போய்ச் சேருகின்றது!

அது மட்டுமன்றி...அந்தப் பெண்கள்..அவுசில் நிரந்தர வதிவிட விசா இல்லாவிட்டாலும்..அவர்களுக்கு உயிருள்ள வரை...war widow ஓய்வுப் பணம் செலுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்!

ஒரு எண்பது வயதுள்ளவர் ...ஒரு இருபத்தைந்து வயதுப் பெண்ணுடன் வாழ்ந்திருந்தால்...அந்தப் பெண் இறக்கும் வரை ...அதாவது அறுபது..எழுபது வருடங்களுக்கு அந்த ஓய்வுப் பணம் செலுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்!

அட... ஒரு அழகான பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா..என்றும் சில வேளைகளில் நினைப்பதுண்டு..!

ஆண் சிங்கமாகவே.. இருந்து அசிங்கப்பட வேண்டிய நிலைமையாய்ப் போச்சுது..!

மிகவும் முக்கியமான ஒரு பதிவு...தமிழ்சிறி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனத்தவர்களின் செயல்பாடுகளுக்கும் நமது மக்களின் செயல்பாடுகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.இங்கு ஆண் பெண் என்ற நிலைப் பாட்டுக்கு அப்பால் உண்மையான நிலைப்பாடு என்று ஒன்று இருக்கிறதல்லவா......
சில விடையங்களை என்னால் விபரித்து எழுத முடியாத சந்தர்ப்பம் சூழ் நிலையாகவும் இருக்கிறது..குடும்பத்தில் தாயோ தந்தையோ நோய் பட்டு படுக்கையாகி விடும் சந்தர்ப்பத்தில் அந்த ஒரு விடையத்திலிருந்தே பாகப் பிரிவினைகள் தொடங்கி விடுகிறது..அதிக பட்சம் குடும்பம்பத்திற்காக கிடந்து பாடுபடுபவர்களை உனக்கு ஒன்றுமே தெரியாது; நீ பெண் பிள்ளை நீ தான் பெற்றோருக்குரிய கடமைகளை செய்ய வேண்டும் என்ற ஒரு போலியான கடமைகளுக்குள் தள்ளி விட்டு மிகுதி எல்லாவற்றிலும் தங்களை முன் நிறுத்துவதும் எம்மவர்கள் மத்தியில் நடக்காமலில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான வரவேற்கப் பட வேண்டிய  ஒரு பதிவு.... நன்றி.....! tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.