Jump to content

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


Recommended Posts

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

 

 

பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.

இதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

இச்சம்பவமானது கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி நடந்துள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த தாக்குதலானது மிகவும் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/uk/03/128938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு மாறிப் போயிட்டாங்களா?...அல்லது தங்கட உள் வீட்டுப் பிரச்சனைக்காக காப்பிலியை  செட் பண்ணி விட்டு இருக்கினமா?...சீசிடிவி இருக்குது என்டு தெரிந்திருந்தால் இவங்கள் போயிருப்பாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்....

மறுபக்கம்  என்ன கதையோ?

சும்மா வந்து அடிப்பார்களோ?

களவு எடுக்க வந்தமாதிரி தெரியல்ல.

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா இருக்குமோ?


ம்... பார்ப்போம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டு பிரச்சனையோ ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

சீட்டு பிரச்சனையோ ??

இண்டைக்குதல்லாம்....நாளைக்கு தல்லாம் எண்டு வருசக்கணக்காய் இழுத்தடிச்சால் காப்பியின்ரை உதவி பெரிய உதவியாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

CCTV கமரா  பூட்டி  பாதுகாப்பு செய்திருந்தவர்கள்....
வெளியில் யாரும் மணி அடித்தவுடன், யார் ஆக்கள் வந்திருக்கிறார்கள் என்று 
கதவு ஓட்டைக்குள்ளால்... பார்க்காமல்,  கதவை  திறக்க வேண்டும் என்று யோசனை வரவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

சீட்டு பிரச்சனையோ ??

எப்படி இப்படி அச்சொட்டா சொல்லுறீங்க.

ஒன்றில் சீட்டுப் பிரச்சனை அல்லது பெட்டப் பிரச்சனை.  இது தான் எங்களுக்கு புலம்பெயர் நாடுகளில் முக்கிய பிரச்சனைகளாகும். :rolleyes:tw_angry:

தமிழ் பெட்டை ஒன்று கறுப்பு கூட ஓடி இருக்கும்.. இவை வழமையா தமிழ் பொடியளட்ட காட்டிற தமிழ் சினிமா பாணி வில்லத்தனத்தை காட்ட வெளிக்கிட்டிருப்பினம்.. கறுப்பன் வந்து போயிருப்பான்..

இல்ல சீட்டுக் கட்டி ஏமாந்தவை... கள்ளமாக் கொடுத்த காசை கள்ள வழியில் வாங்கிக்க கறுப்பை நாடி இருப்பினம். tw_blush:<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.