Jump to content

சசிகலாவுக்கு சிறப்பு வசதி உதவிய தமிழக பிரமுகர்கள்?


Recommended Posts

சசிகலாவுக்கு சிறப்பு வசதி
உதவிய தமிழக பிரமுகர்கள்?
 
 
 

சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

சசிகலா, Sasikala,சிறப்பு வசதி,Special Facility, தமிழக பிரமுகர்கள், Tamil Nadu personalities,பெங்களூரு சிறை, Bangalore Jail,  தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், Tamilnadu Congress , Personalities,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், Congress Vice-President Rahul, சொத்து குவிப்பு வழக்கு,Property accumulation case,  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை,Bengaluru Parupana Agrahar Jail,டி.ஐ.ஜி ரூபா ,  DIG Rupa,முதல்வர் சித்தராமையா, Chief Minister Sitaramaya,

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.
 

உத்தரவு


இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழக காங்., கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், சசிகலா வுக்கு சிறையில், சிறப்பு வசதிகள் கிடைக்க

காரணமாக இருந்ததாகவும், அதற்காக, சிறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநில காங்., பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: கர்நாடகாவில், விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம், அம்மாநில முதல்வரான, சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, சிலர் தரப்பில் செய்யப்பட்ட பிரசாரம் உண்மையாக இருக்குமோ என, கர்நாடகாவில் வாழும், 4 சதவீத பிராமண சமுதாயத்தினரும், 3 சதவீத ஓட்டுகளை கொண்டுள்ள தமிழர்களும் நம்புகின்றனர்.
இந்த நேரத்தில், சசிகலா விவகாரம் எழுந்துள்ளது, காங்கிரஸ் மீதான அவர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அந்த அதிருப்தியை சாதகமாக்கி, 7 சதவீத ஓட்டுகளையும் தங்கள் பக்கம் திருப்ப, கர்நாடக மாநில பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முற்பட்டு உள்ளன.

திரைமறைவு:


இதற்கிடையில்,சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, கர்நாடக மாநில காங்., பிரமுகர்கள்

 

மற்றும் சிறை அதிகாரிகளின் உதவியை, தமிழக காங்., பிரமுகர்கள் நாடியதாகவும், இது தொடர்பான திரைமறைவு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதனால், சசிகலாவுக்கு ரகசியமாக உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் குறித்து, விசாரணை நடத்த, கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சசிகலாவுக்கு உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் மீது, ராகுல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.இவ்வாறு காங்., வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1813500

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.