Jump to content

பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா?


Recommended Posts

பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா?
 

 

எம்.காசிநாதன்

தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. “ஏட்டிக்குப் போட்டி” விவாதங்கள், “பரபரப்பான காட்சிகள்” என்று செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள மூன்று அணிகளும், “இரகசியக் கூட்டணி” வைத்துக் கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கான சூழல், தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. “எலியும் பூனையும் போல்” இருக்கும் தி.மு.க- அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குள் இணக்கமா என்று, அனைவரது விழிகளும் உயர்ந்து நிற்கின்றன. 

ஆளுங்கட்சியின் சார்பில் மூன்று அணிகள்: முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அணி; அவருக்குப் போட்டியாக அமர்ந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அணி; இருவருக்கும் போட்டியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அணிக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் இன்னோர் அணி. இந்த மூன்றில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தவிர, மற்ற இரு அணிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்களையும் சேர்த்து, ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. 

இந்த பாதீட்டுக் கூட்டத்தொடரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், “அனல் பறக்கும்” என்று நினைத்தவர்களுக்கு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தி.மு.கவின் சார்பில் பேசும் உறுப்பினர்களுக்கு எல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆளுங்கட்சி மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகளைச் சொல்லாதவரை, சட்டச்சிக்கல் மிகுந்த பிரச்சினைகளை எழுப்பாத வரை, இந்த “சுதந்திரத்தை”, பேரவைத் தலைவராக இருக்கும் தனபால், தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு வழங்குகிறார். “தேர்தல் ஆணையகம் வழக்குப் போட உத்தரவிட்டது”, “குட்கா டையரி போன்ற பிரச்சினைகளை” எழுப்பினால் மட்டும், சிறிய அளவில் வாய்ப்புக் கொடுத்து விட்டு, பிரச்சினையைச் சீக்கிரம் முடித்து வைக்க நினைக்கிறார். அப்படியும் இல்லையென்றால், அந்த விவகாரம், நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கூறி விவாதிக்கவே அனுமதி மறுக்கிறார். 

எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்த போது, தன்னந்தனியாக சட்டமன்றத்துக்கு வந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேல், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க மீது, தாக்குதல் நடத்திப் பேசினார். அது ஒரு காலம். பிறகு, ஆளுங்கட்சியாக, மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வந்த பின்னர், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய, தி.மு.கவுக்குப் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் காரசாரமான பதிலைச் சந்திக்க நேரிடும். தி.மு.க காலத்தில், அந்தப் பிரச்சினை எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, இறுதியில் தி.மு.க மீதே குற்றஞ்சாட்டும் வகையில், மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் பதில் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு முன்பு, கடைசியாக சட்டமன்றத்தில் அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுடன்தான் சண்டை போட்டார். பொலிஸாருக்கு வீடு கட்டும் திட்டம் பற்றி, ஸ்டாலின் பேச, “அது பற்றிப் பேச, தி.மு.கவுக்கு தகுதி இல்லை” என்று, ஜெயலலிதா கூற, உடனே எழுந்த ஸ்டாலின், “அப்படிச் சொல்ல உங்களுக்குத் தகுதி இல்லை” என்று காரசாரமாகப் பதிலளிக்க, சட்டமன்றமே, இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் அமளியால் கிடுகிடுத்தது. தி.மு.கவினருக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதால், அடிக்கடி வெளியேற்றப்படுவதால், சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று, வெளியில் பொதுக்கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் போன்றவற்றில், தி.மு.க பிஸியாகி விடும். 

ஆனால், அந்த நிலைமை இப்போது சட்டமன்றத்தில் இல்லை. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும், அதற்கு ஏதோ ஒரு பதிலை, அ.தி.மு.க அமைச்சர்கள் கொடுக்கிறார்கள். அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டும் போது, முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் காலத்தில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெகுண்டு எழுவார்கள். ஆனால், இப்போது எல்லாம், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெகுண்டு எழுவதில்லை. மாறாக, அவைக்குள், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், சிரித்த முகத்துடன் காணப்படுகிறார்கள். ஜெயலலிதா இருக்கும் போதோ, அவையில் கலைஞர் கருணாநிதி இருக்கும் போதோ இருந்த “இறுக்கம்” இப்போது, இரு கட்சி, சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும் தளர்ந்து விட்டது. சட்டமன்றத்தில், தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து, ஆளுங்கட்சியான அ.தி.மு.க ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தவரை நிறைவேற்றிக் கொடுத்ததில்லை. ஆனால், இப்போது, வேலூர் மாவட்டத்தில் ஒரு பொலிஸ் நிலையம் வேண்டும் என்று, தி.மு.க எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை வைத்ததும், அதை உடனடியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று, அன்றைக்கே உள்துறை செயலாளரும் அரசாணை வெளியிட்டார். 

இது மட்டுமல்ல, பேரவை உரிமை மீறலுக்காகத் தண்டிக்கப்பட்ட வரலாறுதான், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தது. ஆனால், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, “உரிமை மீறல் செயற்குழு” அறிக்கை கொடுத்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட வரலாறு, சபாநாயகர் தனபால் காலத்தில் இப்போது அரங்கேறியிருக்கிறது. அதே போல் “நடந்தவைகளுக்கு வருந்துகிறோம். இனிமேல் அப்படி நடக்க மாட்டோம்” என்று, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களே எழுதிக் கொடுத்து விட்டு, அந்த அவை உரிமை மீறல் தண்டனையிலிருந்து தப்பித்த நிகழ்வும், இந்தச் சட்டமன்றத்தில்தான் நடைபெற்றுள்ளது. ஆகவே, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கும் பந்தை, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பி அடிப்பதில்லை என்பதால், சட்டமன்றத்துக்குள் பெரும் அமளி இல்லை. விவாதங்களும் எல்லை தாண்டவில்லை. சுருங்கச் சொன்னால், தி.மு.க - அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் சட்டமன்றத்தில் காணப்படும் பரபரப்புகள், கடும் மோதல்கள், வெளியேற்றங்கள், பாய்ந்து வரும் விமர்சனங்கள் எவையுமே, இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காணவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டு சுமத்தினாலும், அதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டு அமர்ந்து விடுகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

இந்த சுமூகமான சூழ்நிலை, சட்டமன்றத்தை அமைதியாக்கியிருக்கிறது. ஆனால், இரு கட்சி அரசியலுக்குள்ளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல் என்பது, “திமுக- அ.தி.மு.கவை” தாண்டிச் சென்றதில்லை. இந்த இரு கட்சிகளை வீழ்த்தி, புதிய அத்தியாயம் துவங்க நினைத்த கட்சிகள், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தோற்று விட்டன. ஏறக்குறைய, 1967இலிருந்து தமிழக அரசியல், திராவிடக’ கட்சிகளான இந்த இரு கட்சிகளுக்குள்ளும், மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்தில், “நாங்கள் இருவரும்தான் அரசியல் செய்வோம்” என்பதை, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்ததே காரணம். 1970களில், ஒடிசா முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக், “அ.தி.மு.கவுக்கும் - தி.மு.கவுக்கும் இணைப்பை” ஏற்படுத்த முயற்சி செய்தார். சென்னைக்கே வந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியையும் அன்று, அ.தி.மு.கவின் பொதுச் செயலாலராக இருந்த எம்.ஜி.ஆரையும் சந்தித்தார். இருவருடனும் பேசி, “இரு கட்சிகளும் இணையப் போகின்றன” என்ற அளவுக்குப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. “அ.தி.மு.க- தி.மு.க தனித்தனியாக இருந்தால்தான், தமிழக அரசியல், இந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருக்கும்” என்று கூறி, தி.மு.கவும்- அ.தி.மு.கவும் இணையத் தேவையில்லை என்று, முடிவு எடுத்தவர், மறைந்த எம்.ஜி.ஆர். அதன் பின்னர், இந்த இரு கட்சிகளின் இணைப்பு என்ற பேச்சும் எழவில்லை. இரு கட்சிகளையும் தாண்டி, தமிழக அரசியல், வேறு ஒரு புதிய கட்சியிடம் போகவும் இல்லை. 

ஆனால் இன்றைக்கு அந்த நிலை மாறி விட்டது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க- தி.மு.க எம்.எல்.ஏக்களுக்குள் ஏற்பட்டுள்ள நட்பு, வெளிப்படையாக, தி.மு.கவுக்கும்- அ.தி.மு.கவுக்கும் இரகசிய உடன்பாடு என்றப் பேச்சை கிளப்பியிருக்கிறது. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன என்ற பிரசாரம் நடக்கிறது. இது, தி.மு.க- அ.தி.மு.க என்று இருக்கும் தமிழக அரசியலின் திசையை மாற்றும் “வியூகமாக” இருக்கிறது. இது, சாதாரண வியூகம் அல்ல. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமே உள்ள “சக்கரவியூகம்”. இதற்குள், இரு கட்சிகளும் சிக்கிக் கொண்டால், தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், அரசியல் பிசுபிசுக்கும் என்ற கணக்கு, இந்த வியூகத்துக்குள் ஒளிந்து கிடக்கிறது. ஆகவே, சட்டமன்றத்தில் காணப்படும் அமைதி, மக்கள் மன்றத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்தால், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தாக்கத்தில் சேதாரம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆகவே, தி.மு.க, அனல் கக்கும் விவாதங்களுடன் எதிர்கட்சியாகவும், அ.தி.மு.க, அதற்குப் போட்டியாக பதிலடி கொடுக்கும் ஆளுங்கட்சியாகவும் செயற்படுவது, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இரு கட்சிகளுக்கும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இன்றைய நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் திராவிட கட்சிகளைப் பலவீனப்படுத்தும் “திரைமறைவு” வியூகத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், பொன் விழாக் கண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொன்-விழாக்-கண்ட-திராவிட-கட்சிகளின்-ஆதிக்கத்துக்குச்-சோதனை-வந்துள்ளதா/91-200722

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.