Jump to content

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


Recommended Posts

சொகுசு,வசதிக்காக,ரூ.2 கோடி,லஞ்சம்,தந்த,சசிகலா,வேறு சிறைக்கு,மாற்றம்?

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சொகுசு,வசதிக்காக,ரூ.2 கோடி,லஞ்சம்,தந்த,சசிகலா,வேறு சிறைக்கு,மாற்றம்?


பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலா, சிறையில் சொகுசு வசதிகள் பெற வேண்டும் என்பதற்காக

இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட தகவலால் கர்நாடக அரசே ஆடிப் போயுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நேரத்தில், சிறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். பெங்களூரு சிறைவிவகாரம் குறித்து, எந்த அதிகாரியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார்.

இதற்கிடையில் சிறையில் நடந்த முறைகேடு கள் குறித்து டி.ஐ.ஜி., ரூபாவுக்கு தகவல் தெரிவித்ததாக ஆயுள் தண்டனை கைதி கள் 32 பேர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அழைத்து அதிகாரி கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.

இதன்பின், அந்த கைதிகளை இடமாற்றுவது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் வெளியில் அனுப்பினால் பிரச்னை எழும் என்பதால் இரவு நேரத்தில் அனுப்ப முடிவு செய்து நேற்று முன் தினம் நள்ளிரவே 'முறையான கவனிப்பு'க்கு பின், மாநிலத்திலுள்ள பல சிறைகளுக்கு 32 கைதிகளையும் பிரித்து அனுப்பினர்.

 


இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி 'சசிகலாவை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். அதனால் அவரை துமகூரு மகளிர் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
'விதிமுறைப்படி தான், சசிகலாவை சந்திக்க அனுமதி தரப்படுகிறது' என அரசு தரப்பில் கூறியதையடுத்து, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து கர்நாடகத்தின் எந்த சிறைக்கு வேண்டுமானா லும் மாற்றலாம். துமகூருவில் மகளிர் சிறை இருப்பதால் அங்கு மாற்றுவது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. இடமாற்றத்துக்கு எந்த காரண மும் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றார்.
சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று விசார ணையை துவக்குகிறது. இந்நிலையில் டி.ஐ.ஜி., ரூபாவை வேறு இடத்துக்கு துாக்கியடிக்க லாமா என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1813573

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.