Jump to content

அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை?


Recommended Posts

அர­சி­ய­ல­மைப்பு குழப்­பத்தில் மலை­ய­கத்தின் நிலை?

pp2-089ab7a24a905ef43971f77796518bdffb8c31dc.jpg

 

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான தேர்தல் வாக்­கு­று­தி­களில் முதன்­மை­யாக அமைந்­தது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் மீள்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வை­யாகும். இவ்­வி­டயம் சிறு­பான்மை மக்கள் மட்­டு­மன்றி கற்ற சிங்­களச் சமூ­கமும் வர­வேற்­கக்­கூ­டிய நிலைப்­பாட்டை அடைந்­த­தற்கு காரணம் மோசடி மிகு­தி­யாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்­து­வேஷம், பாகு­பாடு போன்ற கார­ணங்­களாலும் நாடு சின்­னா­பின்­ன­மாகி இருந்­த­மை­யாகும்.

ராஜபக் ஷக்­களின் அதி­கார மையம் தேசிய அரசின் கைக்கு வந்­த­வுடன் தமிழ் மக்­களும் சற்றே நிம்­மதி அடைந்­தனர். வட­கி­ழக்கு மற்றும் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களும் தேசிய அரசின் பக்கம் நின்று ஒத்­து­ழைக்­கவும் தயா­ரா­கின. ஆனால் விளைவு வேறு­வி­த­மான பெறு­பேற்றை தந்­து­விட்­டது.

மைத்­திரி அரசு அளித்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது சில சிக்­கல்கள் இருப்­பதை காண முடிந்­தது. காரணம் எவ்­வாறு வாக்­கு­று­திகள் அளித்­தாலும் இந்­நாட்டில் சில வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்டே செயற்­பட முடியும் என்­பதை மைத்­திரி ரணில் அரசு அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தது. சில சமயம் உணர்த்­தப்­பட்­டது. இவ்­வி­ட­யத்தில் சிறு­பான்மை மக்கள் சார்ந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் எப்­போதும் பல்­வேறு இன­வாத தூற்­றல்கள், சர்ச்­சைகள் என்­ப­வற்றைக் கடந்தே ஓய்வுப் பெரு­கின்­றமை நாம் அறிந்­ததே.

அந்த வகையில் இந்­நாட்­டிற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி அதன் மூலம் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு சென்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டலாம் என்று மைத்­திரி அரசு நினைத்­தது. இச்­சிந்­த­னைக்குச் சாத­க­மாக வடக்கில் தமிழ் கூட்­ட­மைப்பும் மற்றும் ஏனைய சிறு­பான்மைக் கட்­சி­களும் தம்­முடன் இருப்­ப­தா­கவும், இச்­சூ­ழலைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்­களின் வர­லாற்றுப் பிரச்­சி­னைக்கு முடிவு காணலாம் எனவும் எண்­ணினர். இவ்­வி­ட­யத்தில் தலை தூக்­கிய பௌத்த தேசி­ய­வாதம் சர்ச்­சையை உண்­டு­பண்ணி இன்று பூதா­க­ர­மாக இப்­பி­ரச்­சி­னையை மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

அடிப்­ப­டை­வா­திகள் கூறு­வ­துபோல் என்­றுமே ஒற்­றை­யாட்சி தன்மை மாறாது என்றும், சமஷ்­டியின் மூலம் நாடு பிள­வு­படும் என்றும் அடி­மட்ட சிங்­கள மக்கள் மத்­தியில் அபிப்­பி­ராய உரு­வாக்கம் நூத­ன­மாக செய்­யப்­ப­டு­கி­றது. அதேபோல் பல்­லின மக்கள் வாழும் இந்­நாட்டில் பௌத்த மதமே முதன்மை அந்­தஸ்­துக்கு உட்­பட்­டது என்றும், மாகாண அதி­கா­ரங்கள் ஆளுநர் மூலம் ஜனா­தி­ப­தியின் கீழ் வர­வேண்டும் என்றும் , ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் நீக்­கப்­ப­டக்­கூ­டாது என்றும் இன்று மகா­சங்­கத்­தினர் தீர்­மானம் நிறை­வேற்றும் அள­விற்கு சிங்­கள அடிப்­ப­டை­வாதம் இப்­பி­ரச்­சி­னையை பர­வ­லாக்­கி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பில் 19 ஆவது திருத்தம் மூலம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் சேவையை உறு­திப்­ப­டுத்­து­மாறு அமைந்­த­வி­டத்தும் நடை­மு­றையில் மக்கள் முழு­யை­மாக அச்­சு­தந்­தி­ரத்­தினை அனு­ப­விக்க முடி­யாத நிலை அர­சாங்­கத்தின் இய­லா­மைக்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. அதேபோல் சிறு­பான்மை இனங்கள் சம்­பந்­தப்­பட்ட யாப்புத் திருத்­தங்­களும் வெறும் வாய் வார்த்­தை­க­ளுக்குள் முடிந்­து­விடும் அபாயம் இருக்­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் மைத்­திரி அரசு மக்­களின் விருப்­பத்­தினை அள­வி­டு­மாறு நாட­ளா­விய ரீதியில் மக்கள் கருத்­த­றியும் அமர்­வு­களை ஏற்­பாடு செய்து சிவில் சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் குறித்து பதிவு செய்­து­கொண்டு அதன் பின் அர­சி­ய­ல­மைப்பு குழு­வுக்கு பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறு கேட்டுக் கொண்­டது. இவ்­வி­டத்தில் மலை­ய­கத்தை முன்­னி­றுத்­தியும், சிவில் அமைப்­பு­களும், அர­சியல் கட்­சி­களும் தமது முன்­மொ­ழி­வு­களை வழங்­கி­யி­ருந்­தன. எனினும் வட, கிழக்­குக்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம் மலை­யக தேசியம் குறித்த சிந்­த­னைக்கு அளிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வி­டயம் குறித்த தெளிவு மலை­யக மக்கள் மத்­தியில் ஏற்­ப­டா­ம­லி­ருக்கச் செய்யும் செயற்­பா­டு­களும் அர­சிடம் தாரா­ள­மா­கவே இருந்­தன. காரணம் வட­கி­ழக்கு தமி­ழர்கள் தொடர்­பாக பேசும்­போது அதி­காரப் பர­வ­லாக்கம்,

மாகாண சபை­களின் அதி­காரம், சமஷ்டி தீர்வு போன்ற கருத்­தா­டல்­களே முக்­கி­யத்­துவம் பெறப்­பட்­டன. எனினும் வட­கி­ழக்­கிற்கு வெளியே வாழும் சிறு­பான்­மை­யி­னரின் இருப்பு குறித்தும் காணி உரி­மைகள், தொழில், கல்வி, போன்ற விட­யங்கள் குறித்தும் பெரி­தாக பேசப்­பட­ வில்லை. வட­கி­ழக்­கிற்கு அடுத்­த­ப­டி­யாக மலை­யக மக்­களே இந்­நாட்டில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு சனத்­தொ­கையைக் கொண்ட இனக்­குழு என்ற அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

  அதுவும் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­ப­டுத்­தப்­படும் பாது­காப்பு, இருப்பு என்­பன இனக் கல­வ­ரங்­க­ளாலும் ஒடுக்­கு­மு­றை­யாலும், சுரண்­ட­லாலும் பாதிக்­கப்­பட்ட எம்மை போன்ற ஒரு இனக்­கு­ழு­வுக்கு அவ­சி­ய­மான தேவை­யாகும். இன்­றைய சூழலில் இவ்­வி­ட­யங்­க­ளுக்கு இரண்டாம் அந்­தஸ்தை வழங்கி, ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள், தேர்தல் முறை மாற்றம், ஒற்­றை­யாட்சி போன்ற பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெறத்­தக்க விட­யங்­களை மகா­சங்­கத்­தி­னரும் ஜனா­தி­பதி, பிர­தமர் போன்­றோரும் பேசிக்­கோண்­டி­ருப்­பதால், மலையக் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் எங்கே கிடைக்­கப்­போ­கின்­றது என்ற ஐயப்­பாடு மலை­யக மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருப்­பது நியா­யா­மா­ன­தாகும். அது மட்­டு­மன்றி இந்­நாட்டில் தமிழர் பிரச்­சினை என்றால் அது வட கிழக்கில் மட்­டும்தான் என்ற அபத்­த­மான விளக்­கமும் நாட்­டி­னுள்ளும், சர்­வ­தே­சத்­திலும் ஏன் இந்­தி­யா­விலும் கூட ஏற்­ப­டுத்­தப்­பட்டு மலை­யகம் மறக்­கப்­பட்­டுள்­ளது.  

மலை­யக தேசியம் குறித்து பரந்­து­பட்ட விளக்­க­மின்­மையும் அர­சியல் பேதங்­களால் ஒன்­றாக குரல் கொடுக்கும் நிலையில் நாம் அனை­வரும் இல்­லா­த­தையும் அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். யாப்புத் திருத்­தத்தில் எம் மக்­களின் இருப்பை உறு­திப்­ப­டுத்தும் சரத்­துகள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்றும், காணி உரி­மைகள் குறித்த தீர்­மா­னங்­களை எடுக்கும் அதி­காரம் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் குத்­த­கைகள் கூலிகள் என்ற நிலை­மையில் இருந்து நாம் விடு­படும் வரை குரல் கொடுக்க வேண்டும். அதா­வது பெருந்­தோட்ட மக்­களின் தொழில், இருப்­பிடம், சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளுக்கும் அர­சாங்­கமே பொறுப்பு எனும் நிலை யாப்பு ரீதி­யாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். எனினும் நாம் இது குறித்து இன்னும் சிந்­திக்­கத்­த­லைப்­ப­ட­வில்லை. ஒரு சில அர­சியல் கட்­சிகள் யாப்பில் உள்­ள­டக்க முடி­யாத அற்ப விட­யங்­களை அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தில் பேசி தங்கள் சமூக அறிவை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­ய­துதான் எமக்கு கிடைத்த வரப்­பி­ர­சாதம்.

அதேபோல் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு மகா­சங்­கத்­தினர் ஒப்­புதல் அளித்­தி­ருக்­கின்­றனர். அதா­வது பிர­தே­ச­வாரி பிர­தி­நி­தித்­துவம் நீக்­கப்­பட்டு விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்று சில கருத்­துகள் முன் வைக்கப்பட்டுள்ளன அல்லது கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் மலையகத்தைப் பொறுத்தவரையில் பாதகமான விடயமே ஆகும். இப்போது எமக்கிருக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் கூட எட்டாக்கனியாகி விடும் அபாயம் இங்கு இருக்கின்றது. இன்று நாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை நாம் இழந்துவிடுவோம் என்ற கவலையாவது எமது பிரதிநிதிகளுக்கு ஏற்பட வேண்டும். மலையக தேசியம் குறித்து கற்ற சமூகம் தனது சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் யாப்பில் மலையக மக்கள் தனியான அலகாக கருதப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனும் குரல் உரத்து ஒலிக்க வேண்டிய தருணம் இது. எதிர்க்கட்சித் தலைமை தமிழராக இருக்கும் வேளையில்கூட நாம் தனித்து உரத்து குரல் கொடுக்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-07-16#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.