Jump to content

உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர் யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம்


Recommended Posts

உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர்

யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம்

உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர்
 

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் விளை­யாட்டு மைதான சுற்­று­ ம­தில் இடிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் பழைய மாண­வர்­கள் அதற்­காக அஞ்­சலி செலுத்­தி­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றுள்­ளது.
பாட­சாலை மைதா­னத்­தின் ஒரு பகுதி மதில் கடந்த வியா­ழக்­கி­ழமை இடிக்­கப்­பட்­டது. மதில் இடிக்­கப்­பட்­ட­மைக்கு பழைய மாண­வர்­கள் கடும் அதி­ருப்தி வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் இது தொடர்­பான கண்­ட­னப் பதி­வு­க­ளை­யும், அந்த மதில் தொடர்­பான கடந்த கால நினை­வுப் பதி­வு­க­ளை­யும் வெளி­யிட்­ட­னர். சமூ­க­வ­லைத் தளம் ஊடாக, இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைப்­பும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

பாட­சாலை விளை­யாட்டு மைதா­னத்­தின் மதில் இடிக்­கப்­பட்ட பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் ஒன்­று­கூ­டிய பழைய மாண­வர்­கள், இடிக்­கப்­பட்ட மதில் துண்­டு­களை அடுக்­கி­னர். இடிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னர் எடுக்­கப்­பட்ட மதி­லின் ஒளிப்­ப­டத்தை வைத்­து. மெழு­கு­தி­ரி­களை ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­னர். பழைய மாண­வர்­கள் தாம் இது தொடர்­பில் பாட­சாலை அதி­ப­ரு­டன் பேசி­ய­போது தற்­கா­லி­க­மாக இந்­தப் பணி இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது என்று அதி­பர் தெரி­வித்­தார் என்று குறிப்­பிட்­ட­னர்.

“பாட­சாலை விளை­யாட்டு மைதா­னத்­தின் மதில் தொடர்­பில் பழைய மாண­வர் சங்­கங்­கள் நீண்­ட­கா ­ல­மாக பேச்சு நடத்தி வந்­தன. அந்த மதில் பாது­காப்பு இல்லை. வெளி­யாள்­கள் உள்ளே வந்து மைதா­னத்­தைத் தவ­றாக பயன்­ப­டுத்­தும் சூழல் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு மேல­தி­க­மாக நீதி­ப­தி­யால் பாட­சாலை மதில் தொடர்­பில் எமக்­குச் சில விட­யங்­கள் சுட்­டிக்­காட்டப்­பட்­டி­ருந்­தன. அதை­ய­டுத்து புதிய மதிலை அமைப்­ப­தற்கே நாம் நட­வ­டிக்கை எடுத்­தோம்.”- என்று பாட­சா­லை­யின் அதி­பர் ஐ.தயா­னந்­த­ராஜா இது தொடர்­பில் கேட்­ட­போது தெரி­வித்­தார்.

“சட்­டத்­துக்கு அமை­வா­கவே நாம் செயற்­பட முடி­யும். நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இவ்­வா­றான இடங்­க­ளில் மதில் அமைப்­ப­தற்கு அனு­மதி வழங்­காது. வேலி அமைப்­ப­தற்­குத்­தான் அனு­மதி வழங்­கும் என்ற அடிப்­ப­டை­யில் நாம் இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுத்­தோம்.

கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஸ்­ணன் ஊடாக கல்வி அமைச்­சால் 5.5 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதனை 3 மாதங்­க­ளுக்­குள் நாம் செய்து முடிக்க வேண்­டும். கேள்­வி­கோ­ரல் கோரி ஒப்­பந்­தம் வழங்­கிய பின்­னர், வேலை­களை ஆரம்­பித்த போதே பழைய மாண­வர்­கள் இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். நாம் மதில் அமைப்­ப­தற்­கு­தான் விரும்­பி­னோம். ஆனால் அத­னைச் செய்ய முடி­யாது என்­ப­தா­லேயே மாற்று வழிக்­குச் செல்ல வேண்டி ஏற்­பட்­டது. என்­னைச் சந்­தித்த பழைய மாண­வர்­க­ளுக்கு இந்த விட­யத்தை தெளி­வாக விளங்­கப்­ப­டுத்­தி­
யுள்­ளேன்.

நாளை மறு­தி­னம் செவ்­வாய்க் கிழமை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னர் இதனை வந்து பார்­வை­யி­ட­வுள்­ள­னர். அது­வரை இந்­தப் பணி­கள் யாவும் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன.- என்­றும் அவர் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/11813.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஒரு மதிலுக்கு இவ்வளவு விள்ளங்கமா?

Link to comment
Share on other sites

மதிலுக்குப் பின்னால் அதன் மறைவில் பல விசயங்களை நடத்தலாமே. :grin: :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதில் உடைக்கப்பட வேண்டியதில்லை.  இந்த மதில்கள் ஒரு காலத்தில் உடைக்கப்படும் என்று முன்னரே சொல்லி வந்தார்கள். ஆனாலும்.. அப்போது சிங்கள ஆட்சியாளர்களும் அங்கு இல்லை. அவர்களுக்கு எஜமான விசுவாசம் செய்யவும் எங்களின் ஆக்களும் அங்கு இருக்கவில்லை. அதனால்.. இவை தப்பிப் பிழைத்து வந்தன. இந்த மதில்கள் சட்டத்துக்குப் புறம்பானவை அல்ல... பழைய சட்டத்துக்குள் உள்ளவை. ஆனால்.. புதிய சட்டத்துக்குள் இல்லை. அண்மையில்.. எங்கள் வீட்டுக் காணிக்கு நடுவால... தொலைத்தொடர்பு வயர்களை கம்பங்களை நட்டு இழுத்து விட்டிருக்கிறார்கள். கேட்டால்.. வீதி அகட்டிப்புக்க்கு பின் இங்க தான் இவை வருமாம். அப்படி என்றால்.. காணியில் ஒரு பகுதி வீதி அகட்டிப்புக்கு என்று அபகரிக்கப்படுமே என்று சொல்ல.. நஸ்ட ஈடு தரப்படுமாம்.

பிரச்சனை நஸ்ட ஈடு அல்ல.. காணி குறுகுமே.. மைதானம் குறுகுமே என்றால்.. அதுக்கு வித்துவான்கள் விளக்கம் தர முடியவில்லை.  இதே தான் இங்குள்ள பிரச்சனை. யாழ் இந்துக் கல்லூரி மைதானம் ஏலவே சிறிது. அதையும் வீதி அகட்டிப்பின் கீழ் புடுங்கி எடுத்தால்... மதில் மட்டுமல்ல.. மைதானமும் பறிபோகும். அதை எப்படி பெருதாக்குவது. பின்னால் பக்கத்தால வாங்கிப் பெரிதாக்க.. இவைட நஸ்ட ஈடு போதாது. 

மதில்கள் மைதானத்துக்குப் பாதுகாப்பில்லை என்பது பெரிய பொய். அங்க ஒன்றும் பாதுக்காக்க இல்லை. புல்லுத்தான் கிடக்குது. பிச் கூட இன்னும் பாய் பிச் தான்.  அப்படி பாதுகாப்பில்லை என்றால்.. இருக்கும் மதில்களுக்கு மேல் இரும்பு வேலி போடலாம். இடிக்க வேண்டிய அவசியமில்லை. கல்லூரி வீதி அகட்டிப்பு பெரிய அவசியமில்லை. காரணம்.. பாடசாலை நேரம் தவிர அந்த வீதி வாகனப் போக்குவரத்துக்கு பாவிக்கப்படுவது குறைவு.

இப்படியும் பாதுகாக்கலாம். இங்கிலாந்தில்.. பல பாடசாலை வேலிகள் இப்படித்தான் உள்ளன. tw_blush::rolleyes:

Image result for iron fence on stone wall

 

Image result for iron fence on stone wall

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கல்லை தூக்கிக் கொண்டு போய் எங்கட சனம் அத்திவாரத்திற்கு போட்டு விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

உந்த கல்லை தூக்கிக் கொண்டு போய் எங்கட சனம் அத்திவாரத்திற்கு போட்டு விடும்

 

சனம் பொறுக்கினால் பறுவாயில்லை. எங்கட வீட்டு கல்லு தொடங்கி தளபாடங்கள் வரை இராணுவ முகாமாகி மிளிருது. எங்கட  வீட்டுக்காணி வீடு இருந்த இடம் தெரியாமல் கிடக்கு. அத்திவாரம் கூட குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. :rolleyes:

அத்திவாரத்தை விட்டால்.. புலி மறைஞ்சிருந்து சுட்டிருக்குமாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

மதிலுக்குப் பின்னால் அதன் மறைவில் பல விசயங்களை நடத்தலாமே. :grin: :grin: 

இந்தக் கல்லூரி மதிலுக்கு பின்பக்கம் என்ற ஒன்றே கிடையாது. அது எந்த இடத்தில் அல்லது கோணத்தில் இருந்து பார்த்தாலும் பறவைப் பார்வையில் முழுதாகத் தெரியும் பாஞ்ச்.....!tw_blush:

மாட்ச்சுகள் நடக்கும் பொழுது எவ்வளவு பார்வையாளர்களைத் தாங்கி நிக்கும்....!

வீதி பெரிதாக்குவதென்றால் வைரவர் கோவிலை அரக்கி வைக்கலாம், அந்த இலுப்பை மரங்களை என்ன செய்வார்களாம். இது கொடுமை. ஓல்டுபார்க் வௌவ்வால்களின் புகுந்தவீடுகள்தான் அந்த மரங்கள்......!

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர்

யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம்

உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர்
 
 

விளக்கத்திற்கு நன்றி சுவி, ஆனாலும் அது இந்துக்கல்லூரி, பழைய மாணவர்கள் இந்துக் கலாச்சாரத்தை மறந்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்களே..! கற்பூரம், குத்துவிளக்கு எங்கே போனது.? கலாச்சாரமே போய்விட்டது மதில் போனால் என்ன...?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

விளக்கத்திற்கு நன்றி சுவி, ஆனாலும் அது இந்துக்கல்லூரி, பழைய மாணவர்கள் இந்துக் கலாச்சாரத்தை மறந்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்களே..! கற்பூரம், குத்துவிளக்கு எங்கே போனது.? கலாச்சாரமே போய்விட்டது மதில் போனால் என்ன...?? :(

பொழுது போகேல்ல.

ஏதோ செய்து மினக்கடுகினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

விளக்கத்திற்கு நன்றி சுவி, ஆனாலும் அது இந்துக்கல்லூரி, பழைய மாணவர்கள் இந்துக் கலாச்சாரத்தை மறந்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்களே..! கற்பூரம், குத்துவிளக்கு எங்கே போனது.? கலாச்சாரமே போய்விட்டது மதில் போனால் என்ன...?? :(

தப்பு பாஞ்ச்.... அது அங்கு படித்த கிறிஸ்தவ மாணவர்கள் முன்னின்று செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.அவர்களின் தாடிகளைப் பாருங்கள்.கர்த்தரின் சீடர்கள்  சைமன், யூதாஸ் ,மாத்யூ , பீற்றர் போல இருக்கு... அவர்களின் ஆழ்ந்த மதில் பற்றை மதப் பற்றுடன் இணைத்து அஞ்சலிப்பதைப் பார்த்து கல்லூரி பெருமையடைகின்றது.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உடைஞ்ச துண்டுகள்...ஏன் வலு சின்னனாய்க் கிடக்குது?

அம்மாம் பெரிய கடலில் நின்று சூரியனுக்கு அர்க்கியம் செய்யும்போது ஒரு சிறங்கை நீர் எடுத்துத்தானே செய்வது,முழுக்க கடலையே தூக்கி குடுக்க முடியாதுதானே. அதுபோல்தான் முழு மதிலையும் குவித்து வைத்து செய்ய முடியாது என்றுதான் சிறு துண்டுகள் எடுத்து செய்கிறார்கள்...! பெரிய துண்டுகளும்  கேமராவுக்கு பின்னால கிடக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

தப்பு பாஞ்ச்.... அது அங்கு படித்த கிறிஸ்தவ மாணவர்கள் முன்னின்று செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.அவர்களின் தாடிகளைப் பாருங்கள்.கர்த்தரின் சீடர்கள்  சைமன், யூதாஸ் ,மாத்யூ , பீற்றர் போல இருக்கு... அவர்களின் ஆழ்ந்த மதில் பற்றை மதப் பற்றுடன் இணைத்து அஞ்சலிப்பதைப் பார்த்து கல்லூரி பெருமையடைகின்றது.....!  tw_blush:

 

இதை ஆறுமுக நாவலரின் வாரிசுகள் ஏற்கமாற்றார்கள்...:10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.