Jump to content

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக?


Recommended Posts

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக?

 

புதிய அர­சியல் யாப்பா...? அல்­லது யாப்பில் திருத்­தமா...? என்ற பட்­டி­மன்­றத்­திற்கு புத்த பிக்­கு­களின் எதிர்ப்­பா­னது தேர்தல் என்னும் சிறிய விளம்­பர இடை­வே­ளையை வழங்­கி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்­றத்தின் போது புதிய அர­சியல் யாப்பின் மூலம் நாட்டில் நிலு­வையில் உள்ள சகல பிரச்­ச­ினை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அதன்­படி ஜனா­தி­ப­திக்கு உள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நீக்­குதல், தேர்தல் முறை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­துதல் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நீடித்து நிலைத்­தி­ருக்க கூடிய தீர்வை வழங்­குதல் என்னும் மூன்று அடிப்­ப­டை­களைக் கொண்டு ஒரு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது என்று அர­சாங்­கத்தால் அறி­விக்­கப்­பட்­டது. ஜே.ஆரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 1978 ஆம் ஆண்டின் அர­சியல் யாப்­பா­னது பல திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அதனை மேலும் திருத்­து­வதை விடுத்து ஒரு புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதே சிறந்­தது என்று அர­சாங்கம் முடி­வெ­டுத்­தி­ருந்­தது. இதனை நூறு நாள் வேலைத்­திட்­டத்­திலும் அர­சாங்கம் இணைத்­தி­ருந்­தது. 

ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து 100 நாட்­க­ளுக்குள் பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்த போதிலும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தேர்­த­லுக்கு தயா­ராக இல்­லா­ததால் ஆகஸ்ட் மாதம் வரை தேர்தல் பிற்­போ­டப்­பட்­டது.

இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையின் மூலம் நிறை­வேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டன. அதே­நே­ரத்தில் இரு­பதாம் திருத்­தத்தின் மூலம் தேர்தல் சீர்­தி­ருத்­தமும் நிறை­வேற்­றப்­பட்டு புதிய முறையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ள­ப­்­பட்­டன. இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் இந்த விட­யத்தில் உடன்­பாடு ஏற்­ப­டா­ததன் கார­ண­மா­கவே அது கைவி­டப்­பட்டு விகி­தா­சார முறையில் பாரா­ளு­மன்றத் தேர்­தல் ஆகஸ்ட் மாதம் நடை­பெற்­றது. இந்த கால நீடிப்­புக்கு ஜெனீவா விவ­கா­ரமும் கார­ண­மாக அமைந்­த­தாக ஆய்­வா­ளர்கள் கருத்து வெளியிட்டு இருந்­த­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. 

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு தயா­ரான போதே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் அந்த கட்­சியின் பேச்­சா­ளரும் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உறவை பேண  ஆரம்­பித்­தது. அன்­றி­லி­ருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சி­ய­லையே மேற்­கொண்டு வரு­கி­றது.

இதற்கு கூட்­ட­மைப்பின் சாயம் கொடுப்­ப­தற்­கா­கவே அங்­கத்­துவ கட்­சிகள் இரண்­டிற்கு சில பத­வி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் செயற்­பா­டுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்­தி­ருக்­க­வில்லை. மாறாக சர்­வ­தேச ரீதியில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இருந்த அழுத்­தங்­களை குறைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான உறவைப் பயன்­ப­டுத்திக் கொண்­டனர்.  2015 இல் ஐ.நா மனி­த­ உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30-–1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு இவ்­வாண்டு 34-–1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்சி இதற்கு தனது ஆத­ர­வையும் வழங்கி இதனை வர­வேற்றும் இருந்­தது. தற்­போது கூட ஐ.நா.வின் மனித உரி­மைகள் மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பி­லான விசேட பிர­தி­நிதி பென் எமர்ஷன் இலங்­கைக்கு வருகை தந்து நிலை­மை­களை அவ­தா­னித்து இருக்­கின்றார்.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்கம் மேற்­கொள்ளும் செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவே அவ­ரது கருத்­துக்­களும் அமைந்­தி­ருக்­கின்­றன. பூகோள பிராந்­திய நலன்­களை மையப்­ப­டுத்தி சர்­வ­தேச சமூகம் இலங்­கை­யு­ட­னான உறவைப் பலப்­ப­டுத்தி வரு­கின்­றது. இந்த நிலையில் தமிழ் மக்­களின் நலனை முன்­னி­றுத்­திய சர்­வ­தேச பார்வை என்­பது குறை­வ­டையத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. மாறி வந்த சர்­வ­தேச சூழலை கூட்­ட­மைப்பு சரி­யாக பயன்­ப­டுத்த தவ­றியும் இருக்­கின்றது.

தற்­போது சில மாகாண சபை­க­ளி­னது ஆட்­சி­க்காலம் நிறை­வுக்கு வரு­கி­றது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி சபை­களின் பத­விக்­கா­லமும் நிறை­வுக்கு வந்த நிலையில் அதன் தேர்­தலை நடத்­துவது அர­சாங்கம் இழு­த்த­டித்து வரு­கின்­றது.

கடந்த மஹிந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் உள்­ளூ­ராட்சி சபை­களின் எல்லை நிர்­ணயம் தொடர்­பான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் அந்த வேலைகள் முழு­மை­ய­டை­ய­வில்லை என்­பதைக் காரணம் காட்டி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை அர­சாங்கம் காலம் கடத்தி வரு­கின்­றது. மாகா­ண­சபைத் தேர்­தலா, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலா முதலில் நடை­பெறும் என்ற கேள்­விகள் எழுந்­துள்ள நிலையில் அர­சாங்கம் தமக்கு எது சாத­க­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­துமோ அதனை முதலில் நடத்த வேண்டும் என பரி­சீ­லிக்­கி­றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் தேர்தல் நோக்­கிய தனது செயற்­பா­டு­களை நகர்த்த ஆரம்­பித்­துள்­ளது.

குறிப்­பாக கிழக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வரு­கி­றது. அது போல உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களும் நடை­பெற இருக்­கின்­றன. இதனால் அதற்­கான தயார் படுத்­தல்கள் தீவிரம் பெறத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. கடந்த மாதம் வட­மா­காண சபை விவ­காரம் பல்­வேறு குழப்ப நிலை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன், அந்த விவ­காரம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை மீதும், தமி­ழ­ரசுக் கட்சி மீதும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மாற்றுத் தலைமை பற்­றிய சிந்­த­னை­களும் வலுப்­பெற்று வந்­தி­ருந்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலை­மைத்­து­வத்தை விமர்­சனம் செய்து புதிய மாற்று தலைமை தேவை என்ற அடிப்­ப­டையில் தமது கருத்­துக்களை முன்­வைத்தும் வந்­தன. இந்த நிலையில் இழந்த செல்­வாக்கை மீள நிலை நிறுத்­து­வதன் மூலமே நடை­பெற இருக்கும் தேர்­தலை வெற்றி கொள்ள முடியும் என்­பதும், தமது தலை­மையை தக்க வைக்க முடியும் என்­பதும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் நிலைப்­பாடு.

இதனால் அதற்­கான செயற்­பா­டு­களில் அவர்கள் இறங்­கி­யுள்­ளார்கள் என்­ப­தையே அண்­மைய செயற்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து மக்­க­ளது தேவை­களை நிறை­வேற்றும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­ப­டா­ததன் விளை­வாக தமிழ் மக்கள் தாமா­கவே தமது உரி­மைக்­காக வீதி­களில் இறங்கிப் போராடத் தொடங்­கி­யுள்­ளார்கள். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கோரியும், தமது நிலங்­களை விடு­விக்க கோரியும், வேலை­வாய்ப்புக் கோரி பட்­ட­தா­ரி­களும் மேற்­கொண்டு வரும் போராட்­டாங்கள் அரை ஆண்டை எட்­டு­கின்­றன.

ஆர்­ப்பாட்­டத்தின் ஆரம்­பத்தில் அர­சிற்கு அழுத்தம் கொடுத்து இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால் அது தென்­னி­லங்­கையில் இன­வா­திகள் குழப்பம் விளை­விக்க சாத­க­மாக அமைந்து விடும் என்று கூறி வந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை அந்த போராட்­டங்­களை பெரி­ய­ளவில் கண்டு கொள்­ள­வில்லை.

ஐ.நா. மனி­த உ­ரிமைகள் பேர­வையின் அமர்வை நோக்­கியே மக்கள் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், மக்­க­ளது போராட்­டங்­களின் பின்னால் சில அர­சியல் சக்­திகள் உள்­ள­தா­கவும் தென்­னி­லங்­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை கூறியும் வந்­தி­ருந்­தது. மக்கள் எழுச்­சி­யுடன் நடை­பெற்ற எழுக தமிழ் பேரணி கூட குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் தற்­போது அது தேவை­யற்ற பேரணி எனவும் கூட்­ட­மைப்பு தலைமை கூறி­வந்­தது. 

ஐ.நா. அமர்­வுகள் முடிந்தும் இந்தப் போராட்­டங்­களை மாதக்­க­ணக்கில் உறு­தி­யு­டனும், காத்­தி­ர­மா­கவும் மக்கள் தொடர்­வதால் அவ்­வப்­போது மக்கள் போராட்­ட­ங்­க­ளுக்கு சென்று பார்­வை­யிட வேண்­டிய நிலைமை தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த மக்­க­ளுக்கு உறு­தி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி போராட்­டங்­களை நிறுத்­து­வ­தற்கோ அல்­லது அந்த மக்­களின் கோரிக்­கைகளை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து நிறை­வேற்றச் செய்­வ­தற்கோ கூட்­ட­மைப்பின் தலை­மையால் முடி­யாமல் போயி­ருந்­தது. இது தமிழ் மக்கள் மத்­தியில் தமது தலைமை தொடர்பில் கடும் எரிச்­ச­லையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

இந்த நிலையில் அமை­தி­யாக இருந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் தமி­ழ­ரசுக் கட்­சியும் தற்­போது விழித்து கொண்­ட­வர்­க­ளாக செயற்­படத் தொடங்­கி­யுள்­ளனர். அண்­மையில் கிளி­நொச்­சிக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் 'காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் அர­சாங்கம் பதில் சொல்­லியே தீர­வேண்டும் என்றும், இன்னும் பல விட­யங்­களில் நாம் தொடர்ந்தும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சத்தில் சுயாட்சி அலகை பெற்றுக் கொள்­வதில் இருந்து நாம் பின்­னிற்க மாட்டோம்' என்றும் தெரி­வித்­துள்ள அதே­வேளை, அர­சாங்கம் சில கரு­மங்­களை செய்து வரு­கின்­றது. அவை தாம­த­மாக நடை­பெற்று வரு­வ­தா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கட­வு­ளிடம் வேண்­டுங்கள் எனவும் தெரி­வித்தும் உள்ளார்.

தமிழ் மக்­க­ளையும், அர­சாங்­கத்­தையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே இந்தக் கூற்றை அவ­தா­னிக்க முடி­கி­றது.  குறிப்­பாக கடந்த பல மாதங்­க­ளாக பொருத்து வீட்டு விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.  கூட்டமைப்பு தற்போது பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதுவரை வழக்குத் தாக்கல் செய்யாதவர்கள் தற்போது ஏன் செய்தார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயமே.  

இந்த விட­யங்­களை கூட்­ட­மைப்பு செய்­கின்ற போதும் உண்­மையில் அது  மக்கள் நலன்­களை முன்­னிறுத்தி செய்யும் நட­வ­டிக்­கையா அல்­லது தேர்­த­லுக்­கான ஒரு நட­வ­டிக்­கையா என்ற சந்­தேகம் மக்­க­ளிடம் உள்­ளது. எனவே, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை மக்கள் மன­நி­லை­களை புரிந்து தனது நகர்­வு­களை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கான நடவடிக்கையாக தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை மீண்டும் உணர்ச்சி அரசியலுக்குள் கொண்டு செல்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து வருகின்றார்கள். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புரிந்து தேர்தல் அரசியலை விடுத்து மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

– ருத்­திரன்- –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.