Jump to content

“Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள்


Recommended Posts

 

 

 
MV5BNzkzM2QzMzUtYTZmOS00YWZhLTliNDktMTk0

 

 

“Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள்

உலக சினிமா என்றாலே ஈரானிய சினிமாக்களுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு கொடுக்கப்படும் உயர் விருதுகள் பலவற்றை ஈரானிய சினிமாக்கள் தன்வசப்படுத்திவிடுகின்றன. அதுபோன்று உலக சினிமா இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் “சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” (Children of Heaven) படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம் .

அலி, சாரா என்ற அண்ணன் தங்கையையும் அவர்களின் காலணியை பற்றியதும்தான் இந்தப் படம், ஒரு மசூதியில் வேலை செய்துகொண்டே, கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் சிறுவன் அலியின் தந்தை. மூன்றாவது குழந்தை பிறந்து உடல்நிலை சரி இல்லாததால் வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார் அலியின் தாய். எனவே அம்மாவுக்கு உதவியாக இருக்கும் பொறுப்பும் அலி, சாராவுக்கு வருகிறது .

maxresdefault-701x394.jpg

 

ஒருநாள் சாராவின் காலணி பழுதடைய அதை தைப்பதற்காக கொண்டு செல்லும் அலி அதை தொலைத்து விட சோகமாக வீடு திரும்புகிறான். (இனிமேல்தான் நாம் அலி, சாராவோட குழந்தையாகவே பயணிப்போம். அந்த உணர்வை இயக்குனர் நம்மிடையே கடத்திய விதம் உண்மையிலேயே அற்புதம்) வெறும் கையேடு வரும் அலியை கண்டு சாரவும் சோகமாக யார் இப்போது காலணி தொலைந்த விஷயத்தை சொல்லுவது என்று இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் நம் மனதில் நீங்காமல் நிற்கும் ஒரு காட்சி. அப்பாவிடம் சொன்னால் கோபப்படுவார் என்பதை தாண்டி அவரால் புதிய காலணி வாங்கித்தர இயலாது என்று இறுதியில் அலியின் காலணியை காலையில் சாரா அணிந்து தன்னுடைய பள்ளிக்கு போவதும், சாரா போய் திரும்பிய பின் அதை மாட்டிக்கொண்டு அலி பள்ளி போவதாகவும் முடிவு செய்வார்கள். (அவுங்க ஊர்ல ஷிப்ட் முறைல ஸ்கூல் இருக்கும் போல)

காலையில் பள்ளி செல்லும் சாரா மணி அடித்ததும் அங்கிருந்து அண்ணனுக்காக ஓடி வருவதும் அங்கிருந்து அதை அலி அணிந்து ஓடும் காட்சி நாம் “நமது பாலியத்தில் புது சீருடை வாங்கமுடியாமல் நமது அண்ணன்களின் சீருடை அணிந்து சென்ற நியாபகம் வருகிறது”. பள்ளியில் சாராவிற்கு தேர்வு வர அண்ணன் காத்திருப்பதை எண்ணியபடியே பதில் தெரிந்தும் பாதியிலேயே தேர்வை முடித்து ஓடுகிறாள் சாரா. தாமதமாக வந்த தங்கையை திட்ட கண்ணீருடன் சாரா பார்கும் அந்தக்  காட்சி ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் போதாது.

iran-2.jpg

 

அதன் பின் ஒரு வார இறுதியில் நகர்ப்புற பெரிய வீடுகளில் தோட்டங்களை செப்பனிடும் பணி கிடைக்குமா என்று கேட்க கருவிகளோடு அலியையும் அழைத்து செல்கிறார் அவன் தந்தை. (அவர்களிடம் ஆங்கிலத்தில் மரியாதையாக பேச அலி உதவுவான் என்று) அந்த பெருநகர மாடி வீடுகளை அவர்கள் பார்க்கும் காட்சியும் அந்த ஏக்கமும் நம்மில் நுழைவதை தடுக்கமுடியாது. சில பல ஏமாற்றத்திற்கு பின் கிடைக்கும் ஒரு வாய்ப்பில் பணம் ஈட்டிய மகிழ்ச்சியில் அவர்கள் வேகமாக வர ஒரு சரிவில் விழுந்து சைக்கிள் உடைந்ததும் அலியின் புது காலணி கனவு மீண்டும் உடையும். (பணம் வந்த மகிழ்வில் அவர்கள் இறக்கத்தில் வேகமாக பயணிக்கும் காட்சியில் இயக்குனர் காட்டிய குறியீடு அருமை)

இந்த நேரத்தில் சாரா தன் பள்ளியில் பயிலும் சக மாணவி அந்த காலணியை அணிந்திருப்பதை பார்த்து அலியிடம் சொல்ல, இருவரும் அந்த குழந்தையை பின் தொடர்வார்கள். அந்த குழந்தை வீட்டிற்கு சென்றதும் கண் தெரியாத தந்தை வியாபாரத்திற்காக வெளியே வருவார். இதை பார்த்த சாராவும் அலியும் எதுவும் கேட்காமல் வந்துவிடுவார்கள். இவ்வளவு ஏழ்மையிலும் தாங்கள் கஷ்டபட்ட போதும் பிறர் துன்பத்தை பெரிதாக அந்த குழந்தைகள் எண்ணியது இயக்குனர் தெய்வமே நீங்க வேற லெவல் (அந்த காட்சி அமைக்கப்பட்ட விதமும் செம! இந்த ஒரு காட்சி குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் என்று உணர்த்திவிடும்)

MV5BMjRkNjkzMzEtYWU2NS00OWY5LWIzMGEtMjJj

 

ஒருநாள் அவர்கள் ஊரில் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது. முதல் இரண்டு இடத்திற்கு கோப்பையும், மூன்றாவது இடத்திற்கு புது காலணி ஒன்றையும் பரிசாக அறிவிக்க, பள்ளி விளையாட்டு ஆசிரியரிடம் தானும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்கிறான் அலி. ஆனால் ஏற்கனேவே ஓடும் நபர்களை தேர்ந்தெடுத்துவிட்டதாக சொல்ல, அவர் முன் அலி மைதானத்தில் ஓடிக்காட்டுவான். அவனது முயற்சியை கண்டு அவனையும் போட்டியில் சேர்த்துகொள்வார் ஆசிரியர். தங்கையிடம் புது காலணியுடன் வருவதாக சொல்வான் அலி.

ஓட்டப்பந்தயம் நடக்கும் இடத்தில எல்லா குழந்தைகளும் புது காலணி, டிராக் என வர தன் பழைய காலணியுடன் நிற்பான் அலி. பந்தயம் தொடங்க, அனைவரையும்விட வேகமாக ஓடிய அலி, மூன்றாமிடத்திற்குத்தான் காலனி என்பதை உணர்ந்து வேண்டுமென்றே மெதுவாக ஓட, மூன்றாவது இடத்திற்கும் சிக்கல் வந்து விழுந்துவிடுவான். இங்கு சாரா ஓடுவது காட்டப்படும். ஆம் சாரா பள்ளியில் ஓடிருவரும் காட்சி அலியின் நினைவுக்குவர மீண்டும் ஓடுவான். கடைசி சிலநொடிகள் நான்கு மாணவர்களும் எல்லைக்கோட்டை கடக்க அனைவரும் கீழே விழுந்துவிடுவர். விழுந்த அலியை அவனது ஆசிரியர் தூக்கியதும், அலி அவரிடம் சார் நான் மூணாவதா வந்துட்டனா? என்று கேட்க, நீ தான்டா முதலிடம் என்று சொல்வர் ஆசிரியர். அங்கிருந்த அனைவரும் அலியை தூக்கிவைத்து கொண்டாட, கிடைக்காத காலணியை பார்த்து அழுதுகொண்டிருப்பான் அலி. அலிக்கும்சாராவுக்கும் புது காலணி கிடைத்ததா இல்லையா என்று இறுதி ஷாட்டில் காட்டியிருப்பார் இயக்குனர். அதை படம் பாத்து தெருஞ்சுக்கோங்களே! (இந்த இறுதி காட்சியை நமது தமிழ் சினிமா நிறைய காப்பி அடித்திருக்கிறது)

3-3-701x394.png

 

1997ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது. சாரா தன் அண்ணனின் காலணியை கால்வாயில் தவறவிட்டு துரத்தும் காட்சி, கடைசி ஓட்டப்பந்தய காட்சி போன்றவை கண்டிப்பாய் தவறவிடக்கூடாத காட்சிகள். ஈரானில் சினிமா என்பது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அங்கு இதுபோன்ற படைப்புகள் வருவதுதான் வியப்பு. வெறும் குழந்தைகள் திரைப்படமாக எடுக்காமல் எல்லாரும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனர் “மஜீத் மஜீதி“க்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும் ..

மீண்டும் ஒரு உலக சினிமாவோடு சந்திப்போம் …

https://roar.media/tamil/literature/children-of-heaven/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.