Jump to content

தந்தையுமானவன்.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் இறுதி  பாகத்தை      நெருக்குகிறது போல் தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் அதிகாலை வசந்தி டாக்டருக்கு போன் செய்து வயிறு அதிகம் நோகுறதாக சொல்கிறாள். சற்று நேரத்தில் நிவேதா அங்கு வந்து அவளை பரிசோதித்து விட்டு தேவையான உடுப்புகள் துணிகளை எடுத்துக் கொண்டு தனது காரிலேயே அவளை கிளினிக்குக்கு அழைத்துக் கொண்டு போகிறாள். கதிரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் போகிறான். போகும்போதே இரு வீட்டாருக்கும் தகவல் போகிறது.கிளினிக்கில் வசந்தியை வராண்டாவில் மெதுவாக நடக்கும்படி சொல்லிவிட்டு நர்ஸிடம் அறையை ஆயத்தப் படுத்தும் படி சொல்கிறாள்.கதிர் ஆதுரத்துடன் அவளின் தோள் பிடித்து கூட நடக்கிறான். அங்கு வந்த நிவேதா வசந்தியிடம், உனக்கு சிரமமாய் இருந்தால் வலி தெரியாமல் இருக்க நாரியில் ஒரு ஊசி போடவா என்று கேட்க வசந்தி மறுத்து இந்த வலியை நான் ரசித்து அனுபவிக்கிறேன் டொக்டர். ஐ வில் மேனேஜ் என்கிறாள். வெரி குட்  இன்னும் சிறிது பொறுத்தால் சுகப்பிரசவமாகிவிடும்.அவள் படுக்கையில் படுக்கவும் பனிக்குடம் உடைகிறது. நீ விரும்பினால் இங்கே இருக்கலாம் என்று நிவேதா கூறவும், அவளின் வேதனை பார்க்க முடியாமல் கதிர் வெளியே வந்து விடுகிறான். அப்போது அவர்களின் பெற்றோர்களும் சகோதரங்களும் வந்து விட்டார்கள். யாராவது கொஞ்சம் வாருங்கள் என்று நிவேதா அழைக்க பார்வதியும் சிவகாமியும் உள்ளே செல்கின்றனர்.நர்ஸ் வசந்தியின் பைலை எடுத்து வந்து டொக்டரிடம் தர வசந்தி பார்க்கிறாள் அது பிங்கும் , நீலமும் இல்லாமல் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கு. வசந்தியின் பார்வையில் கேள்வி தொக்கி நிக்க நிவேதா கண்ணடிக்கிறாள். உதிரப்போக்கு அதிகமாகின்றது.ஈனஸ்வரத்தில் முனக அவளை பார்வதி அணைத்து  முந்தானையால் முக வேர்வையை துடைத்து விடுகிறாள்.

 வசந்தியின் ஒரு அலறலில் புதிய மலர் ஒன்று பூமியில் பூக்கிறது. அதன் கிளிக்குரல் கிளினிக்கில் மிதக்கிறது. அதை அப்படியே சுத்திய கொடியோடு அவளின் வெற்று மார்பில் குப்புறப் போட்டு இரு நிமிடத்தில் மீண்டும் வலியெடுக்கிறது, இன்னொரு மொட்டு முகையவிழ்ந்து வெளியே வருகின்றது. சுகப் பிரசவம். பேத்திமார் இருவருக்கும் பேரானந்தம். நர்ஸுடன் சேர்ந்து இருவரும் பிள்ளைகளை அணைத்து எடுத்துக் கொண்டு சுத்தப் படுத்த உள்ளே போகின்றனர்.நிவேதா வெளியே வந்து கதிரிடம் நீ போய் வசந்தியை பார் உன்னைத்தான் தேடுகிறாள் என்று சொல்ல அவன் உள்ளே போகிறான்.அவள் மற்றவர்களிடம் ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் என்று சொல்ல முத்துவேலரும் ராஜசேகரும் காருக்கு போய் என்ன பிள்ளை என்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்த சர்க்கரையையும் கற்கண்டையும் எடுத்து வந்து அங்கு நின்ற எல்லோருக்கும் தருகின்றனர்.கதிர் போய் வசந்தியின் காலடியில் நின்று அவளின் இரு பாதத்தையும் புறாக்குஞ்சுகளைப் பொத்திப் பிடிப்பதுபோல் பிடித்து முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவுகிறான்.வசந்தியும் எட்டி அவன் முடியைப்பிடித்து இழுத்து தன்னோடு அனைத்துக் கொள்கிறாள்.

கதிர்: வசந்திம்மா குழந்தை உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திப் போட்டாளா.... !

வசந்தி: குழந்தையா..., இப்ப நீ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பாடா. பையன் என்னைப்போல சமர்த்தாய் வந்திட்டான்.... இந்தப் பெட்டைதான் உன்னைமாதிரி என்னை ஒரு வழி பண்ணிட்டாள். 

 கதிர் : நிஜமாவாடி... "ஐ லவ் யு  சோ மச்"நீ கெட்டிக்காரியடி எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் சாதிச்சிட்டாய்  என்று நெற்றியில் முத்தமிடுகிறான்.கண்ணீர் ஒழுக அழுகிறான். என்னங்க இது. அழாதடா எல்லோரும் இருக்கிறார்கள்.... போடி நீ...! 

 வசந்தி: இல்லைடா நீ இவ்வளவு நாளும் மனசுக்குள் பட்ட வேதனை எனக்கு தெரியாதென்று நினைக்கிறியா. உன்னை ஒரு காட்டான் என்று நினைத்துதான் உன்னோடு வாழ வந்தன்.ஆனால் நீயும் மாமா அத்தை மற்றும் எல்லோருடைய அன்பும் என்னை நெகிழ்த்தி விட்டது. நாளாவட்டத்தில் நானே உனக்குள் உருகிப் போனேன். இந்த நிமிஷம் இந்த உலகில் உன்னைவிட எதுவுமே எனக்கு பெரிசில்ல, ஐ லவ் யு டா அவன் கன்னத்தை தடவி விடுகிறாள்.வெளியே இரு பிள்ளைகளையும் எல்லோரும் ஆசையுடன் தொட்டு தொட்டு பார்க்கினம்.மாப்பிள்ளை எங்க, சிவகாமி கேட்கிறாள். அண்ணா உள்ளே அண்ணியுடன் இருக்கிறான் என்று சௌம்யா சொல்ல பொறுங்கோ முதலில் பிள்ளைகளை தேப்பனிட்ட  காட்டிட்டு வாறன் என்று உள்ளே போகிறார்கள்.  

பிள்ளைகளை இருவரும் கொண்டுவந்து இரு பக்கத்தாலும் அவனது இரண்டு கைகளிலும் தருகின்றனர். அவன் முதன் முதலாக இந்தப் பச்சைப் பிள்ளைகளை எப்படித் தூக்குவது என்று தெரியாமல் சிலேட்டில் "அ "எழுத தடுமாறும் சிறுபிள்ளைபோல் தவிக்கிறான். வசந்தியும் அவன் தவிப்பை பார்த்து எதையோ நினைத்து சிரிக்க பையன் அவன் மார்பில் "சூ " அடிக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்....!

கதிர் தந்தையுமாகினான்....!

யாவும் கற்பனை....!

ஆக்கம் சுவி .....! tw_blush: 

 

 

Link to comment
Share on other sites

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

நான் ரெடி பாஸ்  ஐ யம் வெயிட்டிங்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

தர்சன் இதை முதலே எனக்கு சொல்லி இருந்தால், வசந்தி அப்பப்ப கதிருக்கு கரண்டியால ரெண்டு போடுறமாதிரி எழுதி இருக்கலாம். இட்ஸ் டூ லேட் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை, சுவியர்!

இன்று தான் முழுக்கதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்!

தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/08/2017 at 2:24 AM, suvy said:

காண்டமோ, அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான்.

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் மிக அருமையான ஒரு கதையை தந்ததற்க்கு நன்றி.மிகவம் அனுபவித்து வாசித்தேன்.சரி சரி ஒரு சின்ன ஓய்வு தரலாம்.விரைவில் அடுத்த கதையுடன் வரவும்.இது வேண்டுகோள் இல்லை.அன்புக் கட்டளை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

ஆசை யாரை விட்டு வைச்சுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/07/2017 at 3:31 PM, நிலாமதி said:

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

நன்றி சகோதரி....!  tw_blush:

On 21/07/2017 at 7:04 PM, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அதுதானே....!  tw_blush:

On 21/07/2017 at 8:25 PM, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

தொடரும் போடுவது எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது கதை தானா இளைத்து சுவை. நன்றி கருத்துக்கு....!  tw_blush:

On 21/07/2017 at 10:39 PM, தமிழ் சிறி said:

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

நான் யாழ்ப்பாணத்தான் தானே எப்படி மறக்க முடியும் சிறியர்....நன்றி வரவுக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 23/07/2017 at 11:23 AM, putthan said:

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

அந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் அதுதான் பூஸ்ட் . நன்றி புத்ஸ்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/09/2017 at 6:59 PM, நவீனன் said:

அடுத்த கதை எப்ப..:rolleyes:

சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும் தெரியாதோடி நேக்கு 

எப்போ இருந்தது இப்போ வாரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.7.2017 at 4:11 PM, suvy said:

பார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான்.  அது எப்படி அத்தை....! சிறிது கவனித்து பார்த்தால் புரியும்.  "நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).

ஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....!

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

அம்மன் கோயிலில் ஐந்து முறை சுற்றி கும்பிடுவது நல்லது என்று காஞ்சி மஹா பெரியவர் சொல்லுவார்.அதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரி.கோடாலிக் கொண்டை  என்பது காண வேலைகள் செய்யும்போது முடி தோளில் படராமல்  பின்னந் தலையில் உயர்த்திப் போடுவது.அவசரத்துக்கு அள்ளி முடிவது என்பார்களே அந்த மாதிரி...!

Résultat de recherche d'images pour "hairstyle indian village women"

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி சகோதரி........ tw_blush:

On 10/15/2017 at 9:12 PM, nochchi said:

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

நீங்கள் எல்லாம் பாராட்டும்போது மனம் மகிழ்வாக இருக்கின்றது.....நானும் பொறுமையாக இக் கதையை ஒருக்கால் வாசித்து பார்க்க வேண்டும்......!  ?

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு பின் இந்த கதையை பொறுமையாக வாசிக்கும்போது மனசில் ஒரு நிறைவு......!  🤔

இன்னும் இன்னும் பழைய கதைகளை தேடி வாசிக்க வேண்டும் போல் ஒரு எண்ணம்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.