Jump to content

தந்தையுமானவன்.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் இறுதி  பாகத்தை      நெருக்குகிறது போல் தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாள் அதிகாலை வசந்தி டாக்டருக்கு போன் செய்து வயிறு அதிகம் நோகுறதாக சொல்கிறாள். சற்று நேரத்தில் நிவேதா அங்கு வந்து அவளை பரிசோதித்து விட்டு தேவையான உடுப்புகள் துணிகளை எடுத்துக் கொண்டு தனது காரிலேயே அவளை கிளினிக்குக்கு அழைத்துக் கொண்டு போகிறாள். கதிரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் போகிறான். போகும்போதே இரு வீட்டாருக்கும் தகவல் போகிறது.கிளினிக்கில் வசந்தியை வராண்டாவில் மெதுவாக நடக்கும்படி சொல்லிவிட்டு நர்ஸிடம் அறையை ஆயத்தப் படுத்தும் படி சொல்கிறாள்.கதிர் ஆதுரத்துடன் அவளின் தோள் பிடித்து கூட நடக்கிறான். அங்கு வந்த நிவேதா வசந்தியிடம், உனக்கு சிரமமாய் இருந்தால் வலி தெரியாமல் இருக்க நாரியில் ஒரு ஊசி போடவா என்று கேட்க வசந்தி மறுத்து இந்த வலியை நான் ரசித்து அனுபவிக்கிறேன் டொக்டர். ஐ வில் மேனேஜ் என்கிறாள். வெரி குட்  இன்னும் சிறிது பொறுத்தால் சுகப்பிரசவமாகிவிடும்.அவள் படுக்கையில் படுக்கவும் பனிக்குடம் உடைகிறது. நீ விரும்பினால் இங்கே இருக்கலாம் என்று நிவேதா கூறவும், அவளின் வேதனை பார்க்க முடியாமல் கதிர் வெளியே வந்து விடுகிறான். அப்போது அவர்களின் பெற்றோர்களும் சகோதரங்களும் வந்து விட்டார்கள். யாராவது கொஞ்சம் வாருங்கள் என்று நிவேதா அழைக்க பார்வதியும் சிவகாமியும் உள்ளே செல்கின்றனர்.நர்ஸ் வசந்தியின் பைலை எடுத்து வந்து டொக்டரிடம் தர வசந்தி பார்க்கிறாள் அது பிங்கும் , நீலமும் இல்லாமல் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கு. வசந்தியின் பார்வையில் கேள்வி தொக்கி நிக்க நிவேதா கண்ணடிக்கிறாள். உதிரப்போக்கு அதிகமாகின்றது.ஈனஸ்வரத்தில் முனக அவளை பார்வதி அணைத்து  முந்தானையால் முக வேர்வையை துடைத்து விடுகிறாள்.

 வசந்தியின் ஒரு அலறலில் புதிய மலர் ஒன்று பூமியில் பூக்கிறது. அதன் கிளிக்குரல் கிளினிக்கில் மிதக்கிறது. அதை அப்படியே சுத்திய கொடியோடு அவளின் வெற்று மார்பில் குப்புறப் போட்டு இரு நிமிடத்தில் மீண்டும் வலியெடுக்கிறது, இன்னொரு மொட்டு முகையவிழ்ந்து வெளியே வருகின்றது. சுகப் பிரசவம். பேத்திமார் இருவருக்கும் பேரானந்தம். நர்ஸுடன் சேர்ந்து இருவரும் பிள்ளைகளை அணைத்து எடுத்துக் கொண்டு சுத்தப் படுத்த உள்ளே போகின்றனர்.நிவேதா வெளியே வந்து கதிரிடம் நீ போய் வசந்தியை பார் உன்னைத்தான் தேடுகிறாள் என்று சொல்ல அவன் உள்ளே போகிறான்.அவள் மற்றவர்களிடம் ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் என்று சொல்ல முத்துவேலரும் ராஜசேகரும் காருக்கு போய் என்ன பிள்ளை என்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்த சர்க்கரையையும் கற்கண்டையும் எடுத்து வந்து அங்கு நின்ற எல்லோருக்கும் தருகின்றனர்.கதிர் போய் வசந்தியின் காலடியில் நின்று அவளின் இரு பாதத்தையும் புறாக்குஞ்சுகளைப் பொத்திப் பிடிப்பதுபோல் பிடித்து முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவுகிறான்.வசந்தியும் எட்டி அவன் முடியைப்பிடித்து இழுத்து தன்னோடு அனைத்துக் கொள்கிறாள்.

கதிர்: வசந்திம்மா குழந்தை உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திப் போட்டாளா.... !

வசந்தி: குழந்தையா..., இப்ப நீ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பாடா. பையன் என்னைப்போல சமர்த்தாய் வந்திட்டான்.... இந்தப் பெட்டைதான் உன்னைமாதிரி என்னை ஒரு வழி பண்ணிட்டாள். 

 கதிர் : நிஜமாவாடி... "ஐ லவ் யு  சோ மச்"நீ கெட்டிக்காரியடி எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் சாதிச்சிட்டாய்  என்று நெற்றியில் முத்தமிடுகிறான்.கண்ணீர் ஒழுக அழுகிறான். என்னங்க இது. அழாதடா எல்லோரும் இருக்கிறார்கள்.... போடி நீ...! 

 வசந்தி: இல்லைடா நீ இவ்வளவு நாளும் மனசுக்குள் பட்ட வேதனை எனக்கு தெரியாதென்று நினைக்கிறியா. உன்னை ஒரு காட்டான் என்று நினைத்துதான் உன்னோடு வாழ வந்தன்.ஆனால் நீயும் மாமா அத்தை மற்றும் எல்லோருடைய அன்பும் என்னை நெகிழ்த்தி விட்டது. நாளாவட்டத்தில் நானே உனக்குள் உருகிப் போனேன். இந்த நிமிஷம் இந்த உலகில் உன்னைவிட எதுவுமே எனக்கு பெரிசில்ல, ஐ லவ் யு டா அவன் கன்னத்தை தடவி விடுகிறாள்.வெளியே இரு பிள்ளைகளையும் எல்லோரும் ஆசையுடன் தொட்டு தொட்டு பார்க்கினம்.மாப்பிள்ளை எங்க, சிவகாமி கேட்கிறாள். அண்ணா உள்ளே அண்ணியுடன் இருக்கிறான் என்று சௌம்யா சொல்ல பொறுங்கோ முதலில் பிள்ளைகளை தேப்பனிட்ட  காட்டிட்டு வாறன் என்று உள்ளே போகிறார்கள்.  

பிள்ளைகளை இருவரும் கொண்டுவந்து இரு பக்கத்தாலும் அவனது இரண்டு கைகளிலும் தருகின்றனர். அவன் முதன் முதலாக இந்தப் பச்சைப் பிள்ளைகளை எப்படித் தூக்குவது என்று தெரியாமல் சிலேட்டில் "அ "எழுத தடுமாறும் சிறுபிள்ளைபோல் தவிக்கிறான். வசந்தியும் அவன் தவிப்பை பார்த்து எதையோ நினைத்து சிரிக்க பையன் அவன் மார்பில் "சூ " அடிக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்....!

கதிர் தந்தையுமாகினான்....!

யாவும் கற்பனை....!

ஆக்கம் சுவி .....! tw_blush: 

 

 

Link to comment
Share on other sites

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

நான் ரெடி பாஸ்  ஐ யம் வெயிட்டிங்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tharsan1985 said:

கதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா  ??

இதை ஒரு  திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன்  ??

தர்சன் இதை முதலே எனக்கு சொல்லி இருந்தால், வசந்தி அப்பப்ப கதிருக்கு கரண்டியால ரெண்டு போடுறமாதிரி எழுதி இருக்கலாம். இட்ஸ் டூ லேட் ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை, சுவியர்!

இன்று தான் முழுக்கதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்!

தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/08/2017 at 2:24 AM, suvy said:

காண்டமோ, அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான்.

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

கதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்:10_wink:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் மிக அருமையான ஒரு கதையை தந்ததற்க்கு நன்றி.மிகவம் அனுபவித்து வாசித்தேன்.சரி சரி ஒரு சின்ன ஓய்வு தரலாம்.விரைவில் அடுத்த கதையுடன் வரவும்.இது வேண்டுகோள் இல்லை.அன்புக் கட்டளை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

புத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல ?

ஆசை யாரை விட்டு வைச்சுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/07/2017 at 3:31 PM, நிலாமதி said:

 நல்ல  கதை     நன்றி.  மேலும் தொடர்க 

நன்றி சகோதரி....!  tw_blush:

On 21/07/2017 at 7:04 PM, ஜீவன் சிவா said:

யோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா 

நண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.

அதுதானே....!  tw_blush:

On 21/07/2017 at 8:25 PM, சுவைப்பிரியன் said:

சுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்:)

தொடரும் போடுவது எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது கதை தானா இளைத்து சுவை. நன்றி கருத்துக்கு....!  tw_blush:

On 21/07/2017 at 10:39 PM, தமிழ் சிறி said:

மிகவும்  ரசிக்கும்...  மறந்து போன,  யாழ்ப்பாண  எழுத்து நடை. சுவி. :110_writing_hand:
மெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய்  விட்ட, 
முன்னோர்களின்... சொற் பிரயோகங்கள். :grin:
அவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு,  நன்றிகள்...   சுவி.  :) 

நான் யாழ்ப்பாணத்தான் தானே எப்படி மறக்க முடியும் சிறியர்....நன்றி வரவுக்கும் கருத்துக்கும்....!  tw_blush:

On 23/07/2017 at 11:23 AM, putthan said:

முட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....

அந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் அதுதான் பூஸ்ட் . நன்றி புத்ஸ்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/09/2017 at 6:59 PM, நவீனன் said:

அடுத்த கதை எப்ப..:rolleyes:

சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும் தெரியாதோடி நேக்கு 

எப்போ இருந்தது இப்போ வாரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.7.2017 at 4:11 PM, suvy said:

பார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான்.  அது எப்படி அத்தை....! சிறிது கவனித்து பார்த்தால் புரியும்.  "நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).

ஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....!

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

அம்மன் கோயிலில் ஐந்து முறை சுற்றி கும்பிடுவது நல்லது என்று காஞ்சி மஹா பெரியவர் சொல்லுவார்.அதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரி.கோடாலிக் கொண்டை  என்பது காண வேலைகள் செய்யும்போது முடி தோளில் படராமல்  பின்னந் தலையில் உயர்த்திப் போடுவது.அவசரத்துக்கு அள்ளி முடிவது என்பார்களே அந்த மாதிரி...!

Résultat de recherche d'images pour "hairstyle indian village women"

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2017 at 4:37 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும்  எல்லாவற்றையும்தூக்கி  சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.

உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி சகோதரி........ tw_blush:

On 10/15/2017 at 9:12 PM, nochchi said:

அழகான ஒரு திரைப்படம்போல் கதையை  நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.   அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது.  ஒரு இளம்  இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல்  வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு.  மேலேயுள்ளவை  மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே   எடுத்தாழும்  உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம்  எமது  அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு  அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன. 

பாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால்  தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.

நீங்கள் எல்லாம் பாராட்டும்போது மனம் மகிழ்வாக இருக்கின்றது.....நானும் பொறுமையாக இக் கதையை ஒருக்கால் வாசித்து பார்க்க வேண்டும்......!  ?

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு பின் இந்த கதையை பொறுமையாக வாசிக்கும்போது மனசில் ஒரு நிறைவு......!  🤔

இன்னும் இன்னும் பழைய கதைகளை தேடி வாசிக்க வேண்டும் போல் ஒரு எண்ணம்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.