Jump to content

ஓவியர் வீரசந்தானம் ஐயா !


Recommended Posts

ஓவியர் வீரசந்தானம் ஐயா !

உங்கள் பெயர் ஈழ வரலாற்றில் எழுதிவைக்கப்படும். தலை வணங்கி கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்!

விடுதலைப் பயணத்தில் இதுவரை இழப்புக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஆனாலும் மனம் இறுகவில்லை. பதிலாக, ஒவ்வொரு இழப்புக்களின் போதும் மனம் கலங்கி, தடுமாறித்தான் போகின்றது.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஓவியர் வீரசந்தானம் ஐயா !

உங்கள் பெயர் ஈழ வரலாற்றில் எழுதிவைக்கப்படும். தலை வணங்கி கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்!

விடுதலைப் பயணத்தில் இதுவரை இழப்புக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஆனாலும் மனம் இறுகவில்லை. பதிலாக, ஒவ்வொரு இழப்புக்களின் போதும் மனம் கலங்கி, தடுமாறித்தான் போகின்றது.

 

 

காணொளியின் தாக்கம் ஆழ்ந்த விசனத்தை ஏற்படுத்துகிறது..vil-triste.gif

பகிர்விற்கு நன்றி நுணா..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை பதறவைக்கும் காணொளி....!

நன்றி நுணா.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது ஈழ விடுதலை சார்ந்த செயற்பாடுகளைக்கண்டு நான் 
எனக்குள் வெட்கப்பட்டதுண்டு.

அஞ்சலிகள்  ஐயா.

  • Like 1
Link to comment
Share on other sites

மறைந்த ஓவியர் வீர சந்தானம் ஆசைப்பட்டது இதற்குத்தான்...!

கே.பாலசுப்பிரமணி

 
 

வீர சந்தானம்

"அவ்வளவு லேசில் என் உயிர் போகாது. தனி ஈழத்தை பார்த்துவிட்டுதான் இந்த உயிர் பிரியும்'' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பார் வீர சந்தானம். அவரது மறைவு  காரணமாக தமிழ் சமூகம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது.

விருப்ப ஓய்வு

ஓவியர் வீர சந்தானம், கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் என்ற ஊரைச் சேர்ந்தவர். நவீன ஓவியராக, சமூகப் போராளியாக அறியப்பட்டவர். மத்திய நெசவாளர் மையத்தில் பணியாற்றியவர். இந்த மையத்தின் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றியவர். 25 ஆண்டுகள் பணிக்குப் பின்னர், தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற அக்கறையோடு தானாக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். தஞ்சை அருகே விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் உள்ள சிற்பங்களுக்கான ஓவியங்களை வரைந்தவர்.  பாலுமகேந்திராவின் சந்தியா ராகம் திரைப்படத்தில் நடித்தவர். பீட்சா உட்பட மேலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகராக...   

கடந்த 2015-ம் ஆண்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல் நலம் தேறினார். ஈழத்தமிழர்களுக்கான கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். கி.ராஜநாராயணன் எழுதி, இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய வேட்டி என்ற குறும்படத்தில் வீர சந்தானம் நடித்திருக்கிறார்.

வீர சந்தானம் மறைவை அடுத்து தமிழ் இன உணர்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். வ.கெளதமனிடம் வீர சந்தானத்தின் நினைவுகள் குறித்து கேட்டோம். "தம் வாழ்நாள் முழுக்க, தமிழ், தமிழ் இனம், தமிழ் ஈழ விடுதலை என வாழ்ந்த ஒரு தூரிகைக் கலைஞர். தம்முடைய மனைவி மனநிலை சரியில்லாத நிலையில் கூட, ஒரு குழந்தையைப் போல காதல் மனைவியைப் பார்த்துக்கொண்டவர். கூட்டங்களில் பங்கேற்க செல்லும்போது, தம் மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், உடனே வீட்டுக்குத் திரும்பி மனைவியை கவனித்துக்கொள்வார்.

குறும்பட நாயகர்

ஒரு முறை உடல் நிலைக்குறைவாக இருந்தபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். வெளிச்சம் படக்கூடாது என்று கூறி இருந்தனர்.

அந்த சமயத்தில் லயோலா கல்லூரி மாணவர்களுக்காக, கி.ராஜநாராயணன் கதையை வேட்டி என்ற பெயரில் குறும்படமாக நான் எடுத்தேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். மருத்துவர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதைச் சொன்னார். என்னை கொல்லப்பார்க்கிறாய் என்றும் சொன்னார். அப்படி இல்லை. நீங்கள் முழுக் கதையையும் கேளுங்கள், நீங்களே நடிக்க விரும்புவீர்கள் என்றேன். அதன்படி முழுக் கதையையும் சொல்லி முடித்த உடன், 'நான் இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சாவேன்' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

என்னிடம் அவர், ஒரு பைசா கூட வாங்காமல் குறும்படத்தில் நடித்தார். தம் சொந்த செலவில் சென்னையில் இருந்து டாக்சியில் காஞ்சிபுரத்துக்கு நடிக்க வந்தார். அதேபோல குறும்படத்தின் இறுதிக் காட்சியில் மிகவும் ஆக்ரோஷமாக இந்த தேசத்தை நினைத்து காரி உமிழ்வது போன்ற காட்சி இருந்தது. அதில் ஆக்ரோஷமாக அவரால் கத்த முடியுமா என்று நினைத்தேன். அப்போது அவர், அதை மட்டும் டப்பிங்க் மூலம் குரல் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நான், இல்லை நீங்களே சொன்னால்தான் சரியாக இருக்கும் என்றேன். அதன் படி வேட்டி படத்துக்காக குரல் கொடுத்தார்.

போய்வா என் கதாநாயகனே  

தமிழினத்துக்காக உயிர்கொடுத்துப் போராடியவர். இந்த மண்ணில் இன்றைக்கு அவர் உயிரை விட்டிருக்கிறார். என்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்தவர். தமிழ் உணர்வோடு நான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். உலகம் முழுக்க இருந்து வீர சந்தானம் இழப்பு பற்றி என்னிடம் கேட்டு வருகின்றனர்.

போய் வா என் கதாயாநாயகனே,
உன் ஆன்மா அமைதியாகட்டும்
உன் சொல், உன் செயல் அசராமல்
பின் தொடர்கிறோம் போய்வா

 

http://www.vikatan.com/news/tamilnadu/95449-this-is-the-last-wish-of-artist-veerasanthanam.html?artfrm=related_article

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு அஞ்சலிகள்.  அவர் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.