Jump to content

மனைவியின் காதலனை பாலச்சந்திரன் எவ்வாறு கடத்திப் படுகொலை செய்தார்?


Recommended Posts

 

 

இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரானா ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதன்படி சிவானந்தன் சுரேன் என்பவர் தனது மனைவியைத் திருமணம் செய்து தனக்குப் போட்டியாக வரப்போகிறார் என்ற மனோநிலையில் அவரைக் கடத்திக் கொலை செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய மூவர் இணைந்து 12 மணி நேரமாக சுரேனைக் கடத்தி வைத்திருந்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களின் பின்னர் சுரேன் கொல்லப்படார்.

கொல்லபட்ட சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண்ணும் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுரேன் நீண்ட கால வன்முறைக்கமையவே கொல்லப்பட்டார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் மனைவியான ரகுபதியும் சுரேனும் ஏற்கனவே பல வருடங்களின் முன் இலங்கையில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் முக நூல் வாயிலாக தம்மை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. ரகுபதியின் கணவரான பாலச்சந்திரன் ரகுபதியை தவறான நடத்தையுள்ளவர் என்று விவகரத்துக்கு முடிவெடுத்தார். ரகுபதியும் தனது மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு முடிவு கட்ட விவாகரத்துக்கு தயாரானார். பின்னர் அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.

 

இதன் பின்னரே சுரேனுக்கும் ரகுபதிக்கும் உள்ள தொடர்பை வைத்து சுரேனை பழிவாங்க பாலச்சந்திரன் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.

http://www.canadamirror.com/uk/04/131355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

 

8 hours ago, putthan said:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

கனடாவில் இருந்து ஜெர்மனி ஊடாக சொரக்கத்துக்கு என்று 
எண்ணி வாங்கிய டிக்கெட் ........ உலகத்தில் இருந்தே  அனுப்பி விட்டது.
விதி எவ்வாறு சுற்றி வளைத்து வந்திருக்கிறது ? என்று எண்ணும்போது ....

தமிழ்சிறி அன்னார் ...
குமாரசாமி அண்ணர் 
விசுகு அண்ணர் 
மற்றும் நிழலி சாமி மாரை பற்றி எண்ணும்போதுதான் 
எந்த பத்த்ரிக்கையில் எப்படி படிக்க நேருமோ ?
என்று ஒரே அச்சமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

கனடாவில் இருந்து ஜெர்மனி ஊடாக சொரக்கத்துக்கு என்று 
எண்ணி வாங்கிய டிக்கெட் ........ உலகத்தில் இருந்தே  அனுப்பி விட்டது.
விதி எவ்வாறு சுற்றி வளைத்து வந்திருக்கிறது ? என்று எண்ணும்போது ....

தமிழ்சிறி அன்னார் ...
குமாரசாமி அண்ணர் 
விசுகு அண்ணர் 
மற்றும் நிழலி சாமி மாரை பற்றி எண்ணும்போதுதான் 
எந்த பத்த்ரிக்கையில் எப்படி படிக்க நேருமோ ?
என்று ஒரே அச்சமாக இருக்கிறது. 

தம்பி! என்ன வெருட்டுறீர் போல கிடக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

அடுத்தவன் எச்சில் இலைக்கு அலையுறதுகள் எப்படியும் பொறுக்கித்தான் ஆகுங்கள். ஊசி இடம் கொடாமல்.. நூல் நுழையாது. இதற்காகத்தான்.. எம் முன்னவர்கள்.. ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுக்கப்பாட்டை.. கொண்டு வந்தார்கள். அது இன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு.. ஏன் புரட்சி என்று சொல்லப்பட்டும் சிதறிகப்பட்டு வரும் நிலையில்.. இவை எதிர்பார்க்கப்பட கூடியன தான்.சொந்த இனத்துக்குள்ளேயே அதிகம்...போட்டி போறாமை மிகுந்த எம் தமிழர் மத்தியில். 

எமது சமூகக் கட்டமைப்பு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்டால் அன்றி உதுகளை திருத்த ஏலாது. tw_blush:

Link to comment
Share on other sites

22 hours ago, nedukkalapoovan said:

"எச்சில் இலைக்கு" 

"எச்சில் இலை" -  தவிர்த்திருக்கக்கூடிய சொற்பதம்.........கணவன் மார்கள்  "எச்சில் இலைகள்" இல்லையா? 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 13.7.2017 at 10:59 AM, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

மகிழ்சசி அற்ற திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விவாகரத்து உறுதியாகிய பின்னர் ஆணோ, பெண்ணோ புதிய துணையை தேடுவது எவ்வாறு தவறாகும். ஒருவரை கொலை செய்யும் குற்றச்செயலை ஆதரிக்கிறீர்கள்.யாருக்கும் எந்த குற்றமும் செய்யாமல் தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுத்த ரகுபதியை குற்றம் சாட்டுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.