Jump to content

மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்


Recommended Posts

மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்

கவிதை: சுகுணா திவாகர், ஓவியம்: ரமணன்

 

மாய வித்தைக்காரனின் புறாக்கள்

ந்த மேஜிக் நிபுணர்
எப்போதும் வெள்ளைக் கைக்குட்டையைத்
தன் தொப்பிக்குள் நுழைத்து
புறாக்களை வெளியே எடுப்பார்.
தாங்கள் பிறந்ததே இந்தத் தொப்பிக்குள்தான்
என்று நம்ப ஆரம்பித்தன புறாக்கள்.
கொறித்துக்கொண்டிருந்த தானியங்களில் எல்லாம்
கீறிக்கீறி மேஜிக் நிபுணரின் பெயரை எழுதிவைத்தன.
பிறகு அவர் கைவித்தை அனைத்திலும்
ஊடாடிப் பறந்து திரிந்தன.
அழகான யுவதியை மேஜையில் கிடத்தி
கத்தியால் இரண்டு துண்டாக்கிப்
பின் ஒன்றாக்கவேண்டும்.
ஆனால், அவள் வயிற்றிலிருந்து
சிறகடித்தபடி புறாக்கள் வந்தபோது
மேஜிக் நிபுணரும் மலைத்துதான் போனார்.
காற்றிலிருந்து பூங்கொத்தை வரவழைக்க முயன்றபோதும்
புறாக்களே தோளில் வந்தமர்ந்தன.
அன்று முக்கியமான நிகழ்வு.
ஒரு யானையை மேடையிலிருந்து மறையச்செய்து
பார்வையாளர்களைக் கவரவேண்டும்.
என்ன முயன்றும்
யானை மறைந்தும் அதன் தந்தங்கள் மறையவில்லை.
வெண் தந்தங்கள் இரண்டும் புறாக்களாய் மாறியபோது
பார்வையாளர்கள் கைதட்டத்தான் செய்தார்கள்.
இனி மீள முடியாது என்று
தன் தொப்பிக்குள் விழுந்து
மறைந்துபோனார் மேஜிக் நிபுணர்.
பதிமூன்றாம்நாள் அந்தப் பிரமாண்டக் கட்டடத்தின் எட்டாவது மாடியில்
ஏ.சி.அவுட்டோருக்குக் கீழ்
தண்ணீர் விழும் என்று
தங்கள் சின்னஞ்சிறு அலகுகள் திறந்தவாறு
காத்து நின்றிருந்தன வெள்ளைப்புறாக்கள்.

p80a.jpg

காலச்சித்திரம்

காலம் இடதுகண்ணில் புகுந்து
வலதுகண்ணின் வழி வெளியேறியது.
சட்டை பொத்தான்களே கண்களாய் மாற
கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு
காலத்தின் சித்திரத்தை
வரையத்தொடங்கினார் ஓவியர்.
அரிதாய்ப் பெய்யும் ஆலங்கட்டி மழையில்
தெறித்து விழுந்த பனிக்கட்டிகளால்
பூமி நடுங்கத் தொடங்கியிருந்தது.
முன்னும் பின்னுமாய்த் துடித்துக்கொண்டிருந்த
பனிக்கட்டியொன்றை உள்ளங்கையில் ஏந்தியபோது
ரத்தச் சொட்டுகளோடு விழித்துப் பார்த்தன கண்கள்.
ஓவியத்துக்கு வெளியிலும் பெய்த மழையால்
அறையெங்கும் நிரம்பிய நீரும்
துடித்துக்கொண்டிருந்த ஆலங்கட்டி விழிகளும்.
மழையை நிறுத்த முடியாதபோது
கண்களைப் பிடுங்கி
ஓவியத்தின் மேற்கு மூலையில் பொருத்தினார்.
இப்போது மழை நின்றிருக்கலாம்.

சமனற்ற விகிதங்கள்

ல்லூரியின் கடைநிலைப் பணியாளர்
தனசேகர் அண்ணாவுக்கு வலது கை சூம்பியிருந்தது.
கக்கத்தில் இடுக்கிய குடையைப்போல
அவர் சூப்பிய கையுடன் எதிர்ப்படுவார்.
இடது கையையும் கொஞ்சம் எக்கித்தான்
கல்லூரி மணியை அடிப்பார்.
கோயில் மணியில் தொங்கும் நாக்கைப்போலவே
சற்று முன்பின்னாய் ஆடிக்கொண்டிருக்கும்
அவரது சூம்பிய வலது கை.
ஒருநாள் வலது கை கொண்டு
இடது கையை அளந்து பார்த்தார்.
பின் முழங்கால் வரையிலும் கணுக்கால் வரையிலும்
பிறகு முழு உடலையும் தன் வலது கை கொண்டு
அளந்து பார்த்தார்.
‘இந்த இடது கை ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது?’
என்பதைத் தவிர
இப்போது அவருக்கு எந்தக் குறையுமில்லை.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.