Jump to content

Oceanfront Condos:கிழக்கு கடற்கரை முகப்பாக சொகுசு வாழ்க்கை


Recommended Posts

Oceanfront Condos:கிழக்கு கடற்கரை முகப்பாக சொகுசு வாழ்க்கை

 

 

நிலாவெளி என்றவுடன், அழகிய நிலவொளியுடனான கடற்கரை என்பது எம் அனைவருக்கும் நினைவில் வரும். விருந்தினரை கவர்ந்திருக்கும் தெளிவான நீர், கடல்வாழினங்களின் உயிரியல் பரம்பல் மற்றும் அமைதியான சூழல் போன்ற அம்சங்கள் நாட்டில் அதிகளவானோர் விரும்பும் பகுதியாக இந்தப் பிரதேசத்தைச் திகழச் செய்துள்ளன.

Oceanfront-Condos.jpg

மேல் அல்லது தென் கடற்கரையோரங்களை போலின்றி, கிழக்கு கடற்கரையோரம் பிரத்தியேகமான கவரும் ஆற்றலை கொண்டுள்ளன. இந்தப்பகுதியில் Oceanfront Condos நிர்மாணிக்கப்படவுள்ளன. 

இலங்கையின் முதலாவது கடற்கரைக்கு முகப்பான, சேவை நோக்குடைய, சொகுசான, ஓய்வுநேர தொடர்மனைத்தொடராக அமையவுள்ளது.

unnamed__30_.jpg

Oceanfront Condos இல் தமது நீண்ட கால விடுமுறையை செலவிடுவது என்பது, விருந்தினர்களுக்கு கிழக்கு கடற்கரையின் அழகை அனுபவித்து மகிழும் வாய்ப்பை வழங்கும். நிலாவெளியின் புறா தீவு, இலங்கைக்கு பிரத்தியேகமான கடல் வாழ் உயிரினங்கள், வர்ணமயமான மீன்கள் மற்றும் ஆமைகள் போன்றவற்றை கண்டு களிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

 

சொந்த நீச்சல் நிலையங்கள் மற்றும் சர்வதேச  PADI அறிவுறுத்தல்களை வழங்குவோரைக் கொண்ட நிலாவெளிப்பகுதி நீச்சல் ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் பகுதியாக அமைந்துள்ளது.

unnamed__31_.jpg

Oceanfront Condos இல் உரிமையாளர் ஒருவர் கொண்டிருக்கும் அனுகூலங்களில், கடற்கரைக்கு முகப்பான சொத்து ஒன்றை கொண்டிருப்பது அடங்கியுள்ளது. பிரத்தியேக கடலை முகப்பாகக் கொண்ட பல்கனிகள், படுக்கையறைகள் மற்றும் சமையலறைகள் போன்றன விருந்தினர்களுக்கு உள்ளக பகுதியில் இருந்தவாறே இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பை வழங்கும். ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்கள் போன்றன வழங்காத அனுபவத்தை இந்த Condos வழங்குகின்றன.

unnamed__32_.jpg

உரிமையாளர்கள் தாம் விரும்பியதைப்போன்று குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள முடியும். தமது சௌகரியத்துக்கமைய குடியிருப்பை அலங்கரித்துக்கொள்ள முடியும். Oceanfront Condos இல் காணப்படும் விசேடத்துவமாக இது அமைந்துள்ளது.

 

நெரிசலான பகுதியிலிருந்து விடுபட்ட பகுதியாகவும், நிம்மதியாக விடுமுறையை செலவிடக்கூடிய இடமாகவும் அமைந்திருக்கும். மேலும் கிழக்கு கடற்கரையோர அழகை ரசிப்பதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் பகுதியாகவும் அமையும். மேலதிக விவரங்களுக்கு oceanfrontnilaveli.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.

http://www.virakesari.lk/article/21805

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லா தான் இருக்கு.

சுனாமி வந்தால்.... கடலுக்கு அண்மையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அமைப்பது எல்லாவற்றையையும் கருத்தில் எடுத்து நடைமுறைப்படுத்தினாலும், அதாவது சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு, இயறகை அனர்த்தங்களை கையாளுதல், வருங்கால கேள்வி, நீண்டகால பேண்தகமை போன்ற பரந்துபட்ட காரணிகளையும் கவனத்தில் எடுத்து  மற்றும் கட்டிட தராதரங்களையும் கட்டுப்பாடுகளையம்  கவனத்தில் கொண்டு அமைக்கப்பட்டாலும், நீண்ட கால பாவனை பற்றிய ஓர் கேவி இல்லாமல் இல்லை.    

ஏனெனில் இவற்றின் நீண்ட காலா  பாவனை மற்றும் பெறுமதி என்பது நீண்ட கால பராமரிப்புக்கு மற்றும் சேவையில்  என்பதில்  தங்கியுள்ளது.

இதற்கு  வாடிக்கையாளர் சேவை, விற்பனையின் பின்னான நீண்ட கால  வாடிக்கையாளர் கவனிப்பு என்பது  மிகவும் முக்கியம். இது இலங்கையைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமாக, புதிய வதிவிட கட்டங்களை பொறுத்தவரை இல்லை அல்லது மிகவும் புதிது ஆகும்.

அப்படி இருக்குமாயின்,  அசசேவையின் திருப்தி மற்றும் மதிப்பு என்பவை நிறை வழங்கல் தன்மையின் அடிப்படையில் (satisfaction and value at plenty of competetive, comprehensive and holistic service provision) இருக்குமா என்பதும் ஆக்க குறைந்தது கேள்வியேகுறியே.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.