Jump to content

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் – ஐங்கரநேசன்


Recommended Posts

ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன்
 

“என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில், அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில், ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (09) நடைபெற்றது. நல்லூர் பிரதேச சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே, மேற்குறித்த கருத்தை பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“விசாரணைக் குழுவினர், தங்கள் அறிக்கையில், உழவர் விழாக்களைக் களியாட்ட நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டிருப்பதோடு, இவ்விழாக்களை மாவட்ட மட்ட நிகழ்ச்சிகளோடு மட்டுப்படுத்தாமல், மாகாண மட்டத்துக்கு விரிவுபடுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை தேர்தல் கால வாக்குத் திரட்டல் என்றும் அமைச்சரின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் பெருவிழா, முற்றுமுழுதாக, சாதனை உழவர்களைக் கௌரவிக்கும் விழா. இதனைக் களியாட்ட விழாவாக அவர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மட்டத்தில் போட்டிகளை நடாத்தி விவசாயிகளை, மத்திய அரசாங்கம் கௌரவிக்கும்போது, மாகாண மட்டத்தில், வட மாகாண அரசாங்கம் போட்டிகளை நடாத்தி எமது விவசாயிகளைக் கௌரவிப்பதில் தவறேதும் இல்லை. இந்தக் கௌரவம் விவசாயிகளை உற்சாகப்படுத்தி மென்மேலும் சாதனைகளைப் புரிவற்குத் தூண்டுகின்ற ஓர் ஊக்கி.

“நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்வதை, அமைச்சரின் தேர்தல் கால வாக்குத் திரட்டும் முயற்சி என்று கொச்சையாக இவர்கள் குறிப்பிட்டாலும், இதன் பின்னால் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் அதிகார வர்க்கத்தின் மனோ நிலையே மேலோங்கி இருக்கிறது. ஆளும் தரப்பும், அதிகார வர்க்கமும் மக்கள் கூட்டமாகத் திரளுவதை விரும்பாது. அனுமதிக்காது. இவ்வாறு சேரும் கூட்டம் எங்கே தங்கள் அதிகாரத்துக்கு எதிராக ஒருநாள் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஆளும்தரப்புக்கு எப்போதும் இருக்கும். அவர்களின் மனோநிலையையே விசாரணைக்குழுவும் பிரதிபலித்திருப்பது வேதனைக்குரியது.

“விசாரணைக்குழுவின் முன்னால் நான் தோன்றிவிட்டு பின்னர் அக்குழுவை குறைசொல்லலாமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள், நான் இலஞ்சம் வாங்கினேன், நிதி மோசடியில் ஈடுபட்டேன் என்று குறிப்பிட்டுவிட்டு நான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தால் அது பொய்யாக இருந்தாலும் இக் குழுவை நான் விமர்சித்திருக்க முடியாது. ஆனால், அவர்களே தங்களது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, நான் பதவி விலக வேண்டும் என்றும் கோரியிருப்பதுதான் அவர்களின் நீதி நியாயம் குறித்தும், மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி முதலமைச்சரை பதவியிறக்கும் சதிமுயற்சிக்கு இவர்களும் துணைபோயுள்ளார்களோ எனவும் சந்தேகப்படவைத்திருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

வேதபாரயண சனசமூக நிலையத்தின் தலைவர் இ.சத்தியானந்தனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஊழல்-புரிந்ததாக-எங்கும்-குறிப்பிடவில்லை/71-200292

Link to comment
Share on other sites

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் - ஐங்கரநேசன்

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் – ஐங்கரநேசன்

 

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

விசாரணைக் குழுவினர் தங்கள் அறிக்கையில் உழவர் விழாக்களைக் களியாட்ட நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டிருப்பதோடு, இவ்விழாக்களை மாவட்டமட்ட நிகழ்ச்சிகளோடு மட்டுப்படுத்தாமல் மாகாண மட்டத்துக்கு விரிவுபடுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை தேர்தல் கால வாக்குத் திரட்டல் என்றும் அமைச்சரின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் பெருவிழா முற்று முழுதாக சாதனை உழவர்களைக் கௌரவிக்கும் விழா. இதனைக் களியாட்ட விழாவாக அவர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசாங்கம் தேசியமட்டத்தில் போட்டிகளை நடாத்தி விவசாயிகளைக் கௌரவிக்கும்போது, வடமாகாண அரசாங்கம் மாகாணமட்டத்தில் போட்டிகளை நடாத்தி எமது விவசாயிகளைக் கௌரவிப்பதில் தவறேதும் இல்லை. இந்தக் கௌரவம் விவசாயிகளை உற்சாகப்படுத்தி மேன்மேலும் சாதனைகளைப் புரிவற்குத் தூண்டுகின்ற ஒரு ஊக்கி.

நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்வதை அமைச்சரின் தேர்தல் கால வாக்குத் திரட்டும் முயற்சி என்று கொச்சையாக இவர்கள் குறிப்பிட்டாலும், இதன் பின்னால் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் அதிகார வர்க்கத்தின் மனோ நிலையே மேலோங்கி இருக்கிறது. ஆளும்தரப்பும், அதிகார வர்க்கமும் மக்கள் கூட்டமாகத் திரளுவதை விரும்பாது. அனுமதிக்காது. இவ்வாறு சேரும் கூட்டம் எங்கே தங்கள் அதிகாரத்துக்கு எதிராக ஒருநாள் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஆளும்தரப்புக்கு எப்போதும் இருக்கும். அவர்களின் மனோநிலையையே விசாரணைக்குழுவும் பிரதிபலித்திருப்பது வேதனைக்குரியது.

விசாரணைக்குழுவின் முன்னால் நான் தோன்றிவிட்டு பின்னர் அக்குழுவை குறைசொல்லலாமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள், நான் இலஞ்சம் வாங்கினேன், நிதிமோசடியில் ஈடுபட்டேன் என்று குறிப்பிட்டுவிட்டு நான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தால் அது பொய்யாக இருந்தாலும் இக்குழுவை நான் விமர்சித்திருக்க முடியாது. ஆனால், அவர்களே தங்களது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, நான் பதவிவிலகவேண்டும் என்றும் கோரியிருப்பதுதான் அவர்களின் நீதிநியாயம் குறித்தும், மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி முதலமைச்சரை பதவியிறக்கும் சதிமுயற்சிக்கு இவர்களும் துணைபோயுள்ளார்களோ எனவும் சந்தேகப்படவைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வேதபாரயண சனசமூக நிலையத்தின் தலைவர் இ.சத்தியானந்தனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

http://thuliyam.com/?p=73203

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டம், சுண்ணாகம் நிலத்தடி நீர் விடயத்தில் உங்கட முகமூடி கிழிந்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

நம்பீட்டம், சுண்ணாகம் நிலத்தடி நீர் விடயத்தில் உங்கட முகமூடி கிழிந்து விட்டது

இலஞ்சவாதிகள் தூங்குவதில்லை என்று சொல்ல வாறீயள்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இலஞ்சவாதிகள் தூங்குவதில்லை என்று சொல்ல வாறீயள்:10_wink:

புத்தன், சுண்ணாக நீர் பிரச்சனை எழுந்த வேளையில் நான் இவர் தொடர்பாக எழுதிய போது, யாழ்கள உறவு(பெயர் ஞாபகத்தில் இல்லை) என்னிலும் பார்க்க ஐங்கரநேசனுக்கு மண்ணிலும் மக்களிலும் கூடிய அக்கறை இருக்கிறது என்று.

மீண்டும் சொல்கிறேன் சுண்ணாக நீர் பிரச்சனையில் இவருக்கு தொடர்பிருக்கிறது.

Link to comment
Share on other sites

சுன்னாகம் நீர்ப் பிரச்சனையில் எப்படி  ஐங்கரநேசனுக்கு தொடர்பிருக்கு என்று தயவு செய்து எழுதுங்கோ மீரா. நானும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 

இல்லை நானும் புன்னாலைக்கட்டுவன் கிணத்துக்கும் விக்கியருக்கும் தொடர்பு இருக்கென்று எழுதுவன் - அது என்ன என்று யாரும் கேட்கமுடியாது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

புத்தன், சுண்ணாக நீர் பிரச்சனை எழுந்த வேளையில் நான் இவர் தொடர்பாக எழுதிய போது, யாழ்கள உறவு(பெயர் ஞாபகத்தில் இல்லை) என்னிலும் பார்க்க ஐங்கரநேசனுக்கு மண்ணிலும் மக்களிலும் கூடிய அக்கறை இருக்கிறது என்று.

மீண்டும் சொல்கிறேன் சுண்ணாக நீர் பிரச்சனையில் இவருக்கு தொடர்பிருக்கிறது.

பெரிய  மனிதர்கள் தான்

நாட்டுப்பற்றாளர்கள் தான்

ஆனால் வித்தியா கொலையில்  வி.ரி.  தமிழ் மாறனுக்கும்

சுண்ணாக நீர் பிரச்சனை பிரச்சினையில் ஐங்கரநேசனுக்கும்

தொடர்பிருக்கிறது

விசாரணைகளில் அவை தெரிய  வரும்

அதுவரை தேவையற்றவற்றை  ஆதாரமற்றவற்றை பேசாமல் இருப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

ஐங்கரநேசன் ஒப்பாரிவைப்பதில் பிரயோசனம் இல்லை!
செய்த தவறுகளை ஏறுக்கொண்டு திருந்திவாழ முயற்சிப்பதே தமிழினத்துக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

சுன்னாகம் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ,இந்த பேட்டியில் இவர்கள் இருவரும் பகிரங்கமாக முதலமைச்சர் விக்கியை குற்றம் சொல்கின்றார்கள் ,இவருக்கு யார் விசாரணை குழுவை நியமிப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Gari said:

சுன்னாகம் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ,இந்த பேட்டியில் இவர்கள் இருவரும் பகிரங்கமாக முதலமைச்சர் விக்கியை குற்றம் சொல்கின்றார்கள் ,இவருக்கு யார் விசாரணை குழுவை நியமிப்பது ?

சம்பத்துக்கு எதிராக நான் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறன், நீங்கள் விசாரணை குழுவை நியமிப்பீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.