Jump to content

இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்


Recommended Posts

இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்

 
இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்
 

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, கூழாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இடை நடுவில் சபையை விட்டு வெளியேறினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினார்.

http://uthayandaily.com/story/10734.html

Link to comment
Share on other sites

முல்லை முஸ்லீம் குடியேற்ற விவகாரம் : முதல்வர் விக்கி வெளிநடப்பு

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

unnamed__5_.jpg

இந்த கூட்டத்தில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் ரிசாத் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், டெனிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீகந்தராஜா, வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

unnamed.png

இதில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முஸ்லீம் குடியேற்றம் அமைக்கும் விவகாரம் தொடர்பான விவாதம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் கூட்டத்தை வெளிநடப்பு செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லீம் குடியேற்றம் ஒன்றிற்கான ஏற்பாடுகள் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன. அன்றைய தினம் அப்பிரதேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவிதிருந்தார்கள். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அது தொடர்பான விடயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முல்லை மாவட்டத்தை சேர்ந்த வட மாகண உறுப்பினர் கௌரவ ரவிகரனுக்கும் முஸ்லீம் மக்களை பிரநிதுத்துவப்படுத்தும் முல்லை வடமாகாண உறுப்பினர் ஜெனோபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் ரவிகரனுடன் கடும்தொனியில் வாக்குவாதத்துடன் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கூட்டத்தின் இடைநடுவே முதல்வர்; வெளிநடப்பு செய்தார்.

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21728

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் பெரும்பான்மையுடனும் இணங்கி போகவேணும் சிறுபான்மையுடனும் இணங்கி போகவேணும் அப்ப தான் 13 திருத்த சட்டமும் அரசியல் தீர்வு தமிழ்மக்களுக்கு கிடைக்கும்....

Link to comment
Share on other sites

19 hours ago, நவீனன் said:

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு செய்ததினால் இவர்கள் பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி கொடுத்ததை தவிர சாதித்தது என்ன 

உள்வீட்டு பிரச்சனைகளை மேசையில் தீர்க்க முடியாதவர்கலெல்லாம்     ஜனநாயகவாந்திகள் // உருப்பட்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

வெளிநடப்பு செய்ததினால் இவர்கள் பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி கொடுத்ததை தவிர சாதித்தது என்ன 

உள்வீட்டு பிரச்சனைகளை மேசையில் தீர்க்க முடியாதவர்கலெல்லாம்     ஜனநாயகவாந்திகள் // உருப்பட்ட மாதிரித்தான்.

காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்ல முதல் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என அமைச்சர் ஒற்றைகாலில் நிற்கிறார்.


மத்திய அரசின் செல்வாக்கு இன்னும் இருக்கு என்ற நிலையில் அமைச்சர் செயல்படுகிறார்....

Link to comment
Share on other sites

1 minute ago, putthan said:

காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்ல முதல் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என அமைச்சர் ஒற்றைகாலில் நிற்கிறார்.

வெகு சீக்கிரம் காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்லும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள் // நம்பிக்கைதான் வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

வெகு சீக்கிரம் காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்லும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள் // நம்பிக்கைதான் வாழ்க்கை.

பொலிஸ் அதிகாரங்களும் என நினைக்கிறேன் tw_cry:...{பிக்குமாருக்கு தெரியாமல்}......இரு(துன்னாலைம மற்றது பல்கலைகழக் மாணவர்கள்) துப்பாக்கி சூட்டு சம்பவ்ங்களிலும் உப பொலிஸ் பரிசோதகர்கள் .....

Link to comment
Share on other sites

முல்லை.அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து முதல்வர் விக்­கி­ வெளி­ந­டப்பு

 

(கே.குமணன்)

முல்­லைத்­தீவு மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்டம் நேற்று மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மையில் முல்­லைத்­தீவு மாவட்ட செய­லக மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற நிலையில் கூட்­டத்தில் ஏற்­பட்ட அமை­தி­யின்­மையை அடுத்து அதில் கலந்­து­கொண்­டி­ருந்த வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் வெளிந­டப்புச் செய்தார்.

இந்த கூட்­டத்தில் அபி­விருத்தி குழுவின்  இணைத்­ த­லைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  மற்றும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­தரன்,டெனிஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான காதர் மஸ்தான், சிவ­சக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, வடக்கு மாகா­ண­ச­பையின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

இந்­நி­லையில் முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் பகு­தியில் முஸ்லிம் குடி­யேற்றம் அமைக்கும் விவ­காரம் தொடர்­பான விவாதம் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், முல்லை. மாவட்ட மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்­றிய நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்தார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒட்­டு­சுட்டான் கூழா­மு­றிப்பு பகு­தி­யில் ­முஸ்லிம் குடி­யேற்றம் ஒன்­றினை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­னேற்­பா­டுகள் நடந்­தன. 

அன்­றைய தினம் அப்­பி­ர­தேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்­பினை தெரி­வி­த்தி­ருந்­தார்கள். அந்­த­வ­கையில் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்பு கூட்­டத்தில் அது தொடர்­பான விடயம் விவா­த­த்துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. 

முல்லை. மாவட்­டத்தை சேர்ந்த வட மாகாண உறுப்­பினர் ரவி­கரன் முஸ்லிம் மக்­களை பிர­திநிதித்­துவப்படுத்தும் முல்லை. வட­மா­காண உறுப்­பினர் ஜெனோபர் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில், அபி­வி­ருத்திக் குழு இணைத் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ரவி­க­ர­னுடன் கடும்­தொ­னியில் வாக்­கு­வா­தத்­துடன் ஈடு­பட்­டி­ருந்தார். இந்நிலை­யி­லேயே கூட்­டத்தின் இடை நடுவே முதல்வர் வெளி­ந­டப்பு செய்தார். கூட்­டத்தில் பங்­கு­பற்­றிய வட­மா­கண அமைச்சர் திரு­மதி அனந்தி சசி­த­ரனும் வெளி­ந­டப்பு செய்­தி­ருந்தார். 

அதா­வது 1953 ஆம் ஆண்டு முல்லை. மகா­வலி அபி­வி­ருத்­தி திட்­டத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­போது வரையில் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. குறிப்­பாக 136 குடும்­பங்­க­ளுக்கு கரைது­றைப்­பற்று பிர­சேத செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட கூழா முறிப்பு பகு­தியில் இவர்­க­ளுக்கு அக்­கா­லத்தில் தலா 4 ஏக்கர் வீதம் வழங்­கப்­பட்ட காணிகள் உள்­ளன. 

2016ஆம் ஆண்டு அந்த பேர்மிட் காணி­களை மீண்டும் வழங்­கு­வ­தற்­கான அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் தற்­போது வரையில் அது­ கு­றித்த நட­வ­டிக்­கைகள் தாம­த­மா­கவே உள்­ளன. நாம் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் இல்லை. 

ஆனால் இந்த மக்­களின் குடி­யேற்­றத்­தினை முதலில் மேற்கொள்ளுங்கள் என்று தான் கோருகின்றேன். இதில் அரசாங்க அதிபர் ஏன் நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்கின்றார் என்று இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 

இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியிலேயே முதல்வர் வெளிநடப்புச் செய்துள்ளார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-11#page-1

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு காணிச் சர்ச்சை : அனல் பறந்த அநாகரீக வார்த்தைகள்

 
முல்லைத்தீவு காணிச் சர்ச்சை : அனல் பறந்த அநாகரீக வார்த்தைகள்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்பு குழுவின் சந்திப்பில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

முதலமைச்சரைத் தொடர்ந்து வட மாகாணத்தின் புதிய அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரனும் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

முஸ்லீம் மக்களுக்கு காணி வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணியைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் முல்லைத்தீவு கூழாமுறிப்புப்பகுதிக்கு சென்று காணிகளை பார்வையிட்டமை தொடர்பில் நேற்று முற்பகல் 11.30 க்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது  மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கும்  இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிசாட் பதியூதின் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது.

இதனையடுத்து கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திய இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இடைநடுவில் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து வடக்குமாகாண சபையின் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 84 தமிழ் குடும்பங்களுக்கும் 902 முஸ்லீம் குடும்பங்களுக்கும் 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்க முற்பட்டவேளை இருதரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்  ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 548 முஸ்லீம் குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு  காணி கச்சேரிகள்  வைக்கப்பட்டு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மக்களுக்கான காணி விடயத்தில் எந்த அக்கறையும் செலுத்தவில்லையென்றும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலையம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளை கையப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடித்தொழில், காடழிப்பு போன்ற விடயங்களில் எந்தவித கரிசனைகளும் காட்டாத அமைச்சர் இந்த விடயத்தில் மாத்திரம் அக்கறை செலுத்துவது பொருத்தமற்ற ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராஜா ரவிகரனுக்கும் ஜெனோபர் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோருக்கும் இடையில் சுமார் 57 நிமிடங்களுக்கு மேல் நீடித்த கடும் கருத்து மோதல்கள் வாய்த்தக்கமாக மாறியதுடன், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும்  பயன்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களது வாழ் வாதாரத் தொழில்கள் குறித்து எந்தவித கரிசனைகளும் காட்டாத அரச தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெளியிடங்களில் இருந்து வருகின்ற பெரும்பான்மையினத்தவர்களுக்கு அனைத்தையும் வழங்கி வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் சமூகம் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் இவ்வாறான பராபட்சம் காட்டுவதை அதிகாரிகளும் அரச தரப்பு அரசியல் வாதிகளும் தவிர்த்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுகின்ற கரிசனைபோல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு காட்டவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா   ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/CM-walked-out-from-Coordination-Committee-Meeting

Link to comment
Share on other sites

13 minutes ago, நவீனன் said:

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 84 தமிழ் குடும்பங்களுக்கும் 902 முஸ்லீம் குடும்பங்களுக்கும் 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்க முற்பட்டவேளை இருதரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்  ஏற்பட்டுள்ளது.

 

மிகவும் நியாயமான கோரிக்கை / எதிர்பார்ப்பு இது. நியாயமான ரீதியில் விகிதாசார முறையில் பங்கிடப்படுமாயின் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கிடைக்க இருக்கும் காணிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைவடையும் என்பதால் வழக்கம் போன்று அடாத்தாக நடந்து கொள்கின்றனர் முஸ்லிம் / சிங்கள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இதற்கு முல்லை அரச அதிபரும் உடந்தை (அப்ப தானே பதவியுயர்வு மேலும் கிடைக்கும்).

இப்படியான விடயங்களிலாவது தமிழ் அரசியல்வாதிகள் ஒரே குரலில் ஒருமித்து எதிர்ப்பு காட்ட வேண்டும். விக்கினேஸ்வரன் / த.தே.கூ மட்டுமன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னனி, சனநாயகத்துக்கான போராளிகள் மற்றும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். வெறும் கட்சி அரசியலுக்காக இவர்கள் பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கூட சமாளிக்க முடியாமல் இடையில் விட்டு வெளியே போகின்றார். இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்tw_angry:

Link to comment
Share on other sites

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

Link to comment
Share on other sites

6 hours ago, நிழலி said:

மிகவும் நியாயமான கோரிக்கை / எதிர்பார்ப்பு இது. நியாயமான ரீதியில் விகிதாசார முறையில் பங்கிடப்படுமாயின் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கிடைக்க இருக்கும் காணிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைவடையும் என்பதால் வழக்கம் போன்று அடாத்தாக நடந்து கொள்கின்றனர் முஸ்லிம் / சிங்கள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இதற்கு முல்லை அரச அதிபரும் உடந்தை (அப்ப தானே பதவியுயர்வு மேலும் கிடைக்கும்).

இப்படியான விடயங்களிலாவது தமிழ் அரசியல்வாதிகள் ஒரே குரலில் ஒருமித்து எதிர்ப்பு காட்ட வேண்டும். விக்கினேஸ்வரன் / த.தே.கூ மட்டுமன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னனி, சனநாயகத்துக்கான போராளிகள் மற்றும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். வெறும் கட்சி அரசியலுக்காக இவர்கள் பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம்

902 முஸ்லிம் குடும்பங்கள் என்றுன்குறிப்பிடபட்டுள்ளது, இவர்கள்  அனைவரும் முல்லைத்தீவை சேர்ந்தவர்களா?? நான் அறிந்த வரையில் முள்ளியவளை,தண்ணியூற்று பிரதேசங்களே முஸ்லிம் வாழ்ந்து வந்த இடங்கள் அங்கே எல்லாம் குடியேறி விட்டார்கள் அப்படியாயின் இந்த 902 குடும்பங்கள் யார்???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

சரியான பதில் பச்சை வரும்போது குத்த வேணும் cv இனிமேல் எச்சரிக்கையாக இருக்கணும் சிவராம் இவர்களுடன் முரண்பட்டு நடந்த கதை தெரியும் எத்தனையோ முறை இணக்கமான எல்லாம் இவர்களால் புறம் தள்ளபட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎07‎/‎2017 at 8:04 PM, Athavan CH said:

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

ஒரு தலையாட்டி பொம்மையை விட இவர்கள் எவ்வளவோ மேல்...ஒரு பிழை செய்தாலும் பத்து நன்மையாவது செய்வார்கள்/செய்கிறார்கள்...சீவியை மாதிரி தலையை ஆட்டிக் கொண்டுக் பதவிக்காக நாற்காலியில் இருக்கவில்லை.
 
ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வக்கிரகம் புரிந்து கொண்டது. மன்னிக்க முடியாத குற்றம்... ஆனால் கருணாவோ,பிள்ளையானோ இதில் நேரே சம்மந்தப்பட்டதிற்கு ஆதாரம் இல்லை...ஆனால் இதில் வந்து அவர்களை பிழை சொல்லுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அவர்கள் இருவரும் தலைவரின் பாசாறையில் வளர்ந்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள்.
 
கருணாவுக்கோ,பிள்ளையானுக்கோ தூக்குத் தண்டனை கொடுத்தால் அவர்களை உருவாக்கிய தலைவரை நடு றோட்டில நிக்க வைச்சுக் கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும்.
 
பி;கு; இங்கு ஓடி வந்து இவர்கள் செய்த பிழைக்கு தலைவர் எப்படி  பொறுப்பாவார் என்டு அழ வேண்டாம். அதையே நானும் கேட்கலாம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:
ஒரு தலையாட்டி பொம்மையை விட இவர்கள் எவ்வளவோ மேல்...ஒரு பிழை செய்தாலும் பத்து நன்மையாவது செய்வார்கள்/செய்கிறார்கள்...சீவியை மாதிரி தலையை ஆட்டிக் கொண்டுக் பதவிக்காக நாற்காலியில் இருக்கவில்லை.
 
ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வக்கிரகம் புரிந்து கொண்டது. மன்னிக்க முடியாத குற்றம்... ஆனால் கருணாவோ,பிள்ளையானோ இதில் நேரே சம்மந்தப்பட்டதிற்கு ஆதாரம் இல்லை...ஆனால் இதில் வந்து அவர்களை பிழை சொல்லுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அவர்கள் இருவரும் தலைவரின் பாசாறையில் வளர்ந்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள்.
 
கருணாவுக்கோ,பிள்ளையானுக்கோ தூக்குத் தண்டனை கொடுத்தால் அவர்களை உருவாக்கிய தலைவரை நடு றோட்டில நிக்க வைச்சுக் கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும்.
 
பி;கு; இங்கு ஓடி வந்து இவர்கள் செய்த பிழைக்கு தலைவர் எப்படி  பொறுப்பாவார் என்டு அழ வேண்டாம். அதையே நானும் கேட்கலாம்.
 
 

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. இவர்கள் இருவரினதும் கீழ் இருந்தவர்களால் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இவர்கள் இருவருமே பொறுப்பு.

நீங்கள் கூறுவது போல நீங்கள் பிழைவிட்டால் உங்கள் அப்பாவையோ அல்லது அம்மாவையோ நடுரோட்டில் வைத்து கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர வர தமிழ்நாட்டு அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டினம் போல tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. இவர்கள் இருவரினதும் கீழ் இருந்தவர்களால் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இவர்கள் இருவருமே பொறுப்பு.

நீங்கள் கூறுவது போல நீங்கள் பிழைவிட்டால் உங்கள் அப்பாவையோ அல்லது அம்மாவையோ நடுரோட்டில் வைத்து கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும். 

மீரா, கருணாவும்,பிள்ளையானும் அவர்கள் பெற்றோட இருந்ததை விட இயக்கத்தில் இருந்தது தான் அதிகம். அதுவும் பிள்ளையான் 8 வயசில இயக்கத்திற்கு வந்திட்டார்...யோசித்துப் பாருங்கள் இவர்களை உருவாக்கினது யாரு?
 
வழிக்கு வந்திட்டீங்கள் ,இதைத் தான் நானும் சொல்கிறேன்...ஒருவர் செய்கின்ற குற்றங்களுக்கு எப்படி பெற்றோரை குற்றவாளியாக்க முடியாது இல்லையா? அப்படியாயின் கருணாவும்,பிளளையானும் மட்டும் தாங்கள் கீழ் இருந்தவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் இல்லையா?    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:
மீரா, கருணாவும்,பிள்ளையானும் அவர்கள் பெற்றோட இருந்ததை விட இயக்கத்தில் இருந்தது தான் அதிகம். அதுவும் பிள்ளையான் 8 வயசில இயக்கத்திற்கு வந்திட்டார்...யோசித்துப் பாருங்கள் இவர்களை உருவாக்கினது யாரு?
 
வழிக்கு வந்திட்டீங்கள் ,இதைத் தான் நானும் சொல்கிறேன்...ஒருவர் செய்கின்ற குற்றங்களுக்கு எப்படி பெற்றோரை குற்றவாளியாக்க முடியாது இல்லையா? அப்படியாயின் கருணாவும்,பிளளையானும் மட்டும் தாங்கள் கீழ் இருந்தவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் இல்லையா?    

அவர்கள் இருவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நான் கூறவில்லையே, அவர்கள் இருவரும் பொறுப்பேற்க வேண்டும். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டும்.

திரு. பிரபாகரன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அதுதான் இவர்கள் இருவருக்குமான இடைவெளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

அவர்கள் இருவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நான் கூறவில்லையே, அவர்கள் இருவரும் பொறுப்பேற்க வேண்டும். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டும்.

திரு. பிரபாகரன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அதுதான் இவர்கள் இருவருக்குமான இடைவெளி.

ஏன் தலைவர் தன்னுடன் பாலியல் வக்கிரகம் பிடித்த சிலரை வைத்திருக்கவில்லையா?...போங்க சார் போங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஏன் தலைவர் தன்னுடன் பாலியல் வக்கிரகம் பிடித்த சிலரை வைத்திருக்கவில்லையா?...போங்க சார் போங்கோ

மூதூர் சம்பவம் செய்தவர்கள் போன்று ஒருத்தரும் இருந்ததாக தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

மூதூர் சம்பவம் செய்தவர்கள் போன்று ஒருத்தரும் இருந்ததாக தெரியாது.

மூதூர் சம்பவத்தை போல ஒரு சம்பவம் புலிகளால் நடத்தப்படவில்லை...ஆனால் பாலியல் வக்கிரமனம் கொண்டவர்கள் அவர்கள் எனத் தெரிந்தும் தலைவர் சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டார்..

இங்கு எதெற்கெடுத்தாலும் கருணாவை குற்றம் சாட்டும் மருதர் போன்ற சிலர் தங்கட தலைவரையும் ஒருக்கால் நினைச்சுப் பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

மூதூர் சம்பவத்தை போல ஒரு சம்பவம் புலிகளால் நடத்தப்படவில்லை...ஆனால் பாலியல் வக்கிரமனம் கொண்டவர்கள் அவர்கள் எனத் தெரிந்தும் தலைவர் சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டார்..

இங்கு எதெற்கெடுத்தாலும் கருணாவை குற்றம் சாட்டும் மருதர் போன்ற சிலர் தங்கட தலைவரையும் ஒருக்கால் நினைச்சுப் பார்க்க வேண்டும்

இப்போது தலைவரோ புலிகளோ இல்லை, 

ஆனால் இவர்கள் இருவரும் மூதூர் சம்பவம் செய்தவர்களும் இருக்கிறார்கள். உங்கள் அண்ணரிடம் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கலாமே?

Link to comment
Share on other sites

".........

இதே போல் தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக மாமனிதர் ஜோசெப் பரராசசிங்கம், பேராசிரியர் தம்பையா, ஊடகவியலாளர் G.நடேசன் இவர்களையும்   பலிவாங்கினார்  கருணா.

...........

. கருணா குழு  29.01.2006 அன்று வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக்குக்  கழகத்தைக் பணியாளர்கள் பயணித்த வாகனத்தைக் கடத்தியது வட்டக்கட்சியைச் சேர்ந்த   செல்வி .பிறேமினி தனுஸ்க்கோடி  என்ற யுவதி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளானார். கருணாவின் மகள் ...... வயதை அடையும்போது தான் இந்தக் கொடூரத்தைக் செய்தமை குறித்து சிந்திப்பார்.    

  நீண்ட காலம் அவருக்கு நண்பனாக இருந்த நீலனைக் கொல்ல முடிவெடுத்தவர்க்கு இந்த விடயத்தைக் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . கருணாவின் பிரச்சினைக்கு பிறகு மட்டக்களப்பில் ஒருவர் சொன்னார் அம்மானுக்கு ஒரேயொரு தெரிவு தான் இருக்கும் எந்த நேரமும் போதையில் இருப்பதுதான் அது. அவருடைய மன சாட்சி அவரைக் குத்திக் கொண்டுத்தான் இருக்கும். 

................."

http://www.battinaatham.com/description.php?art=9292

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.