Jump to content

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாறுகிறது

 

 

இலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களைக் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறுகின்றது.

india-cricket.jpg

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்று ஆரம்பமாகியது. அதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பெடுத்தாட முடிவுசெய்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைப் பெற்றது. தவான் 119 ஓட்டங்களையும் ராகுல் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சகா 13 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். 

 

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய சகா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ஓட்டங்களுடனும், முகமது சமி 8 ஓட்டங்களுடனம் ஆட்டமிழந்தனர். 

 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ரன்கள் குவித்தது. 

உணவு இடைவேளைக்கு முன்னர் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து டில்ருவான் பெரராவிடம் பிடி கொடுத்து 96 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில்  அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். 

இதையடுத்த இந்திய அணி தனது முதல்  இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

 

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லக்‌ஷ்ன் சந்தகன் 5 விக்கெட்களையும் மிலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்களையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.

http://www.virakesari.lk/article/23117

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் சுருண்ட இலங்கை..!

 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

i_17358.jpg

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கொழும்புவில் நடந்த 2 வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. கண்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

 

தவான் மற்றும் பாண்டியாவின் சதத்தால் இந்திய அணி 487 ரன்கள் என்ற வலுவான இலக்கை அடைந்தது. அடுத்து பேட் செய்த இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 15 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. கருணாரத்ன மற்றும் மலிண்டா புஷ்பாகுமாரா ஆகியோர் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/99004-sri-lanka-only-got-135-runs-in-1st-innings.html

Link to comment
Share on other sites

பாண்டியா அதிரடி, குல்தீப் அபாரம்; இலங்கை பாலோ ஆன்: 3-வது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

 

 
kuldeep

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவுக்கு பாராட்டு.   -  படம்.| ஏ.எஃப்.பி.

பல்லகிலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 487 ரன்களை எதிர்த்து இலங்கை தன் முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட முடிவில் இலங்கை அணி பாலோ ஆனில் தரங்கா விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

காலையில் 329/6 என்று களமிறங்கிய போது 1 ரன்னில் இருந்த ஹர்திக் பாண்டியா அதிரடி சதம் விளாசி 86 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து பிறகு 96 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தன் பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 122.3 ஓவர்களில் 487 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நல்ல வேளையாக ஆல் அவுட் ஆனது, இல்லையெனில் விராட் கோலி நிச்சயம் 600 ரன்கள் அல்லது பாண்டியா 200 என்று டிக்ளேருக்கு காத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய போது மொகமது ஷமி அபாரமாக வீசினார், உமேஷ் யாதவ்வும், இவரும் தொடர்ந்து இலங்கை தொடக்க வீரர்களான கருண ரத்ன, தரங்காவை அதிகபந்துகளை மட்டையில் விளையாடச் செய்தனர், நன்றாக ஸ்விங் செய்தனர், பந்துகளை மட்டையில் ஆடிக் கொண்டேயிருந்தால் ஒரு பந்தை வெளியே போடும்போது பந்தை ஆட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுபோல்தான் தரங்கா 5 ரன்களில் ஷமி வீசிய உள்ளே வந்த பந்தை அதிக ஸ்விங்குக்காக எதிர்பார்த்து ஆடினார் எட்ஜ் ஆனது சஹா வலது புறம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஆனால் இதைப்போய் தரங்கா ரிவியூ செய்து இலங்கை அணிக்கு ஒரு ரிவியூவையும் காலி செய்தார், மிக மோசமான ரிவியூ.

ஷமி தொடர்ந்து பேட்ஸ்மென்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக வீசினார், கருணரத்ன 4 ரன்களில் இருந்த போது தரங்கா போலவே கூடுதல் ஸ்விங்குக்காக எதிர்பார்த்து வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டார், ஆனால் அது அவ்வளவாக ஸ்விங் ஆகவில்லை, எட்ஜ் ஆனது மீண்டும் சஹா. கிட்டத்தட்ட தரங்காவும் இவரும் ஒரே பாணியில் ஷமியிடம் வீழ்ந்தனர், ஷமி அபாரமாக அவர்கள் அணுகுமுறையை தன்வசமாக்கினார் என்றே கூற வேண்டும்.

மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 18 ரன்கள் என்று நம்பிக்கையுடன் ஆடிவந்த தருணத்தில் அஸ்வினின் அருமையான பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார். அதாவது லெக் திசையில் அஸ்வின் முதலில் நன்றாக பீல்ட் செய்து த்ரோ செய்தார் பந்து ஸ்டம்பில் படாமல் தாண்டிச் சென்றது, ஆனால் கவரில் பந்தைப்பிடித்த குல்தீப் யாதவ் ரன்னர் முனையில் அடிக்க மெண்டிஸ் ரீச் ஆகவில்லை.

அஞ்சேலோ மேத்யூஸ் தன் எண்ணிக்கையைத் தொடங்க்கும் முன்னரே இன்றைய நாயகன் பாண்டியாவின் இன்ஸ்விங்கரில் பீட் ஆகி கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஆனால் இவர் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் பயனில்லாமல் போயிருக்கும், இது பிளம்ப் எல்.பி. இலங்கை 38/4 என்று சரிந்தது.

அதன் பிறகு சந்திமால், டிக்வெல்லா இணைந்து ஸ்கோரை 101 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். டிக்வெல்லா 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் என்று நன்றாகவே ஆடினார், ஆனால் குல்தீப் யாதவ் வீசிய கூக்ளியை இறங்கி வந்து அடிக்க முயன்றார் பந்து திரும்பியதால் மட்டையில் சிக்கவில்லை, மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்தது சஹா சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். 101/4 என்ற நிலையிலிருந்த் டிக்வெல்லா விக்கெட்டுடன் சரிவு தொடங்க அடுத்த 34 ரன்களுக்கு இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுக்குக் காலியானது. அதிகபட்ச ஸ்கோரை எடுத்த சந்திமால் 87 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் பந்தை சரியாக ஆடாததால் பந்து மட்டையில் பட்டு, கால்காப்பில் பட்டு லெக் கல்லியில் கேட்ச் ஆனது.

பெரேரா ஷார்ட் பிட்ச் பந்தை குல்தீப் யாதவ் வீச மிட்விக்கெட்டில் நேராக பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, புஷ்பகுமாரா 10 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மிகவும் ஸ்மார்ட் கேப்டன்சியில் குல்தீப் யாதவ்வுக்கு சிலி பாயிண்டைக் கொண்டு வர கவர் திசை காலியானவுடன் குல்தீப் பந்தை டிரைவ் ஆட முயன்றார், பந்து கூக்ளி ஆனது ஸ்டம்பை பதம் பார்த்தது, இது அருமையான கேப்டன்சி, அதைப் புரிந்து கொண்ட சமயோசித பந்து வீச்சு. 37.4 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

352 ரன்கள் முன்னிலை பெற்றதால் இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தார் விராட் கோலி. ஆட்ட முடிவில் உமேஷ் யாதவ் பந்தில் தரங்கா (7) பவுல்டு ஆக கருணரத்ன 12 ரன்களுடனும், இரவுக்காவலன் புஷ்பகுமாரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர், இலங்கை 19/1 என்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் நிலையில் உள்ளது. 3 நாட்களில் டெஸ்ட் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் இன்னிங்சில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பாண்டியா 1 முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article19486031.ece?homepage=true

Link to comment
Share on other sites

இலங்கையை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது இந்தியா

 

 

 

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 

Local_News.jpg

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 க்கு 0 என வெள்ளடிப்பு செய்து சொந்த மண்ணில் இலங்கை அணியை வெற்றி கண்டுள்ளது.

பல்லேகல சர்வதேச விளையாட்டுத் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், பலோ ஒன் முறையில் தனது 2ஆம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இதேவேளை, முதல் இன்னிங்சில் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23148

Link to comment
Share on other sites

இலங்கை பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஒயிட்வாஷை நிறைவு செய்து இந்திய அணி சாதனை

 

indian%20teamjpg
winners%20trophyjpg
indian%20teamjpg
winners%20trophyjpg

பல்லகிலேயில் நடைபெற்ற 3வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய, இந்திய அணி முதல் முறையாக அயல்நாட்டுத் தொடரில் 3-0 என்று எதிரணியினரை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் நியூஸிலாந்தில் 1967-68 தொடரில் இந்திய அணி நியூஸிலாந்தை, நியூஸியில் 3-1 என்று வெற்றி பெற்றபோது ஒரு தொடரில் 3 டெஸ்ட்களை வென்றிருந்தது, இது 2-ம் முறை ஆனால் இது ஒயிட்வாஷ் என்பது சாதனையாகும்.

முதல் இன்னிங்சில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தது. மொகமது ஷமி, அஸ்வின் ஆகியோரது உயர்தரப் பந்து வீச்சினால் இலங்கை அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது.

திமுத் கருணரத்னே இன்று முதல் விக்கெட்டாக வெளியேறினார். 3-வது ஓவரை அஸ்வின் வீச ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் நல்ல அளவில் பிட்ச் ஆகி சற்றே எழும்பியது, கிரீசில் ஒட்டிக் கொண்டிருந்த கருணரத்னே காலை நகர்த்தாமல் தன்பாட்டுக்குச் சென்ற பந்தைப் போய் இடித்தார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

முன்னணி பேட்ஸ்மென்களே ஆட முடியாமல் திணறி வரும் நிலையில் இரவுக்காவலன், பவுலர் புஷ்பகுமாரா என்ன செய்ய முடியும்? ஷமி அவரைப் பாடாய்ப்படுத்தினார். கடைசியில் ஒரு பந்தை எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பது போல் வெளியேறினார்.

நம்பிக்கை நட்சத்திரம் குசல் மெண்டிஸ் களமிறங்கி பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விரும்பினார், ஆனால் தவறான ஷார்ட் தேர்வாக முடிந்தது. அதாவது அஸ்வினை ஸ்வீப் ஆடி ஆதிக்கம் செலுத்த அவர் முனைந்தார், ஆனால் அஸ்வின் லேசுபட்டவரா என்ன? தொடர்ந்து பந்தின் வேகத்தில், கோணத்தில், பிட்ச் செய்யும் இடத்தில் மாற்றங்களை நிகழ்த்தி குசல் மெண்டிஸை செட்டில் ஆக விடாமல் படுத்தினார் அஸ்வின். இவ்வாறு அஸ்வினிடம் 16 பந்துகள் சிக்கித் தவித்த குசல் மெண்டிஸ், மொகமது ஷமியின் ஒரு அரிதான ஷார்ட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தை பேசாமல் ஆடுவதை விடுத்து ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து ஆட முயன்றார், ஷமி பார்த்து விட்டார், வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு செல்ல பிளிக் ஆட முயன்றார் மெண்டிஸ் பந்து கால்காப்பைத் தாக்க உடனேயே ராட் டக்கர் கையை உயர்த்தினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே இந்தப் பந்து சென்றிருக்கும் என்று ஹாக் ஐ காட்டினாலும் கடைசியில் நடுவர் தீர்ப்பே வென்றது, இதனால் மெண்டிஸ் ரிவியூ செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய இலங்கை வீரரில் கேப்டன் சந்திமால் தனியாகத் தெரிந்தார், இந்த இன்னிங்ஸிலும் அவர் உமேஷ் யாதவ்வை இரண்டு அபார பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அஸ்வின் பவுலிங் இவருக்குப் புரியவில்லை, ஸ்வீப் ஷாட்டை தவிர உலகில் வேறு ஷாட்களே இல்லை என்பதுபோல் ஆடினார், ஒரே ஓவரில் இருமுறை வலுவான எல்.பி. முறையீடு எழுந்தது. சந்திமாலும் மேத்யூஸும் மேலும் சேதமின்றி உணவு இடைவேளை வரை 82/4 என்று ஸ்கோரை வைத்தனர். இருவரும் இணைந்து 27 ஓவர்களில் 65 ரன்களைச் சேர்த்தனர். அஸ்வினை ஸ்வீப் ஆடுவதை விடுத்து இறங்கி வந்து ஆட முயன்றார் சந்திமால் ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. இருமுறை மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது.

கடைசியில் 89 பந்துகள் போராடி 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த சந்திமால் குல்தீப் யாதவ்வின் திரும்பி எழும்பிய பந்தை ஷார்ட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்த மேத்யூஸ், அஸ்வினின் ஃபுல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆனார்.

உடனேயே திலுருவன் பெரேரா, அஸ்வின் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

7 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இன்னிங்ஸை விரைவில் முடிக்க கோலி வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்தார். ஷமி பந்தில் சண்டகன்வெளியேறினார், டிக்வெல்லா 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் என்று நன்றாக ஆடிய நிலையில் அஜிங்கிய ரஹானேயின் அருமையான கேட்சுக்குஉமேஷ் யாதவ்விடம் அவுட் ஆகி வெளியேறினார். குமாராவை அஸ்வின் வீழ்த்தி இந்தத் தொடரில் தன் விக்கெட் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவணும் தேர்வு செய்யப்பட்டனர்.

http://tamil.thehindu.com/sports/article19491468.ece

 

 

 

இந்த வெற்றி அணியின் உண்மையான வலுவை பிரதிபலிக்கிறதா? - அப்படியல்ல என்கிறார் கோலி

 

 
kohli

டெஸ்ட் தொடரை வென்ற டிராபியுடன் கேப்டன் விராட் கோலி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

இலங்கை அணியை அதன் மண்ணில் ஒயிட்வாஷ் செய்ததையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் வலு, பந்து வீச்சு, பேட்டிங் என்று அனைத்தைப் பற்றியும் விராட் கோலி விரிவாகப் பேட்டியளித்தார்.

அதன் ஒருசில பகுதிகள் இதோ:

இந்த வெற்றி இந்திய அணி எவ்வளவு வலுவுடன் உள்ளது என்பதை பிரதிபலிக்கிறதா?

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடினோம். அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் வென்றோம். பிட்சின் தன்மையும் ஒரு பெரிய காரணி என்பதையும் மறக்கலாகாது. 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றிருந்தால் நிச்சயம் நாம் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்திருப்போம். எனவே இத்தகைய விஷயங்களையும் கணக்கில் எடுத்து கொண்டு பெரிய பின்புலத்தில் இதனை யோசிக்க வேண்டும். இப்படிப்பார்க்கும் போது 3-0 என்று வெற்றி பெற நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினோம் என்பதே முக்கியம். எதிரணியின் மீது சீராக அழுத்தத்தைச் செலுத்தினோம், இந்த்த் தொடரில் பெரும்பாலான செஷன்களில் ஆதிக்கம் செலுத்தினோம். இதுதான் க்ளீன் ஸ்வீப்புக்கு இட்டுச் சென்றது. இது ஒரு அணியாக எங்களுக்கு நிறைய பெருமை சேர்க்கிறது.

ஹர்திக் பாண்டியா இன்னிங்ஸ் பற்றி...

ஹர்திக் பாண்டியா ஆடிய இன்னிங்ஸ் எதிரணியினரின் மனநிலையை மாற்றியது, அவர்கள் 100 ரன்கள் அதிகம் கொடுத்து விட்டோம் என்று கூடுதல் அழுத்தத்தே ஏற்றிக் கொள்ள ஹர்திக் பாண்டியா வித்திட்டார். 320/6 என்ற நிலையிலிருந்து 487 ரன்கள் என்பது எதிரணியினரின் மனநிலையில் ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பாண்டியா பற்றி வேறு எதுவும் நான் புதிதாகக் கூற விரும்பவில்லை. அவரது ஆட்டம் அவரைப்பற்றி அதிகம் பறைசாற்றுகிறது. வெளியில் அவர் எப்படிப்பார்க்கப்படுகிறார் என்பதில் பிரச்சினையில்லை, ஆனால் அணியாக அவர் மீது எங்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவர் சுதந்திரமாக தன்னை பேட்டிங்கில், களத்தில் வெளிப்படுத்திக் கொள்ளட்டும். நம்பர் 8-ல் இறங்கி முதல் 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம், ஒரு அதிரடி சதம் என்பது அவரிடம் சிறப்பான திறமை இருப்பதையே அறிவுறுத்துகிறது. அவர் கண்டபடி மட்டையை சுழற்றவில்லை. அவர் மூளையைப் பயன்படுத்தி ஆடினார், அதுவும் பின்கள வீரர்களுடன் ஆடியது என்பது மிகமிக நல்ல அறிகுறி. அவர் அணியில் சமச்சீர் நிலையைக் கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு துல்லியமான பீல்டர், பவுலிங்கில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார். பேட்டிங்கில் அவரால் என்ன முடியும் என்பதைப் பார்த்தோம். வெளியிலிருந்து எழும் ஐயங்களை விடுவோம் எங்கள் மத்தியில் அவரிடம் 120% நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர் பற்றி...

இந்தத் தொடர்கள் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதில் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை. எந்த அணிக்கு உத்வேகம் இருக்கிறதோ அது வெற்றி பெறும். இரு அணிகளுமே சிறந்த கிரிக்கெட்டை ஆடும் போது அது விறுவிறுப்பான தொடராக மாறுகிறது. தென் ஆப்பிரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் 4 மாதங்களாக இங்கிலாந்தில் உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து அங்குதான் உள்ளனர், இது அவர்கள் மனதில் நிலைத்திருந்ததாக அவர்களே கூறியுள்ளனர். எனவே இத்தகைய விஷயங்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார் கோலி.

http://tamil.thehindu.com/sports/article19492618.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.