Jump to content

பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்


Recommended Posts

பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்

 

ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா?

அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா?

அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா?

இருக்கட்டும். நீங்கள் இணையத்தில் ஒரு விடயத்தை படிப்பதற்கு அல்லது பார்ப்பதற்கு முன்னால் அதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க சில கையடக்க கருவிகளை பட்டியலிடுகிறோம்.

1.தேடு பொறிகள்

தேடு பொறிகள் எப்போதுமே உண்மையை அறிய சோதிப்பவர்களின் உற்ற நண்பர்கள்.

உங்களுக்கு சந்தேகமேற்பட்டால், உடனடியாக தேடல் சொற்களை கூகுள் போன்ற தேடு பொறிகளில் உடனே பதிவிட்டு என்ன முடிவுகள் என்பதை பாருங்கள்.

அந்த செய்தி உண்மையானதாக இருந்தால் நம்பத்தகுந்த செய்தி முகமைகளும் நிறுவனங்களும் ஏற்கனவே அந்த செய்தியை பிரசுரித்து இருப்பார்கள்.

இதன் மூலம் அந்த தகவலை உண்மையாக்கும் பல செய்தி ஆதாரங்களை நீங்கள் பார்க்கலாம்.

அது உண்மை இல்லையென்றால், அதை வெளியிடும் நம்பத்தகுந்த நிறுவனங்கள் ஏதும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியும். உண்மை நிலையை சரி பார்க்கும் ஓரிரு இணையதளங்கள் அந்த செய்தியை தோலுறித்துக் காட்டுவதை கூட நீங்கள் பார்க்க நேரலாம்.

செய்திகளின் உண்மை நிலையை ஆராய கூகுள் ஒரு பிரத்யேக கருவி ஒன்றை தொடங்கியுள்ளது.

அது உண்மை நிலையை சரி பார்க்கும் இணையதளங்களிலிருந்து முடிவுகளை உங்கள் பக்கத்தின் முதலில் தேடல் முடிவாக தரும்.

அதன் மூலம் நீங்கள் தேடும் செய்தி உண்மையா இல்லையா என்பதை அறியலாம்.

எடுத்துக்காட்டாக, "டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார்" என்பதை நீங்கள் தேடினால், Politifact எனும் உண்மையை சரிபார்க்கும் இணைய தளத்தின் செய்திகளே முதல் இரு முடிவுகளாக வரும்.

இரணடாவது இணைப்பில், கூறப்பட்டது என்ன என்பதையும், யார் அதைக் கூறினார் என்பதையும் அது குறித்த உண்மை-சோதனை முடிவுகளையும் ஒரே நேரத்தில் காணலாம்.

கூகுள் பக்கம்

2. பிரசுரிக்கப்பட்ட படத்தை பின்னோக்கித் தேடுவது ( ரிவர்ஸ் இமேஜ் சர்ச்)

படங்களை பின்னோக்கித் தேடும் (Reverse Image Search) முறை மூலம் ஒரு குறிப்பிட்ட படத்தை முதன் முதலில் எந்த இணையதளம் பதிப்பித்தது என்பதை தேடலாம்.

அந்த தேடல் முடிவு, அந்த படத்தில் யார் இருக்கலாம், வேறு எங்கு அது பதிப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் அது போன்ற மற்ற படங்கள் ஆகியவற்றையும் பட்டியலிடும்.

இது அசல் படங்களை கண்டுபிடிப்பதையும், அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் சுலபமாக கண்டுபிடிக்க உதவும்.

இது ஒரு சம்பவத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிடும் செய்திகளை எளிதில் வெளிப்படுத்த உதவும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ட்விட்டரில் உலவும் மூத்த பத்திரிகையாளர் பர்க்கா தத்தின் புகைப்படம்.

அப்படத்தில் அவர் பாகிஸ்தானின் தேசிய கோடியை அவர் கையில் பிடித்திருப்பதை போன்று உள்ளது.

இதன் பின்னோக்கிய தேடல் அவர் பாகிஸ்தான் கொடியில்லாமல் இருக்கும் அது போன்ற மற்றோரு படத்தை www.careers360.com. இணையதளம் வெளியிட்டிருப்பதை காண்பித்தது.

கூகுள் பக்கம் கூகுள் பக்கம்

அந்த தேடல் முடிவு உண்மை நிலையை பரிசோதிக்கும் ஒரு இணையதளம் அதன் நம்பகமற்றதன்மையை தோலுரிப்பதையும் அந்த பாகிஸ்தான் கொடி போட்டோஷாப் மூலம் சேர்க்கப்பட்டது என்பதையும் காட்டியது.

கூகுள் பக்கம்

3. `ஃபர்ஸ்ட் டிராஃப்ட்` செய்தி சரிபார்ப்பு இணையம்

ஃபர்ஸ்ட் டிராஃப்ட் (First Draft) என்பது கூகுள் நியூஸ் லேப் உள்ளிட்ட ஒன்பது கூட்டாளிகளின் லாப நோக்கமற்ற ஒரு கூட்டு அமைப்பு. இணைய யுகத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மைகள் குறித்த சவால்களை எதிர்கொள்ளவும் அவை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டணி நியூஸ்செக் (NewsCheck) எனும் இணைய சேவையை வெளியிட்டிருக்கிறது. இந்த சேவை மூலம் படங்கள் மற்றும் காணொளிகளின் உண்மைத் தன்மையை சோதிப்பதுடன் அவற்றை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளையும் முடிவாக தரும்.

இது ஒரு எளிமையான நான்கு அடுக்கு செயல்முறை. இது ட்விட்டர் மூலம் உள்நுழைவதால் அந்த படத்தை அல்லது காணொளியை மதிப்பீடு செய்து அதன் உண்மை நிலையை கேள்விக்குள்ளாகிய நபரையும் உங்களால் காண முடியும்.

கணினி பக்கம் கணினி பக்கம் கணினி பக்கம்

4. ஃபேஸ்புக்கின் உண்மை பரிசோதிக்கும் கருவி

போலியான செய்தி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் பரவலாக பகிரப்படுவதை தடுக்க, அந்த சமூக ஊடக இணையதளம் ஒரு கருவியை தொடங்கியுள்ளது. இந்த கருவி பயனாளர்கள் படிக்க அல்லது பகிர விரும்பும் கட்டுரைகளின் உண்மைத்தன்மையை சில பரிசோதகர்கள் கேள்விக்குள்ளாக்கியதை அவர்களுக்குத் தெரிவிக்கும். இக்கருவி பாய்ண்டர் இன்ஸ்டியூட் ஆஃப் மீடியா ஸ்டடீசால் பரிந்துரைக்கப்பட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு உள்நுழைந்த பரிசோதகர்கள் முடிவுகளையே காட்டும். ஆனால் அந்த பட்டியலில் உலகிலுள்ள பல உண்மை நிலை பரிசோதகர்களும் அடக்கம்.

5. கூகுள் மொழிபெயர்ப்பு கருவி

இது இந்த பட்டியலுக்கு ஒரு வினோதமான இணைப்பாக தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. வாட்சப்பில் வரும் பல செய்திகள் அல்லது கட்டுரைகள் அந்த செய்தியை பெறுபவர் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்காது. ஆனால் அதில் அதைத் தொடர்ந்து ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும். அந்த மொழிபெயர்ப்பை சார்ந்து இருப்பதற்கு பதிலாக அதை கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் நீங்களே மொழிபெயர்த்து அது என்ன செய்தி என்று அறியலாம்.

இந்த ஆண்டு நடைபெற்ற பிரஞ்சு அதிபர் தேர்தலின்போது அல்-கயிதா எம்மானுவேல் மாக்ரோனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் ஒரு ட்விட்டர் செய்தி வைரலானது.

கணினி பக்கம்

அல்-கய்தாவுடன் தொடர்புடைய அல்-மஸ்ரா எனும் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் படமும் அந்த பதிவுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டுரை மாக்ரோனுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் அப்போதைய அதிபர் வேட்பாளரான அவர் அந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்ஜீரியாவுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து எழுதப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

http://www.bbc.com/tamil/global-40544175

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.