Jump to content

அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்


Recommended Posts

வைரலாகும் சமந்தாவின் இந்தப் புகைப்படம்!

 

 
samantha_naga_chaitanya

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானதொரு நிகழ்வு. நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார்.

Samantha-Naga-Chaitanya-wedding-2.jpg

கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இரு குடும்பத்தாருக்கும் நெருக்கமான நூறு விருந்தினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

samantha-ruth-prabhu-naga-twitter_650x40

நள்ளிரவு 11.52 மணிக்கு இந்துமுறைப்படி சமந்தாவின் கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். தாலி கட்டிய சில நொடிகளில் சமந்தா சந்தோஷத்தில் அழுதார். என்னதான் நடிகையாக இருந்தாலும், சினிமாவுக்காக பலவிதமான உணர்ச்சிகளை முக பாவத்தில் கொண்டு வருபவராக இருந்தாலும், தன்னுடைய திருமணம் என்று வரும் போது ஒரு சராசரி பெண்ணைப் போலத் தான் சமந்தாவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அழுதுள்ளார். சமந்தாவின் இந்த சந்தோஷக் கண்ணீர் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா நாக சைதன்யா தம்பதியரை ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/08/samanthas-photo-goes-viral-in-social-media-2786660.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

“ஹனிமூன் இப்போ இல்லை!”

 

ல்லாவரம் சமந்தா ரூத் பிரபுவும், ஜூப்ளி ஹில்ஸ் நாகசைதன்யாவும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். காதல் வென்றிருக்கிறது.

`விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில்தான் நாக சைதன்யாவும்- சமந்தாவும் முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். வருஷம் 2010. சமந்தாவுக்கு அதுதான் முதல் தெலுங்குப்படம். நாக சைதன்யாவுக்கு அது சினிமா கரியரில் இரண்டாவது படம். முதல் படத்தில் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக ஆரம்பித்து, அதன்பிறகு இருவருமே வேறுவேறு கமிட்மென்ட்ஸில் பிஸியாகி, 2015-ல் மீண்டும் திடீர் சந்திப்பில் காதலாகி, இப்போது கோவாவில் திருமணமாகித் தம்பதிகளாகியிருக்கின்றனர். 

99p1.jpg

கோவாவின் வேகட்டார் கடற்கரையோரம் உள்ள ‘டபிள்யூ’ ஹோட்டல்தான் ‘சாய்சாம்’  ஜோடியின் வெட்டிங் டெஸ்ட்டினேஷன்.அக்டோபர் 5-ம் தேதி இரவு, நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமாக `டபிள்யூ’ ஹோட்டலின் அறைகள் நிறைந்திருந்தன.

நள்ளிரவு 11.52-க்கு இந்து முறைப்படி திருமணம். தெலுங்குத் திருமணங்களில் நள்ளிரவு முகூர்த்தங்கள் சகஜம். அது முடிந்ததும் டின்னர். இதில் சமந்தா அணிந்திருந்தது நாக சைதன்யாவின் பாட்டியும் ராமநாயுடுவின் மனைவியுமான ராஜேஸ்வரியின் சேலை. அதையும் அவருக்குப் புதுப்பொலிவுக்கு மாற்றித் தந்தவர் பிரபல காஸ்ட்யூம் டிஸைனர் க்ரோஷே பஜாஜ்.

99p2.jpg

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து, கைத்தறி நெசவுத் துறையை ஆதரிப்பதற்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார் சமந்தா. அதன் பிரதிபலிப்புதான் இந்த ஓல்டு இஸ் கோல்டு ஆர்வமும். பழைய பட்டுச் சேலைக்கு மேட்ச்சாக சமந்தா அணிந்திருந்தவை ஆன்ட்டிக் ஜுவல்லரி.

அக்டோபர் 7-ம் தேதி மதியம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம். சமந்தாவுக்கு வெள்ளை கவுன் மற்றும் வைர நகைகள். சைதன்யாவுக்கு கோட் சூட். மணமகளின் கைகோத்துக் கூடவே நடந்து வந்தவர் சமந்தாவின் சகோதரர்.

99p3.jpg

திருமணத்துக்கு வந்தவர்களை வரவேற்று, உபசரித்தவர் திரைப் பிரபலம் நடிகர் வெங்கடேஷ். அவர் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமியின் அண்ணன். உறவினர் என்கிற முறையில் இத்திருமணத்தில் கலந்துகொண்ட இன்னொரு பிரபலம் நடிகர் ராணா. இவர்தவிர தெலுங்கு சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்கள் யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள்  பாடகி சின்மயி மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவும்தான். ``நானும் நாக சைதன்யாவும் ஸ்கூல்மேட்ஸ். தவிர நடிகையாகிறதுக்கு முன்னாடியே சமந்தாவும் நானும் ஃப்ரெண்ட்ஸ். படம் பார்க்குறது, வெளில சுத்தறதுனு அப்பலேர்ந்தே செம க்ளோஸா இருப்போம். ரெண்டு நாள் கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு நடிகையோட கல்யாணமில்லை. என் ஃப்ரெண்ட்ஸோட கல்யாணம்’’ என்கிறார் ரம்யா.

99p4.jpg

‘`எங்க கல்யாணம் ரொம்ப பிரைவேட்டா, சிம்பிளா நடக்கணும்ங்கிறது ஏற்கெனவே நாங்க பிளான் பண்ணினது. எங்க கல்யாணத்துக்கு வர்றவங்க உண்மையா சிரிக்கிற, உண்மையா சந்தோஷப்படுற, மனசார வாழ்த்துறவங்களா மட்டும்தான் இருக்கணும்னு நினைச்சோம்.’’- திருமணத்தில் நட்சத்திர முகங்களே இல்லையே என்கிற கேள்விக்கு சமந்தாவின் பதில் இதுதான்.

திருமண பட்ஜெட் மொத்தம் 10 கோடியாம். செலவு ஆளுக்குப் பாதிப் பாதி என்பதும், இருவர் தரப்புப் பெற்றோரிடமிருந்தும் ஒரு பைசாகூட வாங்கக் கூடாது என்பதும்கூட இருவரும் ஏற்கெனவே எடுத்த முடிவு.

திருமணம் முடிந்த அடுத்த நாளே சமந்தா, சாவித்ரியின் பயோபிக்கான ‘மகாநதி’ ஷூட்டிங்கிலும், சைதன்யா புதிய பட ஷூட்டிங்கிலும் பிசி. ஸோ.. பஹாமாவுக்குச் செல்வதாக இருந்த ஹனிமூன் பிளான், தற்காலிகமாக டிசம்பருக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

நல்லா இருங்க நண்பர்களே!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"குண்டாக இருக்கிறேன், ஆனாலும் மகிழ்ச்சியாய் உள்ளேன்" - சமந்தா புகைப்படம்!!

 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாயும், நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். இருவரும் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்த மாத 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

"குண்டாக இருக்கிறேன், ஆனாலும் மகிழ்ச்சியாய் உள்ளேன்" - சமந்தா புகைப்படம்!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படம் ஒன்றை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் சற்று பருமனாக தெரிகிறார் சமந்தா. இந்த புகைப்படத்தை வெளியிட்டு "குண்டாக இருக்கிறேன்! இருந்தாலும் பரவாயில்லை மகிழ்ச்சியாய் உள்ளேன்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் மிக அழகாக உள்ளார் என பலர் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/celeberities/samantha-reception-pic-in-Insta

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.