Jump to content

வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று


Recommended Posts

வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று

 
வாய்வழி பாலியல் உறவால் பரவும் குணப்படுத்த முடியாத தொற்று நோய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வாய்வழியாக பாலுறவு கொள்வது மிகவும் ஆபத்தான கொனோரியா என்ற பாலியல் நோய் தொற்றை உருவாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. மேலும், குறைந்துவரும் ஆணுறை பயன்பாடு அந்தத் தொற்று மேலும் பரவுவதற்கு உதவிகரமாக இருக்கிறது என்றும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யாரேனும் ஒருவர் கொனோரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் தற்போது அதை குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது என்றும், சில நேரத்தில் அதை குணப்படுத்துவது இயலாததது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாலியல் உறவின் மூலம் நோய் தொற்று மிக விரைவாக ஆன்டிபயோடிக்ஸ் எதிரான எதிர்ப்பு செல்களை உடனடியாக உருவாக்குகிறது.

சுமார் 78 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

சுமார் 77 நாடுகளின் தகவல்களை பகுப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ஆன்டிபயாடிக்ஸுக்கு எதிரான கொனோரியாவின் எதிர்ப்பு பரவலாக இருந்ததை காட்டியது.

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் டியோடோரா வி, ஜப்பான், ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று முற்றிலும் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகிறார்.

''கொனோரியா ஓர்அறிவான மூட்டை பூச்சியை போல. ஒவ்வொரு முறையும் புதிய வகையான ஆன்டிபயாடிக்ஸை செலுத்தும் போது, அந்த பூச்சி, எதிர்ப்புத்ன்மை கொண்டதாக மாறுகிறது.'' என்கிறார் அவர்.

கவலை தரும் செய்தி என்னவென்றால், கொனோரியா தொற்றின் பெரும்பான்மை என்பது ஏழை நாடுகளிலே இருப்பதாகவும், அங்குதான் எதிர்ப்பை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.

வாய்வழி பாலியல் உறவால் பரவும் குணப்படுத்த முடியாத தொற்று நோய்

வாய்வழி பாலுறவு

கொனோரியா பிறப்புறுப்புக்கள், மலக்குடல் மற்றும் தொண்டை ஆகியவற்றை பாதிக்கும். ஆனால், இதுதான் தற்போது இறுதியாக சுகாதார அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது.

ஆன்டிபயாடிக்ஸ் தொண்டையின் பின்பகுதியில் பாக்டீரியா உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். அதில் கொனோரியாவின் பிரிவினரும் அடங்கும் என்றும், இது எதிர்ப்பை உருவாக்கும் என்றும் வி கூறுகிறார்.

இதுபோன்ற ஒரு சூழலில் வாய்வழி மூலம் பாலியல் உறவு கொண்டு கொனோரியோ பாக்டீரியாவை இன்னும் செலுத்தும் போது அது வீரியம் கொண்ட கொனோரியாவாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

ஆணுறை பயன்பாட்டில் சரிவு காரணமாக இந்த கொனோரியா தொற்று வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

கொனோரியாபடத்தின் காப்புரிமைCAVALLINI JAMES/SCIENCE PHOTO LIBRARY

கொனோரியா என்றால் என்ன ?

இந்த நோய் தொற்று, நீஸ்ஸீரியா கொனோரியா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பிறப்புறுப்பு, வாய் மற்றும் ஆசனவாய் ஆகியவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொண்டால் நோய் தொற்று பரவும்.

பாலியல் உறுப்புகளிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வழிதல், சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் மாதவிடாய் காலத்தின் போது ரத்தப் போக்கு ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும்.

நோயை காலத்தோடு குணப்படுத்த தவறும் பட்சத்தில் ஆண்மை குறைவு மற்றும் இடுப்பு அழற்சி நோய்க்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பெண் ஒருவர் இந்நோயினால் பாதிக்கப்பட்டால் அது அவரது குழந்தையையும் தாக்குதவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எதிர்ப்பு ஆற்றல் மிக்க கொனோரியாவின் பரவல் குறித்து கண்காணிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், புதிய மருந்துகளில் முதலீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-40534175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை  முதல் இங்கிலிசு காரனுக்கு வெளங்கப்படுத்த வேணும்:24_stuck_out_tongue: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.