Jump to content

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்


Recommended Posts

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்

மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

மத்தி மீன் (sardine) - அரை கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2  தேக்கரண்டி
சோம்பு - 1  தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 20  பல்
எலுமிச்சை சாறு - 2  தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

201707071158173209_kerala-style-fish-fry

செய்முறை :

* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 - 4 மணி நேரம் வைக்கலாம்.

* அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

* அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை  உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

* இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

வெள்ளிகிழமைக்கு ஏற்ற தயிர் சாதம்..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

ஏன்  வெள்ளி வியாழன் பார்க்கவேண்டும்?

இத்தகைய நடைமுறைகளுடன் என்னக்கு உடன்பாடிலை.

எங்கோ வாசித்த ஞாபகம் உண்டு, அதாவது வெள்ளி என்பது மிகவும் குரூரமான நாள் ஆனா காரணத்தினால்தான் வெள்ளியில் மாமிச அல்லது மச்ச உணவைத் தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

வெள்ளியும் அதுவுமா விதி... கடந்துபோக முடியவில்லை.....!

மச்சம் கண்டதும் வெட்கம் கெட்டு 

அலையும் மனமே எங்ஙனம் 

புகுவாய் மோட்சம்.....!  tw_blush:

இது அநியாயம் சாரே.....!  tw_blush:

மனம் கொண்டதே மார்க்கம் வெள்ளியிலும் சாப்பிடலாம் மனம் சுத்தமாக இருந்தால் சரி மற்றது அந்த காலத்தில் மச்சம் ஏன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போக கூடாது என்றால் மச்சம் சாப்பிட்டு செல்வதால் அந்த கவர்ச்சி மணம் மற்றவருக்கு வீச அந்த மணத்தின் பால் அவர் ஈர்க்கப்ப்ட்டு அவரது  சிந்தனை மனநிலையையும் அந்த இடத்தில் மாறுமாம் அதனால் சொல்வார்கள் கோவில்லுக்கு மச்சம் சாப்பிட்டு விட்டு போக கூடாது என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் வெள்ளி மட்டுமல்ல சனி ஞ>யிறு  திங்கள் செவ்வாய் புதனிலும் நான் சாப்பிடுவதில்லை , அதுதான் பிரச்சனை.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வியாழன், வெள்ளி மட்டுமல்ல, சனி, ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதனிலும் நான் சாப்பிடுவதில்லை , அதுதான் பிரச்சனை.....!  tw_blush: 

வாரத்தின் ஏழு நாளும் பட்டினியென ஒதுங்கி(?) வாழ்ந்தால், உடல் கரைந்துவிடாதா..?  vil-roulelangue.gif

Why this self imposed isolation sir...? microndes2.gif 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

வாரத்தின் ஏழு நாளும் பட்டினியென ஒதுங்கி(?) வாழ்ந்தால், உடல் கரைந்துவிடாதா..?  vil-roulelangue.gif

Why this self imposed isolation sir...? microndes2.gif 

நான் ஒன்றும் பிறவிச் சைவமல்ல வன்னியன். பிரான்ஸ் வந்தும் நிறைய சாப்பிட்டானான், எதோ இப்ப கனகாலமாய் விட்டிட்டன். வீட்டில எல்லோரும் சாப்பிடுவினம். நான் சமைத்தும் கொடுக்கிறதுதான்.....!

யாரோ சொன்னார்கள் மச்சம் விட்டால் பின்னால ஒளிவட்டம்  தெரியுமென்று. ஆனால் இப்பதான் முன்னால அரைவட்டம் தெரியத் தொடங்கியிருக்கு....! விரும்பினால் நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.