Jump to content

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும்


Recommended Posts

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும்

 

 

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில் நடைபெறுகிறது என்றும்,அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Local_News_copy.jpg

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினர் தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் இக் கலந்துரையாடலின்போது முன்வைத்ததுடன், அவை தொடர்பான முன்மொழிவொன்றையும் ஜனாதிபதி கையளித்தனர்.

சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரி பிரிவின் வரக்காகொட ஶ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ராமஞ்ஞ நிக்காயவின் நாபான பேமசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பெருந்தொகையான மகா சங்கத்தினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/21580

Link to comment
Share on other sites

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக தொடர்ந்து பேச்சு நடத்த ஜனா­தி­ப­தியும் தேரர்­களும் இணக்கம்

 

வரைபு குறித்து ஆராய ஆணைக்குழு நியமிக்கவும் முடிவு

(ரொபட் அன்­டனி)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நான்கு பௌத்த பீட தேரர்­க­ளுக்கும் இடை யில் நேற்று கண்­டியில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

கண்­டியில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் நான்கு பிர­தான பௌத்த பீடங்­க­ளி­னதும் தேரர்கள் கலந்­து­கொண்­டனர். இதன்­போது சில தினங்­க­ளுக்கு முன்னர் பௌத்த பீடங்­களின் தேரர்கள் ஒன்­று­கூடி எடுத்த தீர்­மா­னங்கள் அடங்­கிய ஆவ­ணமும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.  

அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த செயற்­பா­டுகள் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள பிர­தான விட­யங்கள் தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக தேர்தல் முறை மாற்றம் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஆகிய விட­யங்கள் தொடர்­பா­கவும் பேசப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். இந்த நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நான்கு பௌத்த பீட தேரர்­க­ளுக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கூடிய நான்கு பௌத்த பீடங்­க­ளி­னதும் தேரர்கள் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையில்லை என்றும் அரசியலமைப்பு திருத்தமும் அவசியமில்லை என்றும் தீர்மானம் எடுத்திருந்தனர். அதனையடுத்தே ஜனாதிபதிக்கும் தேரர்களுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு நடைபெற்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-07#page-1

Link to comment
Share on other sites

 

மகாநாயக்கர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது - மைத்திரி!

மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் ஒற்றையாட்சிக்கோ, பௌத்தமதத்திற்கான முன்னுரிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று கண்டியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும்,  ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.

நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்குக் கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், பாதுகாக்கப்பட்ட காடுகள்அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=72855

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை – சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது – மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை - சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது - மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு இல்லை, தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை, இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் முன்வைப்பது போலியான வாதங்களேயென தேசிய சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியம் தேவையெனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது.

இந்த அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படமாட்டாது. அத்துடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வும் இதில் உள்ளடக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளதால் அரசாங்கம் தருவதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடவேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=72850

Link to comment
Share on other sites

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன

 
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன Image captionபுதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன

இலங்கையில் புதிய அரசியலமைப்பு மாதிரி சட்ட மூலத்தை தயாரிப்பது குறித்து அது தொடர்பாக பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பு மாற்றம் ஏதுவாயினும் தற்போதைக்கு தேவையில்லை என பௌத்த உயர் பீடத்தினரான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பௌத்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் தயாரிக்கப்படவில்லை என்றும், புதிய அரசியலமைப்பு குறித்து தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், '' அரசினால் அத்தகைய சட்ட மூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரதன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அது தயாரிக்கப்படும் '' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினரால் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டு அது தொடர்பான முன் மொழிவுகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-40528224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Athavan CH said:

 

மகாநாயக்கர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது - மைத்திரி!

மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் ஒற்றையாட்சிக்கோ, பௌத்தமதத்திற்கான முன்னுரிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று கண்டியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும்,  ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.

நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்குக் கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், பாதுகாக்கப்பட்ட காடுகள்அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=72855

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை – சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது – மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை - சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது - மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு இல்லை, தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை, இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் முன்வைப்பது போலியான வாதங்களேயென தேசிய சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியம் தேவையெனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது.

இந்த அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படமாட்டாது. அத்துடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வும் இதில் உள்ளடக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளதால் அரசாங்கம் தருவதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடவேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=72850

நிஜத்தினை, யதார்த்தனை உள்ளது, உள்ளபடியே பூசி மெழுகாமல் சொல்வதால் உங்களை பாராட்டிட வேண்டும்.

சம்பந்தரும், சுமந்திரரும் தான் என்ன சொல்லப் போகின்றனர் ?

தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே வழி: விக்கியார் சுஜ நிர்ணய உரிமை தேர்தல் கோரிக்கையை விடுப்பது தான். அது ஒன்றே தான் வழி. 

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு உரிய உரிமைகளை தரமுடியாத அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது! என எதிர்ப்புக்காட்டித் தமிழ் அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவிகளைத் துறந்து தங்கள் எதிர்ப்பை உலகுக்கு அறியத்தருவார்களா....???  அப்படி நடந்தால்...!! நினைக்கவே பெருமையாக இருக்கிறது.!! மேலைநாட்டு மக்களுடன் ஒன்றி இருப்பதால் இப்படியான எண்ணங்கள் தோன்றுகின்றதா.......??? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.