Jump to content

‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’ -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive


Recommended Posts

‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’  -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive

 
 

தினகரன்

பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பில் அரசியல்ரீதியான விஷயங்கள் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், குடும்ப நிலை பற்றியே சசிகலா அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கை பற்றியும் சசிகலாவிடம் விரிவாக எடுத்துரைத்தார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் சசிகலாவின் கணவர் நடராசன் அளித்த பேட்டி அ.தி.மு.கவுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே கட்சிக்காக எந்த வகையில் எல்லாம் பாடுபட்டேன் என்பதையும் நடராசன் விளக்கியிருந்தார். அ.தி.மு.கவுக்குள் தங்களுக்கான உரிமை குறித்து, அவர் விளக்குவதாகவே இந்தப் பேட்டி அமைந்தது. இந்தப் பேட்டியைத் தினகரன் ரசிக்கவில்லை. கூடவே, நடராசனும் திவாகரனும் தனக்கு எதிராகச் செயல்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் கவனித்தே வந்தார். 'ஆகஸ்ட் 5 ஆம் தேதியோடு நான் கொடுத்த கெடு முடிகிறது. அதன் பிறகு என்னுடைய நடவடிக்கைகளைப் பாருங்கள்' என முதல்வர் பழனிசாமிக்குச் சில நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார் தினகரன்.

கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து தினகரன் முழுமையாக ஒதுங்கியிருப்பதை அவருடைய ஆதரவாளர்கள் விரும்பவில்லை. 'மீண்டும் அவர் பழையபடி கட்சிப் பணியில் ஈடுபடுவார்' என உறுதியாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் தினகரன். இந்தச் சந்திப்பு குறித்து பேட்டியளித்த தினகரன், 'இரண்டு அணிகளையும் நிச்சயமாக இணைக்க முடியும். இதுகுறித்து பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார். ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் கட்சி பணிகளைத் தொடங்க இருக்கிறேன். அணிகள் இணையும் என்ற நம்பிக்கையில்தான் 60 நாள்களாக விலகி இருக்கிறேன். பயத்தின் காரணமாக அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு எதிராகப் பேசி வருகிறார். விரைவில் அவர் என்னுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகும்' என்றார். கூடவே, நடராசன் பேட்டி குறித்து கேட்டபோதும், ‘அவர் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் அல்ல' எனவும் விளக்கினார். 

சசிகலாமன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “கட்சி அலுவலகத்துக்குள்கூட தினகரனால் நுழைய முடியவில்லை. அந்தளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர். 'ஒருமுறை தினகரனிடம் இறங்கிப் போய்விட்டால், மலையளவு பாதிப்பு ஏற்படும்' என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. எம்எல்ஏ-க்களை வைத்து எடப்பாடி பழனிசாமியை அசைத்துப் பார்க்கவும் முடிவு செய்தார் தினகரன். ஆனால், இதைப் பற்றியெல்லாம் முதல்வர் பழனிசாமி கவலைப்படவில்லை. நேற்று சசிகலாவைச் சந்தித்த தினகரன், இதைப் பற்றித்தான் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் பேசிய தினகரன், 'நமக்குள் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால், கட்சியில் நம் குடும்பத்தினர் யாருக்கும் எந்த முக்கியத்துவமும் கிடைக்கப் போவதில்லை. உங்களையும் சேர்த்து அவர்கள் விலக்கி வைத்துவிடுவார்கள். நாம் நினைத்தது போல எடப்பாடி பழனிசாமி இல்லை. முதல்வர் பதவியில் பன்னீர்செல்வமே தொடர்ந்திருக்கலாம். நமக்கு ஆதரவாக வெற்றிவேல் பேசியபோது, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்களோ, நமது குடும்பத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். சிறைத் தண்டனை முடிந்து நீங்கள் வெளியே வந்தாலும், 'அரசியல் பணிகளில் நீங்கள் ஆர்வம் காட்ட மாட்டார்' என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நினைக்கின்றனர்.

பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களை நாம் மிகச் சாதாரணமாக நினைத்துவிட்டோம். கட்சிக்குள் நாம் பலமாக கால் ஊன்ற வேண்டும். நமது குடும்பத்திலேயே எனக்கு மட்டும்தான் ஜெயலலிதா எம்பி சீட் கொடுத்தார். 'சிறப்பாக கட்சி வேலை பார்த்தேன்' என்ற பெயரும் கிடைத்தது. நமது குடும்பத்தில் வேறு யாருக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மற்றவர்கள் விரும்பி வந்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மீதுள்ள மனஸ்தாபத்தில்தான் நடராசன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது கட்சியிலும் ஆட்சியிலும் நமக்கு எந்தப் பிடிமானமும் இல்லை. பன்னீர்செல்வம் பக்கம் இருந்த எம்எல்ஏ-க்களையும் எடப்பாடி பழனிசாமி தன்பக்கம் திருப்பிவிட்டார். இனியும் நாம் அடித்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அடுத்த மாதத்தில் இருந்து கட்சிப் பணிகளைத் தீவிரமாகக் கவனிக்க இருக்கிறேன்' என விவரித்திருக்கிறார். சசிகலாவும், 'குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலே, அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எந்தக் காரியம் என்றாலும் நிதானமாகவே செய்' எனக் கூறிவிட்டு, சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்" என்றார் விரிவாக. 

 

“சிறையில் சசிகலா-தினகரன் சந்திப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் முதல்வர் கவனத்துக்கு உடனுக்குடன் சென்றுவிட்டது. கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை விட்டுக் கொடுக்கவும் அவர் தயாராக இல்லை. ‘சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால்தான், மக்கள் தலைவராக வர முடியும்' எனக் கொங்கு மண்டல அமைச்சர்கள் அவரிடம் உறுதியாகக் கூறிவிட்டனர். இதுகுறித்து, பா.ஜ.க தொடர்பில் இருக்கும் முக்கிய நபரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ‘திவாகரனுடன் எனக்கு எந்த கருத்து மோதலும் இல்லை' என தினகரன் கூறுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 'குடும்பச் சண்டையில் அவர்களே வீழ்வார்கள்' என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இருவரும் இணைந்துவிட்டால், ஆட்சிக்கு எதிராக எதையாவது செய்வார்கள் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். சசிகலா உறவுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் உளவுத்துறை" என்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/94546-panneerselvam-couldve-been-the-cm---ttv-dinakarans-u-turn-shock.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.