Jump to content

த.தே.கூ என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான். ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது.


Recommended Posts

10977_1499259226_mm.jpg

த.தே.கூ என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான். ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது.

தற்போது நாங்கள் அதனை ஒருவாரு சரி செய்து விட்டோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
 
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் கல்விப் பொதுத்தராதர உயர்தர கலைப்பிரிவு ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.இதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
 
வட மாகாண சபையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது நாங்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜே.ஆர் ஜெயவர்த்தன நாங்கள் தமிழ் ஈழம் கேட்ட போது தூக்கிக் கொடுத்திருக்க வேண்டும் அப்போது நம்மவர்கள் நமக்குள்ளே அடிபட்டு தமிழீழம் வேண்டாம் நாங்கள் ஒற்றையாட்சிக்குள்ளேயே இருக்கின்றோம் என்று சொல்லியிருப்பார்கள் என்று ஒருவர் விளையாட்டுக்குச் சொன்னார் அனால் இன்று அது சரியாகி விடுமோ என்று அச்சப்பட வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது.
 
ஒரு விடயத்தைக் கையாள்வதற்கு பல அணுகுமுறைகள் இருக்கின்றன. கூட்டுப் பொறுப்புள்ள ஒரு விடயம் இது. மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பன மரபு ரீதியாக ஆளப்பட வேண்டும். அங்கு சட்டங்கள் பெரிதாக செல்லு படியாகாது. பாராளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்று ஒருவரை அழைத்து அவருக்கு தீர்ப்பு வழங்கக் கூடிய நீதித் தத்துவம் கூட பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைக்கும் இருக்கின்றது. வட மாகாண சபை விடயம் ஏற்ற அணுகுமுறைகளுடன் நடைபெற்றிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெற்றிருக்காது.
 
எமது நிர்வாகத்தைப் பற்றி தென்னகம் தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. வட மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் தமிழர்கள் ஆளத்தான் போகின்றார்கள் என்று. ஆனால் தற்போது அனைத்தும் கூழமும் பதருமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றோம். அதனால் நாங்கள் தலை கவிழ்ந்து நிற்கின்றோம்.
 
இந்த விடயம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியினர் நாங்கள் பேசாமல் இருக்கின்றோம். எங்களுக்கு எதிராக பல பக்கத்தில் இருந்து அம்புகள் எய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அம்புகளை எய்தால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அவர்கள் கொட்டுவதைக் கொட்டட்டும். எமது தமிழரசுக் கட்சி தந்தை செல்வாவினுடைய கட்சி எந்த விதத்திலுமே நாங்கள் கலங்கப்படாதவர்கள்.
 
ஊழல் அமைச்சர்கள் இருவரை வெளியேற்ற நினைத்தன் காரணமாகத் தான் தமிழரசுக் கட்சி துடிக்கிறது என்று சொல்லுகின்றார்கள் யார் சொல்லுகின்றார்கள் எங்களிடம் மூன்று ஆசனங்கள் கேட்டு நாங்கள் ஒன்று தான் தரமுடியும் என்று கூறியமையால் எம்மை விட்டுச் சென்ற தமிழ் காங்கிரஸ், இன்னுமொருவர் எங்களுக்குள்ளேயே இருந்து விமர்சனங்கள் செய்தார். விமர்சனங்கள் செய்து செய்து மக்களே அவரை நிராகரித்து விட்டார்கள். அது போன்று எம்முடன் இருந்தவர்கள் சிலரும் ஒரு பக்கத்தில் நின்கின்றார்கள். சரியான மழை பெய்யும் போது தான் தெரியும் நரி யார் சிங்கம் யார் என்று.
 
ஆனால் எமது கிழக்கு மாகாணம் அசையவில்லை. எமது கிழக்கு மாகாணத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உறுதியாகத் தான் இருக்கின்றார்கள். அவர்கள் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள் என்று அறிந்தேன். எமது மாகாண சபை உறுப்பினர்கள் சொன்னார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சியோடு சேர்ந்தது தான் என்று. ஆனால் வடக்கில் அது இல்லாமல் போய்விட்டது. ஆனால் தற்போது நாங்கள் அதனை ஒருவாரு சரி செய்து விட்டோம்.
 
ஏன் நான் இதைச் சொல்கின்றேன் என்றால் நிர்வாகத்தை தமிழர்கள் நடத்த முடியுமா என்கின்ற கேள்விக்கு வடக்கு மாகாணத்தில் சரியான பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் கிழக்கிலே நாங்கள் அதனைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
கிழக்கிலே உள்ள கஸ்டங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் சிலர் நினைக்கின்றார்கள் நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏழு உறுப்பினர்கள் இருக்கின்ற முஸ்லீம் காங்கிரசிற்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து விட்டோம் என்று. அது அப்படியல்ல நாங்கள் இந்த நிர்வாகத்திற்கு வருகின்ற போது ஏற்கனவே ஒரு முதலமைச்சர் நியமிக்கபட்டு விட்டார் அவரை விலக்கி விட்டு நாங்கள் ஒரு முதலமைச்சரை நியமிக்கக் கூடிய அளவிற்கு பத்தொன்பது பேர் எங்களிடம் இல்லை. ஒரு சிங்கள உறுப்பினர் சொன்னார் நான் பெரும்பாண்மை எடுக்கின்றேன் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் இங்கு ஒரு சிறுபான்மை இனத்தவரவே முதலமைச்சராக வர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே அந்த விடயம் கையாளப்பட்டது. இது கூட்டல் கழித்தல் விடயம் அல்ல எனவே இவ்வாறான விடயங்கள் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
தமிழரசுக் கட்சி யாரையும் கைவிட மாட்டாது. சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. எனவே இவ்வாறான பலத்தை வைத்துக் கொண்டு தான் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் எங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். வருகின்ற அடுத்த கண்டத்தைத் தாண்டி அடுத்த நிலையில் நாங்கள் இவ்வாறு பலமாக நின்றால் மட்டும் தான் இன்னும் பல விடயங்களைச் செய்ய முடியும் என்கின்ற விடயத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

http://battinaatham.com/description.php?art=10977

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Athavan CH said:

இந்த விடயம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியினர் நாங்கள் பேசாமல் இருக்கின்றோம். எங்களுக்கு எதிராக பல பக்கத்தில் இருந்து அம்புகள் எய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அம்புகளை எய்தால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அவர்கள் கொட்டுவதைக் கொட்டட்டும். எமது தமிழரசுக் கட்சி தந்தை செல்வாவினுடைய கட்சி எந்த விதத்திலுமே நாங்கள் கலங்கப்படாதவர்கள்.
 

அப்பன் போலிஸ் காரன் மகன் கொள்ளைக்காரன தங்கபதக்கம் படம் பார்த்தால் புரியும் தந்தை செல்வா இல்லைத்தானே இருந்து இருந்தால் உங்கடை கூத்தை பார்த்து அந்தாள் கடுப்பாகி துவக்குடன் வந்து ஒவ்வொருத்தரா போட்டுதள்ளியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் நன்றாக  இருக்கட்டும் கிழக்கில்......
முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு இவர்கள் என்ன முயற்சி செய்தார்கள்?
பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டவர்கள் யாராலும் ஒரு இனத்திற்கான விடுதலையைப் பெற்றுத்தர முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

ஆனால் கிழக்கிலே நாங்கள் அதனைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
கிழக்கிலே உள்ள கஸ்டங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் சிலர் நினைக்கின்றார்கள் நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏழு உறுப்பினர்கள் இருக்கின்ற முஸ்லீம் காங்கிரசிற்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து விட்டோம் என்று. அது அப்படியல்ல நாங்கள் இந்த நிர்வாகத்திற்கு வருகின்ற போது ஏற்கனவே ஒரு முதலமைச்சர் நியமிக்கபட்டு விட்டார் அவரை விலக்கி விட்டு நாங்கள் ஒரு முதலமைச்சரை நியமிக்கக் கூடிய அளவிற்கு பத்தொன்பது பேர் எங்களிடம் இல்லை. ஒரு சிங்கள உறுப்பினர் சொன்னார் நான் பெரும்பாண்மை எடுக்கின்றேன் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் இங்கு ஒரு சிறுபான்மை இனத்தவரவே முதலமைச்சராக வர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே அந்த விடயம் கையாளப்பட்டது. இது கூட்டல் கழித்தல் விடயம் அல்ல எனவே இவ்வாறான விடயங்கள் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

வாயில நல்லா வருது ...மண்ணாங்கட்டி 
பதினோரு பேரை உள்ளே அனுப்பி என்ன பிரயோசனம் கோலி குண்டு விழையாடவா உள்ளே போனீர்கள்...முஸ்லிம் காங்கிரசுடன் போராடி ஒரு விடயத்தை சாதிக்க வக்கில்லை 
சிறுபான்மை இனத்தவர் மரம் ...மட்டை என்று இன்று கிழக்கு முழுதும் முஸ்லிம்களால் விழுங்கப்படுகிறது, கல்முனை தமிழ்பிரிவு கையை விட்டு போயாயிற்று  தடுத்து நிறுத்த துப்பில்லை,   இதற்குள்  மாகாண சபை உறுப்பினருக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வேண்டும் என்று போர் கொடி வேற 

 

7 hours ago, Athavan CH said:

வருகின்ற அடுத்த கண்டத்தைத் தாண்டி அடுத்த நிலையில் நாங்கள் இவ்வாறு பலமாக நின்றால் மட்டும் தான் இன்னும் பல விடயங்களைச் செய்ய முடியும் என்கின்ற விடயத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

 கண்டம் வரும்போது தான் உங்களுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.