Jump to content

எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’


Recommended Posts

மிஸ்டர் கழுகு: எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’

 

‘‘ஜனாதிபதி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தமிழகத்தின் தலைநகரை முற்றுகையிட்டதுதான் கடந்த வார பரபரப்பு’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

“பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் அமர்க்கள வரவேற்பு கொடுத்திருக்கின்றனவே?’’ என்றோம்.

‘‘ஆமாம்! அவருடைய பயணத்திட்டம் டெல்லியில் தயாரானபோதே ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுடனும் தனித்தனியாக எப்படிப் பேசுவது... என்ன பேசுவது’ என்பதும் முடிவானது. வழக்கம் போல, ஓ.பி.எஸ் அணிக்குத்தான் முன்னுரிமை. ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். ராம்நாத்திடம் பன்னீர் காட்டிய பவ்யத்தைக் கண்டு, அவருடன் வந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால், அரசியல் திருப்பம் எதுவும் இடம்பெறவில்லை.”

2p1.jpg

“ம்ம்ம்... அப்படியானால் எடப்பாடி அணியைச் சந்தித்ததில் திருப்பம் இருந்ததா?”

“ஆம். யாரும் எதிர்பார்க்காத அதிரடி. எடப்பாடி அணியினரைக் கலைவாணர் அரங்கில் சந்தித்தார், ராம்நாத் கோவிந்த். தினகரன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். சமீபகாலமாக, ஓ.பி.எஸ் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் இடையில் நடக்கும் மோதலைவிட... தினகரன் அணிக்கும் எடப்பாடி அணிக்கும்தான் அதிகமாக மோதல் நடக்கிறது. ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க-வின் மூன்று அணிகளும்  போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு கொடுத்தன. ஆனாலும் பி.ஜே.பி தரப்பு அதை இரண்டு பிரிவாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது. தினகரனின் ஆதரவைச் சத்தமின்றி ஏற்றுக்கொண்ட பி.ஜே.பி., அவர்களைத் தனியாக சந்திக்கவில்லை. அவர்களையும் மொத்தமாக அழைத்துவரும் பொறுப்பு எடப்பாடி தலையில்தான் சுமத்தப்பட்டது. இதனால் கடைசி நேரம் வரையில் எடப்பாடி அணி டென்ஷனிலேயே இருந்தது.”

“ஏன்?”

“கடைசி நேரம்வரை தினகரன் தரப்பில் எம்.எல்.ஏ வெற்றிவேல், டென்ஷனை ஏற்றிக்கொண்டே இருந்தார். ‘பன்னீர் அணிக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைப் போல, தினகரன் தரப்புக்கு பி.ஜே.பி முக்கியத்துவம் தரவில்லை’ என்றார்.  ராம்நாத் கோவிந்த் பயணத்திட்டத்திலும் ‘தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களோடு தனி சந்திப்பு வேண்டாம்’ என பி.ஜே.பி மேலிடம் சொன்ன தகவலும் அவர்களுக்குக் கிடைத்தது. அது, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களைச் சூடேற்றியது. ‘ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இஃப்தார் விருந்தைப் புறக்கணித்ததைப் போல ராம்நாத் கோவிந்த் வருகையையும் புறக்கணிப்போம்’ என அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.”
2p3.jpg
“பிறகு எப்படி கலந்து கொண்டார்களாம்?”

“எல்லாம் தினகரனின் அறிவுறுத்தல்தான். ‘நம் ஆதரவு ராம்நாத் கோவிந்த்துக்குத்தான் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்’ எனத் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு,  தினகரன் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகுதான், அவர்கள் வருவது உறுதியானது.”

“தினகரன் அந்த அளவுக்கு இறங்கிவர என்ன காரணம்?”

“தினகரன் தரப்போ, சசிகலா உறவுகளோ, அதிகமாகக் குடைச்சல் கொடுக்கும் சமயங்களில், அவர்களைச் சமாளிக்க எடப்பாடி ஒரு புதிய அஸ்திரத்தைப் பயன்படுத்துகிறார். ‘என்னை விட்டுவிடுங்கள். நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். நீங்கள் விரும்பும் ஒருவரை முதல்வராகப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்கிறார். இது தினகரன் தரப்புக்கும், சசிகலா குடும்பத்துக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இன்றைக்குக் கட்சியும் ஆட்சியும் இருக்கும் நிலையில், எடப்பாடியும் ராஜினாமா செய்தால், அடுத்து ஒருவரைப் பிடித்து, முதல்வராக்கி, ஆட்சியையும் கட்சியையும் ஸ்திரமாக வைத்துக்கொள்வது கடினம் என்பதால்தான், அவர்களும் பொறுமையாக இருக்கின்றனர். ஆனாலும், சில விவகாரங்களில் எடப்பாடி தரப்பு தன்னிச்சையாகச் செயல்படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘கைமீறிப்போகிறார் எடப்பாடி’ என்ற புகைச்சல் லேசாக அந்தக் குடும்பத்தில் எழ ஆரம்பித்துள்ளது. ‘நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் நேரத்தில், மிகப்பெரிய புயல் ஒன்று ஆட்சியை மையம் கொள்ள உள்ளது. அது, ஆட்சியையே அசைத்துப் பார்க்கலாம்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.’’

‘‘பி.ஜே.பி-யுடன் எடப்பாடி நல்ல உறவில் இருக்கும்போது, ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதா?”

“ஜி.எஸ்.டி, உதய் திட்டம், ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு ஆகியவற்றில் பி.ஜே.பி சாதித்துவிட்டது. இனிமேல் அ.தி.மு.க-வின் தயவு பி.ஜே.பி-க்குப் பெரிதாகத் தேவைப்படாது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதுவரை பிரதமர் மோடி எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுவரை தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகமே அதற்குக் காரணம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!’’

‘‘அப்படியா?”

‘‘இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், பிஸியாகிவிட்டார் திவாகரன். தினகரனுக்கு ஆதரவாக மன்னார்குடியில் கடந்த மாதம் 18-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து திவாகரன் தலையிட்டதால், போலீஸ் தடை போட்டது. இந்தச் சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு, தஞ்சையில் பொதுக்கூட்டம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் வந்து தங்களுடன் இணைவார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி கூட்டம் திரளவில்லையாம். ஓ.பன்னீர்செல்வம் தஞ்சைக்கு வந்த ஜூன் 28-ம் தேதியன்று, திருவாரூரில் முன்னாள் எம்.எல்.ஏ பாப்பா சுப்பிரமணியன் மகன் திருமணத்துக்குச் சென்றார் திவாகரன். அங்கு திவாகரனை வரவேற்று, ‘தம்பி வா! தலைமை ஏற்க வா!’ என்று ஃபிளக்ஸ் வைத்திருந்தார்கள்’’

2p2.jpg

‘‘ஓஹோ’’

‘‘நேரடி அரசியலில் இறங்க திவாகரன் ஆர்வம் காட்டுவதாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜூலை 15-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் திவாகரனின் வலது கரமாக இருக்கும் எஸ்.காமராஜ் ஏற்பாட்டில் மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள்,எம்.பி-க்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் போகச் சொல்லி முதல்வர் எடப்பாடி தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டு விட்டதாம்.’’

“அ.தி.மு.க-வுடன் இருந்த உதிரிக் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து போய்விட்டன போலத் தெரிகிறதே?”

“கொங்கு நாடு இளைஞர் பேரவை கட்சியின் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூவரும் இரட்டை இலையில் வென்று எம்.எல்.ஏ ஆனவர்கள். இவர்கள், ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர். சில நாள்களுக்கு முன்பு ஸ்டாலினைக் கருணாஸ், தனியரசு இருவரும் சந்தித்து, பல விஷயங்களை மனம் விட்டுப் பேசியுள்ளனர். தமிமுன் அன்சாரியைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஓகே சொல்லி விட்டார்.”

“தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

“காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருகையின்போது, தி.மு.க தனது முழு பலத்தையும் காட்டியது. ‘கருணாநிதியைச் சந்திக்க வேண்டும்’ என்று ஸ்டாலினிடம் மீரா குமார் சொல்லியுள்ளார். கோபாலபுரம் வந்த மீரா குமாரை ஸ்டாலின் அறிமுகம் செய்தபோது, கருணாநிதி தலையை நிமிர்ந்து பார்த்துள்ளார். உடனே கருணாநிதியின் கையில், தான் கொண்டுவந்த சால்வையைக் கொடுத்துள்ளார் மீரா குமார். தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தபோது, மீரா குமாரின் தலையில் கையை வைத்து கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.”
2p61.jpg
“மீரா குமார் - எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பின்போது என்ன நடந்ததாம்?”

“தி.மு.க சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் பேசியுள்ளனர். அதன்பிறகு, தனக்குப் பேச வாய்ப்பு வழங்குவார்கள் என்று திருநாவுக்கரசர் பெரிதும் எதிர்பார்த்தாராம். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லையாம். அதில் திருநாவுக்கரசருக்குக் கொஞ்சம் வருத்தம் என்கிறார்கள். ‘ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எப்படிப் பேச முடியும்’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.”

“திருநாவுக்கரசருக்கு விழா எடுக்கப் போகிறார்களாமே?”

“ஆமாம்! திருநாவுக்கரசர் அரசியல் களத்துக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. 1977-ம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, துணை சபாநாயகராக ஆனார். காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை அ.தி.மு.க-வுக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்தான். துணை சபாநாயகராக இருந்தவரை அமைச்சராக்கினார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு, ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். பிறகு தனிக் கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சியை பி.ஜே.பி-யுடன் இணைத்து மத்திய அமைச்சர் ஆனார். பிறகு காங்கிரஸில் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ளார். அவர் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை, வரும் 13-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.”

‘‘ஓஹோ!’’

‘‘இந்த வெட்டி பந்தா எல்லாம் எதற்கு என்று திருநாவுக்கரசரின் எதிர்கோஷ்டி கொளுத்திப் போடுகிறது. திருநாவுக்கரசரின் மகளுக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்தது. ஸ்டாலினை அழைத்து இருந்தார் திருநாவுக்கரசர். அவரும் வந்திருந்தாராம். தினகரன் அணியில் இருக்கிறார் இசக்கி சுப்பையா. அவர் தினகரனை அழைத்து வந்திருந்தார். சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அதில் ஆஜரானது ஆச்சர்யம். திருநாவுக்கரசரின் பழைய அ.தி.மு.க பாசத்தை, தி.மு.க உன்னிப்பாகக் கவனித்து வருகிறது’’ என்றபடியே கழுகார் பறந்தார்.

படம்: கே.ஜெரோம்


நமது எம்.ஜி.ஆரைத்தூக்கியடித்த அமைச்சர்!2p4.jpg

மதுரையில் ஜூன் 30-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ‘நமது எம்.ஜி.ஆர்’ நிருபர் மோகன்ராஜு, விழாவுக்கு வந்த அமைச்சர்களிடம் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் பிரதிகளைக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா காலத்தில் இருந்தே மோகன்ராஜு அங்கு நிருபராக இருப்பதால், பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு அவரை அடையாளம் தெரியும். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டனர். திண்டுக்கல் சீனிவாசன், “ஆமாய்யா, இதப் படிச்சாத்தான் மேடையில் எதாவது உருப்படியா பேச முடியும்” என்று சொல்லிக்கொண்டே வாங்கினாராம். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடமும் நாளிதழை மோகன்ராஜு கொடுத்துள்ளார். “இந்தப் பேப்பரை எல்லாம் எதுக்கு எங்ககிட்ட குடுக்கிற...” என அவரைத் திட்டியபடி பேப்பரை தூக்கி வீசினாராம் தங்கமணி. “இந்த நாளிதழுக்கு அம்மாதான் நிறுவனர்; அம்மா பெயரில்தான் பத்திரிகை நடக்கிறது” என்று காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார் மோகன்ராஜு. “அம்மா நிறுவனர் என்றால், எதற்காக மத்திய அரசைத் திட்டி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தங்கமணி கண்டபடி திட்டியதாக புகார் கிளம்பியிருக்கிறது.


2p5.jpg

புதுச்சேரியில் பி.ஜே.பி-யின் புதுப்பாதை!

புதுச்சேரி சட்டசபைக்கு மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக ஆக்க முடியும். ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில், நியமன எம்.எல்.ஏ-க்கள் மற்றும் வாரியங்களுக்கான தலைவர் பதவியை நிரப்பாமல் வைத்திருந்தார் நாராயணசாமி. கவர்னர் கிரண் பேடி மூலமாகக் குடைச்சல் கொடுத்து வரும் மத்திய பி.ஜே.பி அரசு, இதைப் பயன்படுத்திக் கொண்டது. புதுச்சேரி மாநில பி.ஜே.பி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை நியமன  எம்.எல்.ஏ-க்களாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சியைச் சேராதவர்கள் எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இதன்மூலம் ஆளும் காங்கிரஸை பலம் இழக்கச் செய்து, எதிர்க்கட்சிகளின் பலத்தைக் கூட்டியிருக்கிறது மத்திய அரசு.

‘நாராயணசாமிக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் எம்.எல்.ஏ-க்கள் நியமனம் தொடர்பான கோப்பு தயாரானதுகூட தெரியவில்லை. மேலும், இவர்கள் மூன்று பேரைப் பற்றிய முழு விவரங்களையும் புதுச்சேரி உளவுப்பிரிவிடம் இருந்துதான் கேட்டுப் பெற்றிருக்கிறது மத்திய அரசு. இந்தத் தகவல்கூட முதல்வருக்கு சொல்லப்படவில்லையாம். இப்போது இதுதொடர்பான வழக்கை மட்டுமே மலை போல நம்பியிருக்கிறது காங்கிரஸ்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.