Jump to content

மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம் : மு. திருநாவுக்கரசு


Recommended Posts

எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும்.

ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மாக்கியம் கொக்கி எழுதிய “தாய்” என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம்.

ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய “கோலைசலை” என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு.

இந்த வகையில் தாய்மார்களின் துயரங்களைப் பற்றிப் பேசாமல், போராட்டத்திற்கான நியாயங்களைப் பற்றிப் பேசாமல், போராட்டத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்களைப் பற்றியும், தியாயகங்களைப் பற்றியும் பேசாமல், ஏற்பட்ட பேரழிவைப் பற்றிப் பேசாமல், நீதி-நியாயம், தர்மம் ஜனநாயகம், போன்ற எதனைப் பற்றியும் பேசமுடியாது. காரணத்தைப் பற்றிப் பேசாமல் காரியத்தைப் பற்றிப் பேசமுடியாது.

இலங்கையில் நிகழ்ந்து வருவது ஒரு திட்டவட்டமான Structural Genocide சமூக அமைப்பு முறையிலான தொடர் இன அழிப்பாகும்.

இந்திய எதிர்ப்புவாதத்தின் அடிப்படையில் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாத மனப்பாங்குடன் இலங்கையின் அரசியல் சிந்தனை கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாடு, ஒரு மக்கள் ஓர் இனம், ஓர் அரசு, ஓர் எல்லை, ஓர் இராணுவம் என்ற சிந்தனையுடன் இன அழிப்புக் கொள்கை இலங்கையில் வடிவம் பெற்றுள்ளது. இந்த வடிவம்தான் Structural Genocide எனப்படும்.

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிகுண்டுகளும், விமானக் குண்டுவீச்சுக்களும் கொண்டு நடாத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த இனப்படுகொலை அரங்கேறியது.

பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய Structural Genocide இத்தகைய இரத்தம் தோய்ந்த மனிதப்படுகொலை என்பது ஓர் அங்கம் மட்டுமே.

நீருக்குள் இருக்கும் மீனுக்கு நீர் இயல்பானது போல இனவாத அரசியல் அறிவியல் கல்விச் சூழலுக்குள் இருக்கும் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் உரிமைகள் அநீதியானவையாகவே தோன்றுகின்றன.

இதனால் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த அநீதியையும், படுகொலைகளையும் ஆதரித்தும், ஏற்றும் அதற்கேற்ப செயற்படும் யதார்த்தத்தை சிங்கள மக்கள் கொண்டுள்ளனர்.

இதன்படி தமிழரை தமக்கு எதிரானவர்களாக, எதிரிகளாக பார்க்கும் அரசியல் பாரம்பரியத்தின் நிமித்தம் தமிழ் மக்களுக்கு எதிரான நடைமுறைகளையே அரசியல் அர்த்தத்தில் சிங்கள மக்கள் பின்பற்றுகின்றனர்.

அதன்படி தமிழினத்தை அனைத்து வழி முறைகளையும் பின்பற்றி அழிப்பதுதான் சிங்கள இனத்தின் விடுதலைக்கும், வாழ்விற்குமான ஒரே வழியென்ற எண்ணம் வேரூன்றியுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதுதான் சிங்கள பௌத்த அமைப்புக்களினதும், ஊடகங்களினதும், அரசியல் தலைவர்களினதும் பணியாகும். 

ஆதலாற்தான் முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக வகைதொகையின்றி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக கண்ணீர் சிந்த, அனுதாபம் தெரிவிக்க எந்தொரு சிங்கள நீதிமானாலும் முடியவில்லை.

மேற்படி தாய்மார் தங்கள் இதயங்களில் நெருப்பென துயரங்களை சுமக்கிறார்கள், தண்ணீராலன்றி கண்ணீரால் தமது முகங்களை கழுவுகிறார்கள்.

ஒரு சமூகத்தில் அநீதி நிகழும் போது அடிப்படையில் நீதியின்பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், சமூக நல்லுணர்வு கொண்டவர்கள் முதன்மையாய் போர்க்களம் புகுவது இயல்பு. இத்தகைய மாந்தர்களை இலக்கு வைத்து எதிரி தனது அழிப்புக்களைத் தொடங்குவதே நடைமுறை.

ஓர் இனத்தை வாள்கொண்டு பூண்டோடு அழிப்பது இலகுவான காரியமல்ல. ஆதலால் இன அழிப்பாளர்கள் Structural Genocide ஐ அதற்கான மூலோபாயமாகக் கொள்வர்.

உதாரணத்திற்கு ஆயிரக்கணக்கான மக்களை கும்பல் கும்பலாக அழிப்பதைவிட அந்த மக்கள் மத்தியிலுள்ள குடும்பங்களுக்கான உழைப்பாளிகளை (Bread winners) தேர்ந்தெடுத்து கொல்வதன் மூலம் அந்த குடும்பம் பொருளாதார அர்த்தத்தில் உழைப்பாளியற்று சீரழியும்.

கலாச்சார அர்த்தத்தில் அப்படுகொலையின் வாயிலாக பெண் விதவையாக நேரும் போது அது சமூக சீரழிவுகளுக்கும் வழிவகுத்து இன அழிப்பை துரிதப்படுத்தும்.

இவ்வகையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் 90,000 விதவைகளும் Structural Genocide திட்டத்தின் ஓர் அங்கமாகும். இது பெரிதும் இராணுவ-பொலீஸ் கட்டுபாட்டைக் கொண்ட கிழக்கிலேயே பெரிதும் நிகழ்ந்தது. இதிலும் துயரம், சுமை, பழிச்சொல் என்பன தாய்மார் பக்கமே சேர்கின்றன.

முள்ளிவாய்க்கால் பெருந்துயரின் பின்பு தமிழ்த் தலைவர்கள் தமக்கு விமோசனம் அளிப்பார்கள் என்று தமிழ் மக்கள் நம்பியதற்கு மாறாக தமிழ்த் தலைவர்களையே தமது Structural Genocide திட்டத்தின் ஓர் அங்கமாக்கி தமது இன அழிப்பை முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டம் சிங்களத் தலைவர்களின் கையில் நடைமுறையாய் காணப்படுகிறது.

சிந்திய இரத்தத்தையும், படும் துயரத்தையும் தமிழ் மக்கள் தமது விமோசனத்திற்கு முதலீடாக்குவதற்குப் பதிலாக, அவற்றை தமிழ்த் தலைவர்கள் தமது பதவி மற்றும் பணந்தேடும் நலன்களுக்கான கருவிகளாக ஆக்குவதற்கேற்ற அரசியலை நல்லாட்சி அரசாங்கம் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.

அரசியலை அதன் சராம்சத்தில் பார்க்க வேண்டும்; அதனை வெளிப்பக்கமாக அன்றி உட்பக்கமாய் புரிந்து கொள்ள வேண்டும். இதன்படி நல்லாட்சி அரசாங்கத்தின் உள்ளடக்கத்தையும், தமிழ் மக்களின் அரசியல் சம்பந்தமாக அவர்கள் கொண்டிருக்கும் வீதி வரைபடத்தையும் (Road Map) தெளிவாக அடையாளங்காணாமல் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பீடு செய்ய முடியாது.

வீதி வரைபடத்தின் முதலாவது அங்கம் இப்படித்தான் அமைகிறது. அதாவது சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாகவும் உள்ளன அவை இரண்டாகவும் உள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை மேம்படுத்த அவை ஒன்றாக உள்ளன. அவை தங்களுக்கு ஏற்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை மற்றும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் ஒன்றாக உள்ளன.

அதேவேளை தமிழ் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வுகள் என்று வரும்பொழுது அவை இரண்டாக உள்ளன. இது உலக அரங்கில் இதுவரை முன்னுதாரணமற்ற ஒரு வினோதமான சேர்கையாகும்.

அத்துடன் தமிழ்த் தலைவர்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு இந்த சேர்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்களை ஏதோ ஒருவகையில் தம் பக்கம் வைத்திருப்பதன் மூலம் தமது அரசியல் சித்துவிளையாட்டை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகரமாக நிறைவேற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

ஆனால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலில் அதிதிறமையான அரசியல் நிபுணத்துவத்துடன் இதனைக் கையாளவேண்டிய அவசியம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. 

ஒரு கட்சி ஆதரிக்கும் போது அதனை இன்னொரு கட்சி எதிர்ப்பதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அழித்தொழிக்கும் பொறிமுறையை சிங்கள அரசியல் அதுவரை கொண்டிருந்தது.

ஆனால் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய அசாதாரண சூழலானது இருகட்சிகளும் ஒன்றிணைவதன் மூலம் அதனை எதிர்கொள்வதற்கான சிந்தனையை ஏற்படுத்தியது. இந்த வகையில் இருகட்சிகளும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட ஆட்சிப்

பொறியமைப்பில் தமிழ்த் தலைமையை ஓர் அங்கமாக்கினர். தமிழ்த் தலைவர்களை எழுமாத்திரத்தில் கையாண்டுவந்த கடந்தகால அரசியலுக்குப் பதிலாக அதிநிபுணத்துவம் மிக்க திட்டமிடலின் கீழ் தமிழ்த் தலைமையை தமது அரச இயந்திர பொறியமைப்பில் ஒரு பாகமாக்கினர்.

தமிழின அழிப்பிற்கான Structural Genocide ல் தமிழ்த் தலைமையை மிகப் புத்திபூர்வமான முறையில் ஒரு பங்காளியாக்கினர். அதனை வைத்துக் கொண்டு சர்வதேச அரங்கில் போர்க்குற்ற விசாரணை என்ற மிகப்பெரும் இடையூறைத் தாண்டுவதில் வெற்றிகரமாக முன்னெறினர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மே மாதம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணை குழுவின் பரிந்துரைகளை தம்மால் நடைமுறைப்படுத்த முடியாது என்று ஆரம்பத்திலேயே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல்ஹுசைனிடம் உறுதிபடக் கூறிவிட்டோம் என்று பேசியபோது நாடாளுமன்றத்திற்கு உள்ளே எந்தொரு தமிழ்த் தலைவர்களும் அதனை கேள்விக்குள்ளாக்கவும் இல்லை, ஆட்சேபிக்கவும் இல்லை.

அப்படியே மே மாதம் இறுதிவாரத்தில் (21ஆம் தேதி) போர்க்குற்ற விசாரணைக்க ஒருபோதும் இடமளியோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில் அங்கு எந்தொரு தமிழ்த் தலைவரும் அதனை ஆட்சேபிக்கவில்லை.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஆளும் கட்சி ஆதரிக்க எதிர்கட்சி அதனை எதிர்ப்பது என்ற சூத்திரத்தின் அடிப்படையில் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக செயற்பட்ட அரசியல் சித்துவிளையாட்டின் உச்சமாக இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தமக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ளும் பொறியமைப்பில் தமிழ்த் தலைமையையும் ஓர் அங்கமாக்கியதன் வெற்றியை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அரங்கேற்றியதில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்தில் காட்சிப் படுத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் அதில் வெற்றியீட்டியுள்ளனர் என்பதை மேற்போர்ந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.

முன்னைய காலங்களில் டி.எஸ்.செனநாயக, ஜே.ஆர். ஜெவர்த்தன போன்ற சிங்கள ஆட்சியாளர்கள் உதிரியாக நின்று தமிழ்த் தலைவர்களை தம்வயப்படுத்தினர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அப்படியான ஓர் உதிரி நிலையையும் தாண்டி உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிபுணத்துவத்துடனும், உதவியுடனும் தமிழ்த் தலைமையை தம்பக்கம் வைத்துக் கொண்டு அரசியலை அரங்கேற்றவல்ல ஒரு நிறுவன வகைப்பட்ட நிபுணத்துவத்தை சிங்கள அரசியல் அடைந்துள்ளது.

இந்த அரசியல் வீதிவரைபடமும் அதற்கான பொறியமைப்பும் பின்வருமாறு படிக்கட்டுக்களாய் அமைந்துள்ளது. முதலாவதாக இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதும், அதேவேளை அவை இரண்டாக இருப்பதுமான கட்டமைப்பு.

இரண்டாவதாக அதற்காக தமிழ்த் தலைமையை தம் பக்கம் வென்றெடுத்து அவர்களின் மூலமாக தமக்கு ஏற்பட்ட இடர்களை நீக்குவது.

மூன்றாவதாக தமிழ்த் தலைவர்களை இரண்டாகப் பிளந்து மோதவிடுவதன் மூலம் தமது இன அழிப்பிற்கான இலக்கை ஈட்டுவது.

ஏதிரியை வென்றெடுத்தல் என்ற “Win Over” தந்திரத்தின் மூலம் முதற்கட்ட வெற்றியை ஈட்டிக்கொண்டு எதிரியை பிரித்தாளுதல் “Divide and Rule” தந்திரத்தின் கீழ் தமிழ்த் தலைவர்களை இரண்டாக்கி மோதவிடுதல், தமிழ் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவை வளர்த்தல் என்பதை இன்னொரு அங்கமாகவும் கொண்டு மிகத் திறம்பட இந்த வீதி வரைபடம் வரையப்பட்டு அதன் அடிப்படையில் “நல்லாட்சி அரசாங்கம்” என்ற அரசியல் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ்த் தலைவர்களை கையாள்வதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலை நிர்மூலமாக்கி இன ஒடுக்குமுறையை முன்னேற்றுவதும், தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை கட்டியெழுப்பி தமது இன அழிப்பு அரசியலை முன்னேற்றுவது என்ற மிக நேர்த்தியான அரசியல் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் வகுத்துக் கொண்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் அறுவடைகளை பார்க்கும் போது சிங்களத் தலைவர்கள் தமது திறமையையும் வெற்றியையும் நிரூபித்துள்ளனர்.

தமிழ்த் தலைவர்கள் தமது இயலாமையையும், தோல்விகளையும் தோளில் சுமந்த வண்ணம் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்றவாறு தமது மீசைகளை முறுக்குகின்றனர்.

சர்வதேச தளத்திலும், உள்நாட்டுத் தளத்திலும் போர்க்குற்ற விசாரணைக்கு எதிரான வெற்றியை ஈட்டியுள்ளதுடன் சிங்கள அரசுக்கு உலக அரங்கில் ஏற்பட்டிந்த நெருக்கடிகளைத் தாண்டி சர்வதேச ஆதரவையும், உதவிகளையும் பெறும் நிலையை அடைந்துவிட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற தடையையும் வெற்றிகரமாக தாண்டிவருகின்றனர். தமிழ் மக்களின் அரசியலுக்கான முதலீடாய் எதிர்மறை அர்த்தத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், காணாமல் போனோர் விவகாரமும் காணப்பட்டன.

ஆனால் இதனை முதலீடாக ஆக்கவிடாமல் தமிழ்த் தலைவர்களை அணைத்து இவற்றை அடி ஆழத்தில் புதைத்துவிடும் அரசியலில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒருவர் என்ன பேசுகின்றார் என்பதல்ல முக்கியம் அவரது செயல் யாருக்கு சேவை செய்கின்றது என்பதே முக்கியம். இதன்படி தம் எதிரிகளான தமிழ் மக்களின் தலைவர்களைத் தமக்கு சேவகர்களாக்கும் வித்தையை சிங்களத் தலைவர்கள் திறம்பட நிறைவேற்றியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனபடுகொலையின் வாயிலாகப் பெற்ற இராணுவ வெற்றி என்பது தமிழினத்தை தொடர்ந்து அழிப்பதற்கான ஒரு அனுமதிச் சீட்டே (License) தவிர அது சமாதானத்திற்கான ஏற்பாடல்ல.

அதன்படி இராணுவ வெற்றியின் நீட்சியாக தமிழ் மண்ணை முற்றிலும் இராணுவ மயமாக்கும் அரசியல் வீதி வரைபடம் திட்டமிடப்பட்டது.

இராணுவம் துப்பாக்கியால் சுடுவது மட்டும் இராணுவ நடவடிக்கையல்ல, தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் இராணுவ இருப்பே ஒரு இராணுவ நடவடிக்கைதான்.

இலங்கை இராணுவம் வெளிநாடுகளுடன் போரிடுவதற்காக கட்டமைக்கப்பட்டதல்ல அது தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. இத்தகைய தமிழின எதிர்ப்பு உணர்வு மிக்க இராணுவத்தின் பிரசன்னமானது தமிழ் மக்களின் ஆக்கத் திறன் அனைத்தையும் இயல்பாகவே அழித்துவிடவல்லது.

இராணுவத்தின் இருப்பினால் ஏற்படும் ஒரு மௌனத் தோற்றம் மட்டுமே மக்களின் ஆக்கத்திறனை அழிப்பிற்குப் போதுமானது. ஆக்கத்திறன் அழிப்பே ஓர் இனப்படுகொலையாகும்.

தமிழர் பிரச்சனை பொறுத்து அதில் இராணுவத்தை தன்னியல்பான ஓர் அங்கமாக சிங்களத் தலைவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு அரசியல் தீர்மானத்திற்கு பின்னாலும் இராணுவத்தின் அனுமதி வேண்டு என்பது இலங்கையின் அரசியலாகிவிட்டது,

அதாவது பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இராணுவம் முடிவெடுக்கும், அதை இராணுவத்தைக் கேட்டே செய்யலாம் என்ற நடைமுறையை நல்லாட்சி அரசாங்கம் ஒரு விதியாக ஆக்கி அதனை அப்பட்டமாக கடைபிடித்து வருகிறது. இதன்படி தமிழ் மண் தெளிவாக இராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளது.

இரு கட்சிகள் ஒன்றாவும், இரண்டாகவும் இருக்கும் நிலை. சுயேட்சையான இராணுவ அரசியல், பௌத்த மதநிறுவன அரசியல், சிங்கள ஊடகங்கள், தமிழ்த் தலைமையை அணைத்து வைத்திருத்தல் என்னும் அனைத்தையும் ஒன்றிணைத்த வகையில் தமிழினத்திற்கு எதிரான நல்லாட்சி அரசாங்க கட்டமைப்பு விளங்குகிறது.

இதற்கு வெளிநாட்டு சக்திகளும் துணையாக்கப்பட்ட வகையில் திறமையுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் நிர்வாக அதிகாரிகள் விடயத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கத்திற்கான நிர்வாக வழிமுறை என்ற நிலையில் தமிழினத்திற்கு எதிரான நிர்வாக ஏற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அது நல்லிக்கணத்திற்கான ஏற்பாடல்ல சிங்கள மயமாக்கலுக்கான ஏற்பாடாகும். அதில் காணப்படும் ஆபத்துக்களையும் அநீதிகளையும் சுட்டிக் காட்டினால் அது

நிர்வாக இயந்திரத்தில் ஏற்படக்கூடிய இயல்பான தவறுகளேதவிர திட்டமிடப்பட்ட பிழைகள் அல்ல என்று பதிலளிப்பர்.

கூடவே நிர்வாக முறைமையில் ஏற்படவல்ல ஒரு சிவப்பு நாடா ( Red-tapism ) தவறு என்று சாக்குப் போக்கை சொல்லி சிங்கள மயமாக்கலை முன்னேற்றிவிடுவர்.

தமிழர்களை அணைத்து தமிழர்களை அழிக்கும் அரசியலின் உச்சக்கட்டமாக தமிழ்த் தலைமைகளை இரண்டாகப் பிளந்து மோதவிடும் அரசியலை தற்போது வடமாகாணசபை அரசியலில் இன்றைய அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது என்பது வெளிபபடையாகத் தெரிகிறது.

சிங்கள தமிழ் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக தமிழ் தமிழ் மோதலை ஏற்படுத்தி சிங்கள மேலாதிக்கத்திற்கான இன அழிப்புப் பயணத்தை மேம்படுத்துவது என்பது வெற்றிகரமாக முன்னேறும் காலகட்டம் இதுவாகும். இது இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

இறைமையுடன் கூடிய வடக்கு-கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறையிலான தீர்வு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் தமிழ் மோதலினால் கடந்து செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

அதற்கான அரசியலே வடமாகாணசபை அரசியலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆதலாற்தான் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் “தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணாகச் செயற்பட மாட்டேன்” என்று தன் நிலையை பிரகடனப்படுத்தும் அவசியம் உருவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர்க்குற்றத்திற்கான நீதியின்றி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியின்றி தமிழ் மக்களுக்கான நீதி என்ற ஒன்று இருக்க முடியாது.

கம்பராமாயணத்தில் கைகேயிக்கு எடுத்துரைப்பது போல மந்தரையின் வாயால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கூறிய வார்த்தைகள் இங்கு கவனத்திற்குரியவை. அதாவது சந்திரனை இராகு-கேது பாம்புகள் கவ்வும் போது அதனை உணராது சந்திரனின் மறுபக்கம் ஒளிவிடுவது போல உன்னை கேடு கவ்வும் போதும் நீ அதை உணராது சந்திரனின் ஒளிகுன்றாப் பக்கம் போல நீ காணப்படுகிறாய் என்று அந்த கவிதை நீள்கிறது.

அதாவது

“அணங்கு வாள் விட அரா

அணுகும் எல்லையும்

குணம் கெடாது ஒளி விரி

குளிர் வெண் திங்கள் போல்

பிணங்கு வான் பேர் இடர்

பிணிக்க நண்ணவும்,

உணங்குவாய் அல்லை, நீ

உறங்குவாய்?”

என்று கூறப்பட்டதற்கு ஒப்பாக தமிழ் மக்களும் தமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பேரிடரை உணராது இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் பச்சை இரத்தம் இன்னும் உறையாத நிலையிலும் தாய்மாரினது இதயம்

சிறிதும் ஆறாத நிலையிலும், மாறா வடுவுடனும், தீராத துயரத்துடனும் தமிழ் மக்கள் காணப்படும் நிலையிலும் இரத்தத்தை பணமாக்க எப்படித் தமிழ்த் தலைவர்கள் துணிகிறார்கள் என்பதையோ இதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வருகிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியவில்லை.

உரிமைகளை மீட்க வந்த மீட்பர்களே, மக்களையும், உரிமைகளையும் மாயக்கல்வல்லவர்களாய் இந்த யூகம் எப்படி மாறியது என்ற கேள்வியே இங்கு ஆழமானது.

இந்தக் கேள்விக்கு தமிழ்ப் பண்பாட்டின் பேரால் எத்தகைய பதிலை தமிழ் மக்கள் காணப்போகிறார்கள் என்பதே அடுத்து எழும் பிரதான கேள்வியாகும்.

http://www.tamilwin.com/articles/01/150864?ref=rightsidebar-article

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.