Jump to content

கடனில் முளைத்த பூ - கவிதை


Recommended Posts

கடனில் முளைத்த பூ - கவிதை

கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன்

 

சில்லறை மீன் வியாபாரி
விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான்
கூடையிலிருந்து சிதறிய மீன்கள்
அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது.
பாவம் வியாபாரிதான்
காற்று குடித்து மூர்ச்சையானான்...
தவிர
வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள்
நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி
கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு.

***

தையல் எந்திரத்திற்காக
வாங்கிய கடனால்
உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது.
நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில்
அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள்.

p98a.jpg

ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால்
மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது.

என்னைத்தேடி வனம்புகும்
நண்பனின் பஞ்சரான சைக்கிளே...
தயவுசெய்து உன் முதலாளியிடம் சொல்
நான் சாகவுமில்லை
என் பெயர் ராமசாமியுமில்லை.

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.