Jump to content

அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா?


Recommended Posts

அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம்
உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்;
தினகரனா... பழனிசாமியா?
 
 
 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

அ.தி.மு.க., ஆட்டத்தில்,அடுத்த,மாதம்,உச்சகட்டம்!,ஜெயிக்க போவது யார், தினகரனா,பழனிசாமியா?

அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது.
 

அதிர்ச்சி


முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த, முடிவு செய்து

உள்ளனர். இது, தினகரனிடம் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.அவர் கட்சியும், ஆட்சியும், தன் கட்டுப்பாட் டில் இருக்க வேண்டும் என, எண்ணு கிறார். அவருக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்த னர். அவர்களைக் கொண்டு, முதல்வர் பழனி சாமியை மிரட்டி பார்த்தார். ஆனால், அவர் அசைந்து கொடுக்கவில்லை.

யாராக இருந்தாலும், ஆட்சியை கவிழ்க்க மாட்டார் கள் என்ற நம்பிக்கை உள்ளதால், முதல்வர் தனித்து செயல்பட முடிவு செய்து விட்டார். இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழா ஆகியவற்றுக்கு, தினகரனை அழைக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்; அதை, முதல்வர் ஏற்றுக் கொள்ளவில்லை.
 

எதிர்பார்ப்பு


இரண்டு நிகழ்ச்சிக்கும், தினகரன் அழைக்கப்பட வில்லை.தினகரனுக்கு ஆதரவாக பேசிய எம்.எல். ஏ.,க்களுக்கு, முதல்வர் அணியை சேர்ந்த, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். முதல்வரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள், அவர் பக்கம் சாய்ந்து வருகின்றனர். தினகரனை சந்தித்த, எம்.எல்.ஏ.,க் க ளையும்,தங்கள் பக்கம் இழுக்கும் பணியில்,

 

முதல்வர்மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இதை தவிர்க்க, ஆக., 5 முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல, தினகரன் முடிவு செய்து உள்ளார்.

அதைப் பற்றி கவலைப்படாமல், கட்சியை கைப்பற்றும் பணியில், முதல்வர் அணி மும் முரமாக இறங்கி உள்ளது.சட்டசபைகூட்ட தொடர் முடிந்த பின், இரு பிரிவினருக்கும் இடையிலான மோதல், உச்ச கட்டத்தை எட்டும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம், யாருக்கு சாதகமாக முடியும் என்ற எதிர்பார்ப்புடன், அ.தி.மு.க.,வினர், அமைதி யாக வேடிக்கை பார்க்கின்றனர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1802562

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.