Jump to content

ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்!


Recommended Posts

ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்!

 
 

இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மேற்கிந்திய தீவுகள் கோலி தோனி

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 78 ரன்களும், ரஹானே 72 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து 252 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 38.1 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் முகமது 40 ரன்களும், பாவல் 30  ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக, 78 ரன்கள் குவித்த தோனி தேர்வு செய்யப்பட்டார்.

http://www.vikatan.com/news/sports/93952-west-indies-falls-off-over-ashwin-kuldeeps-spin-attack.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.