Jump to content

திரை விமர்சனம் : இவன் தந்திரன்


Recommended Posts

திரை விமர்சனம் : இவன் தந்திரன்

 
   
திரைப்படம் இவன் தந்திரன்
 
நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி, சூப்பர் சுப்பராயன்
 
இசை எஸ்.எஸ் தமன்
 
இயக்கம்; ஒளிப்பதிவு ஆர். கண்ணன், பிரசன்ன குமார்

சில வாரங்களுக்கு முன்பாக கௌதம் நடித்து வெளிவந்த ரங்கூன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்த படமும் வெளியாகியிருக்கிறது. ரங்கூன் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இந்தப் படத்திலும் தக்கவைத்திருக்கிறார் அவர்.

இவன் தந்திரன்

எஞ்சினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களை விற்கும் கடையை நடத்துகிறார்கள் சக்தியும் (கௌதம் கார்த்திக்) அவனது நண்பன் பாலாஜியும் (ஆர்.ஜே. பாலாஜி).

மனித வளத் துறை அமைச்சரான தேவராஜின் (சூப்பர் சுப்பராயன்) வீட்டிற்கு சிசிடிவி பொருத்தியதற்கான பணத்தை கேட்டு, அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், பல பொறியியல் கல்லூரிகளில் வசதி போதவில்லை என்று மூடும் தேவராஜ், லஞ்சம் வாங்கிக்கொண்டு அவற்றை திறக்க உத்தரவிடுகிறார்.

செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுவதால், அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக நோட்டு இருப்பதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

இதனால், மந்திரி பதவியை பறிகொடுக்கும் தேவராஜ், இதைச் செய்தவனைத் தேட ஆரம்பிக்கிறார்.

திரை விமர்சனம்:இவன் தந்திரன்

பேய்கள் உலாவும் கோலிவுட்டில், திடீரென இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கதாநாயகன், பெரிய கம்ப்யூட்டர் நிபுணர் என்பதை நிறுவுவதற்கான துவக்கக் காட்சிகளும் அதைத் தொடரும் பாடலும் சற்று அலுப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால், கதையில் வில்லன் அறிமுகமானதும் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.

அதன் பிறகு முடியும்வரை, விறுவிறுப்பான த்ரில்லராகவே நகர்கிறது படம்.

ஆனால், பல காட்சிகளை உருவாக்கியிருப்பதிலும் படமாக்கியிருப்பதிலும் பெரும் அலட்சியம் தென்படுகிறது.

தொழில் நுட்பம் சார்ந்த காட்சிகளில் காதுகளில் சற்று அதிகமாகவே பூச்சுற்றுகிறார்களோ என்று தோன்றவைக்கும் இடங்களும் இருக்கின்றன.

திரை விமர்சனம்:இவன் தந்திரன்

சாலையில் பொருத்தப்படும் சிறிய கருவி, கடந்து செல்லும் வாகனங்களையெல்லாம் ஸ்கேன் செய்வதாக காட்டுவது, படத்தின் இறுதியில் கதாநாயகனுடன் சேர்ந்து செயல்படும் காவல்துறை, நாயகன் மாட்டிக்கொள்ளும்போது வெகுநேரத்திற்கு வராமலேயே இருப்பது என பல இடங்கள் உறுத்துகின்றன.

படத்தின் துவக்கத்தில் வரும் பாடல், ஆர்.ஜே. பாலாஜியின் பொறியியல் கல்லூரி குறித்த விரிவுரைகள் போன்றவையும் படத்தின் ஓட்டத்தைத் தடைசெய்கின்றன.

 

கௌதம் கார்த்திக்கு ஆறாவது படம் இது. முதல் படத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார். எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு.

நாயகி ஷ்ரத்தா தாஸ், கௌதமைவிட மூத்தவரைப் போல இருக்கிறார் என்பதைத் தவிர, வேறு குறை சொல்லமுடியாது.

ஹீரோவின் நண்பன் என்பதால், ஆர்.ஜே. பாலாஜிக்கு படம் முழுக்க பேசிக்கொண்டேயிருக்கும் பணி.

திரை விமர்சனம்:இவன் தந்திரன்

இவர்கள் எல்லோரையும்விட படத்தில் சட்டென ஈர்ப்பவர், வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன். பல தருணங்களில் மிரள வைக்கிறார். படத்தின் சாதகமான அம்சங்களில் இவரது தேர்வும் ஒன்று.

ஆக, கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா, இயக்குனர் ஆர். கண்ணன் ஆகிய எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40453361

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: இவன் தந்திரன்

 

 
 
 
ivan_3181659f.jpg
 
 
 

பொறியியல் படிப்பை பாதியி லேயே நிறுத்திய இரு இளை ஞர்கள், அதே பொறியியல் படிப்பு சார்ந்து நடக்கும் ஊழலை தந்திரமாக கண்டுபிடிப்பதுதான், ‘இவன் தந்திரன்’.

கவுதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் சென்னையின் ரிச்சி தெரு வில் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கிறார்கள். இருவரும் பொறியியல் கல்வியை பாதியில் கைவிட்டவர்கள். கவுதம் கார்த்திக்கிடம் பொறியியல் கல்லூரி மாணவி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு லேப்டாப் வாங்குகிறார். சில நாட் களிலேயே அது பழுதாவதால் திரும்பவும் அவரிடம் வந்து புது லேப்டாப் வேண்டுமென்று சண்டை பிடிக்கிறார். பின்னர் அந்த மோதல் காதலாக மாறுகிறது.

இதற்கிடையே, கல்வித்துறை அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கவுதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் சிசிடிவி கேரமா பொருத்திவிட்டு தாங்கள் செய்த வேலைக்கான பணத்தை கேட்கிறார்கள். அவர்கள் பணத்தை தராமல் அலைக்கழிக்கிறார்கள். ஒருமுறை பணத்துக்காக அவர்கள் அங்கே செல்லும் போது, சூப்பர் சுப்பராயன் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்குவதையும், அரசியலில் இருந்துகொண்டு பெரிய அளவில் மோசடியில் ஈடுபடுவதையும் தெரிந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவரை எதிர்த்து செயல்பட துணிகிறார் கள். அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் என்ன? கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத் காதல் என்ன ஆனது என்பதை நோக்கி படம் செல்கிறது.

அரசியல்வாதிகளிடம் விலைபோகும் கல்லூரி நிர்வாகம், அதன் விளைவாக கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர் களின் நிலை, கல்வி சார்ந்து நடக்கும் லஞ்ச பேரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். ரூபாய் நோட் டுக்குள் ‘சிப்’பை வைத்து பணத்தை பின்தொடர்வது, சாலையில் ஸ்கேனர் வைத்து வாகனத்தை பின்தொடர்வது என தொழில்நுட்பங்களை கையாண்ட ஐடியாக்கள் சுவாரஸ்யம்.

ஆனாலும் படம் முழுக்க பல்வேறு காட்சிகளை படமாக்கிய விதத்தில் இயக் குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம். கவுதம் கார்த்திக் டெக்னாலஜி யில் கில்லாடி என புரியவைப்பதற்கு புகுத்தப்பட்ட ஆரம்ப காட்சிகள், அதை தொடர்ந்து வரும் பாடல், செல்போன் கண்டுபிடிப்பு போன்றவை கதைக்கு தடங்கலாக நிற்கின்றன.

கவுதம் கார்த்தின் நடிப்பில் முன்னேற் றம் தெரிகிறது. துறுதுறுப்பான பாத்தி ரத்தை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார். நாயகிக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் வசதியில்லாமல் தவிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவியாக நெகிழ்ச்சியடைய வைக்கிறார்.

இன்ஜினீயரிங் கல்லூரிகளை கலாய்ப்பது, ஐடி வேலையை ஆதரிப் பது, ஓலா டாக்ஸி, கூவத்தூர் ரெசார்ட் என ஆர்.ஜே.பாலாஜி அடிக்கும் கமெண்ட் சிரிக்க வைக்கிறது. வழக்க மான காட்சிகளால் மெதுவாக‌ நகரும் படத்துக்கு பெரும் பலம் வில்லன் சூப்பர் சுப்பராயன். அவரின் தோற்றமும், மிரட்டும் பார்வையும் இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்துகிறது.

எஸ்.எஸ்.தமன் இசையில் 2 பாடல் கள் கதைக்கு தேவைப்படாத நிலையில், பின்னணி இசை அந்த குறையை போக்கு கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு இரவையும், கதையில் வெளிப்படும் தொழில்நுட்ப அம்சங்களையும் அளவாக பதிவு செய்திருக்கிறது.

மிக முக்கிய பிரச்சினையை கையி லெடுத்த இயக்குநர் ஆர்.கண்ணன், திரைக்கதையில் இன்னும் விறுவிறு தந்திரம் கையாண்டிருந்தால் தந்திரன் மனதில் நின்றிருப்பான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-இவன்-தந்திரன்/article9745174.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.